IND Vs AUS 4th Test: டிராவில் முடிந்த போட்டி!

ind vs aus test series - 2026

இந்தியா ஆஸ்திரேலியா நான்காவது டெஸ்ட், அகமதாபாத், ஐந்தாம் நாள், 13.03.2023
–முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

அகமதாபாத்தில் நடக்கும் நான்காவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்க்ஸ் 167.2 ஓவர்கள் விளையாடி 480 ரன்னிற்கு ஆல் அவுட் (உஸ்மான் க்வாஜா 180, கிரீன் 114, மர்ஃபி 41, ஸ்மித் 38, நாதன் லியன் 34, ஹெட் 32, அஷ்வின் 6/91, ஷமி 2/134, ஜதேஜா 1/49, அக்சர் படேல் 1/47). இரண்டாவது இன்னிங்க்ஸில் 78.1 ஓவர் விளையாடி இரண்டு விக்கட் இழப்பிற்கு 175 ரன்னிற்கு ஆட்டத்தை நிறுத்திக்கொண்டது.

இந்திய அணி முதல் இன்னிங்க்ஸில் 178.5 ஓவர்கள் விளையாடி 571 ரன்னுக்கு ஆல் அவுட் (கோலி 186, கில் 128, அக்சர் படேல் 79, ஜதேஜா 44, புஜாரா 42, ரோஹித 35, லியன் 3/151, மர்பி 3/113, ஸ்டார்க் 1/97).

தங்கள் அணி தோற்றுப் போனதால் முதல் இரண்டு டெஸ்டுகளின் ஆட்டக்களத்தை ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்கள் பலர் குறை சொன்னார்கள். மூன்றாவது டெஸ்டில், இந்தூர் ஆட்டக்களமும் முதலிரண்டு மைதானங்களின் ஆட்டக்களம் போலத்தான் இருந்தது. இருப்பினும் ஆஸ்திரேலியா வென்றதால் பெரிய விமர்சனம் எழவில்லை. அகமதாபாத் ஆட்டக்களம் பந்துவீச்சாளர்களுக்கு எந்த வித உதவியும் செய்யவில்லை. இரண்டு அணிகளும் இன்னும் ஐந்து நாட்களுக்குக் கூட ஆடியிருப்பார்கள். அப்படி ஒரு உயிரற்ற ஆட்டக்களம். இதற்கு விமர்சகர்கள் என்ன சொல்லப் போகிறார்கள் எனத் தெரியவில்லை.

இன்று காலை முதல் மதியம் 1520 வரை விளையாடி ஆஸ்திரேலிய அணி இரண்டு விக்கட் இழப்பிற்கு 175 ரன் எடுத்து டிக்ளேர் செய்தது. இந்திய அணி தாங்கள் மேலும் ஆட விரும்பவில்லை எனத் தெரிவித்ததால் ஆட்டம் அப்போதே முடித்து வைக்கப்பட்டது. ஆட்டம் ட்ராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.
இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை வென்று பார்டர் கவாஸ்கர் கோப்பையை வென்றது. ஆட்ட நாயகனாக விராட் கோலி அறிவிக்கப்பட்டார். தொடர் நாயகன்களாக அஷ்வினும் ஜதேஜாவும் அறிவிக்கப்பட்டனர்.

இந்திய அணி இந்தப்போட்டியிலும் வென்றால் உலகக்கோப்பை டெஸ்ட் பொட்டியில் விளையாடத் தகுதி பெறும் என்ற நிலையில் இருந்தது. ஆஸ்திரேலிய அணி இதற்கு ஏற்கனவே தகுதி பெற்றுவிட்டது. ஆனால் மதியம் இரண்டு மணி போல நியூசிலாந்து இலங்கை அணிகளுக்கிடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றதாக செய்தி வந்துவிட்டது.

இலங்கை அணி வெற்றி பெற்றிருந்தால் இந்தியா உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்குச் செல்வதில் சந்தேகம் அடுத்த நியூசிலாந்து இலங்கை போட்டியின் முடிவு வரை நீடித்திருக்கும். ஆனால் இலங்கை இன்று தோற்றதால் இந்தியா இறுதிப் போட்டிக்குச் செல்கிறது.

இறுதிப் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் வருகின்ற ஜூன் 7ஆம் தேதி இந்திய நேரப்படி மதியம் 15:30க்குத் தொடங்கும். அதாவது ஐபிஎல் போட்டிகளின் ஃபைனல் முடிவடைந்த பிறகு போட்டி நடக்கும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories