T20 WC 2022: இறுதிப் போட்டியில் பாகிஸ்தான்!

t20wc - 2026

உலகக் கோப்பை டி20: முதல் அரையிறுதி ஆட்டம் – 09.11.2022
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று
இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது

டி20 உலகக் கோப்பையின் முதல் அரையிறுதி ஆட்டம் நியூசிலாந்து அணிக்கும் பாகிஸ்தான் அணிக்கும் இடையே இன்று சிட்னி மைதானத்தில் நடைபெற்றது. இதில் நியூசிலாந்து அணியை (152/4, மிட்சல் 53, கேன் வில்லியம்சன் 46, கான்வே 21, நீஷம் 16, ஷாஹின் ஷா அஃப்ரிடி 2/24) பாகிஸ்தான் அணி (19.1 ஓவரில் மூன்று விக்கட் இழப்பிற்கு 153 ரன், ரிஸ்வான் 57, பாபர் ஆசம் 53, ஹாரிஸ் 30, போல்ட் 2/33) ஏழு விக்கட் வித்தியாசத்தில் வென்றது.

பூவா தலையா வென்ற நியூசிலாந்து அணி முதலில் மட்டையாடத் தீர்மானித்தது. இந்த உலகக் கோப்பை போட்டிகளில் தாங்கள் வெற்றி பெற்ற ஆட்டங்களில் எல்லாம் நல்ல தரமான வெற்றியைப் பெற்ற நியூசிலாந்து அணி இன்று ஒரு சாம்பியன் அணி போல ஆடவில்லை. அந்த அணியின் பேட்டர்கள் ரன் ரேட்டை அதிகப்படுத்த முடியவில்லை.

முதல் ஓவரிலேயே ஃபின் ஆலன் ஆட்டமிழந்தார். பவர்ப்ளே முடியும்போது கான்வே ஒரு அருமையான த்ரோவால் ரன் அவுட் ஆனார். வில்லியம்சன் (42 பந்துகளில் 46 ரன்), மிட்சல் (35 பந்துகளில் 53 ரன்) இருவரும் நன்றாக ஆடினர் ஆனால் பாகிஸ்தான் அணி பந்து வீச்சாளர்கள் அவர்களை அதிகம் ரன் அடிக்கவிடாமல் பார்த்துக்கொண்டனர்.

20 ஓவர் முடிவில் நியூசிலாந்து அணி 4 விக்கட் இழப்பிற்கு 152 ரன் எடுத்தது. 152 ரன் என்பது ஒரு எளிய இலக்கு எனச் சொல்ல முடியாது. ஆனால் நியூசிலாந்து அணியின் ஃபீல்டிங் இன்று மிக மிக மோசமாக இருந்தது. முதல் ஓவரில் பாபர் ஆசமின் கேட்ச் பிடிக்கப்படவில்லை. பவர்ப்ளேயில் பாகிஸ்தான் அணி 55 ரன் எடுத்தது.

கடைசி நாலு ஓவர்களில் சில விக்கட்டுகள் விழுந்தாலும் பாகிஸ்தான் அணி பதற்றம் இல்லாமல் ஆடி 19.1 ஓவரில் இலக்கை எட்டியது. நாளை அடிலெய்ட் மைதானத்தில் இந்தியா இங்கிலாந்து அணிகள் மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் விளையாட உள்ளன. நாளை அடிலெய்டில் மழைக்கு வாய்ப்பில்லை. இந்திய அணியின் அணித்தலைவர் ரோஹித் ஷர்மா கையில் காயம் ஏற்பட்டதால் ஆடுவாரா என சந்தேகம் இருந்தது.

ஆனால் அவர் ஆடுவார் எனத் தகவல்கள் வருகின்றன. தினேஷ் கார்த்திக் விளையாடுவாரா அல்லது அவருக்குப் பதிலாக ரிஷப் பந்து விளையாடுவாரா என விவாதம் நடந்துகொண்டிருக்கிறது.

என்னுடைய கணிப்புப் படி தினேஷ் கார்த்திக் விளையாடுவார். இந்திய அணி வெற்றிபெற்று இறுப்போட்டியில் பாகிஸ்தானை எதிர்த்து விளையாடும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

Topics

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

மறு தேர்தல் ஆறு மாதத்திற்கு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் குடியரசுத் தலைவரின் பெயரில் கவர்னர் ஆட்சி செய்வார். இத்தகைய சூழ்நிலைகளில், ஆளுநர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories