சாம்பியன்ஸ் ட்ராபி; கோப்பையை வென்ற இந்திய அணி!

champions trophy india lift the cup - 2026

சாம்பியன்ஸ் ட்ராபி – இந்தியா-நியூசிலாந்து  இறுதி ஆட்டம் – 09.03.2025

இந்திய அணி கோப்பையை வென்றது

முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்

நியூசிலாந்து அணியை (50 ஓவர்களில் 251/7, டேரியல் மிட்சல் 63, ப்ரேஸ்வெல் 53, ரவின் ரச்சீந்திரா 37, கிளன் பிலிப்ஸ் 34, வருண் சக்ரவர்த்தி 2/45, குல்தீப் யாதவ் 2/40, ஷமி 1/74, ஜதேஜா 1/30) இந்திய அணி (49 ஓவர்களில் 254/6, ரோஹித் ஷர்மா 76, ஷ்ரேயாஸ் ஐயர் 48, கே.எல். ராகுல் ஆட்டமிழக்காமல் 34, ஷுப்மன் கில் 31, அக்சர் படேல் 29, ஹர்திக பாண்ட்யா 18, மிட்சல் சாண்ட்னர் 2/46, ப்ரேஸ்வெல் 2/28, ரவீந்திரா 1/47, ஜாமிசன் 1/24) 4 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

          இரண்டு அணிகளும் சிறப்பாக ஆடின. முதலில் மட்டையாடிய நியூசிலாந்து அணிக்கு விளையாடிய அனைத்து மட்டையாளர்களும் சிறப்பாக ஆடினர். முதல் 10 ஓவர்களில் அந்த அணி 64 ரன் எடுத்தது. ஆனால் அதன் பின்னர் இந்திய சுழல் பந்து வீச்சாளர்களின் பந்துவீச்சால் அதிரடியாக ஆடமுடியாமல் நியூசிலாந்து அணி வீரர்கள் தவித்தனர். வருண் சகரவர்த்தி (எகானமி ரன் ரேட் 4.5), குல்தீப் யாதவ் (4.0), அக்சர் படேல் (3.62), ரவீந்திர ஜதேஜா (3.0) என ரன் கொடுக்காமல் இந்த நால்வரும் வீசிய பந்துவீச்சால் நியுசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கட் இழப்பிற்கு 251 ரன் எடுத்தது.

          இரண்டாவதாக ஆடிய இந்திய அணிக்கு ரோஹித் ஷர்மா (76 ரன்) சிறப்பான தொடக்கம் தந்தார். ஷுப்மன் கில் அவருக்கு துணை நின்று ஆடினார். ஷுப்மன் கில் ஆட்டமிழந்த பந்தை கிளன் பிலிப்ஸ் மிக மிக அற்புதமாக கேட்ச் பிடித்தார். இந்த கேட்சைப் பிடிக்க அவருக்கு ரெஸ்பான்ஸ் டைம் 0.7 விநாடிகள் மட்டுமே இருந்தது. இருப்பினும் உயரப் பறந்த பந்தை ஒருகையால் அவர் கேட்ச் பிடித்த விதம் மிகவும் அருமையாக இருந்தது. கில் ஆட்டமிழந்த இரண்டாவது பந்தில் கோலி அவுட் ஆனார்.

பின்னர் ஆடிய ஷ்ரேயாஸ் ஐயர் (48 ரன்), அக்சர் படேல் (29 ரன்), கே.எல் ராகுல் (ஆட்டமிழக்காமல் 34 ரன்), ஹார்திக் பாண்ட்யா (18 ரன்), ரவீந்தர ஜதேஜா (9 ரன்) ஆகிய அனைவரும் சிறப்பாக ஆடினர்; ஆயினும் வெற்றிக்குத் தேவையான ரன்களை எட்டுமுன்னர் ஆட்டமிழந்தனர். இந்திய மட்டையாளர்கள் எட்டாம் இடத்தில் இறங்கும் ரவீந்த ஜதேஜா வரை உள்ளனர் என்பதால் ஒரு ஓவர் மீதியிருக்கும்போது 254 ரன்கள் அடித்து இந்திய அணி சாம்பியன் ட்ராபி கோப்பையைக் கைப்பற்றியது. 

          இன்றைய ஆட்டத்தில் ஆட்டநாயகனாக ரோஹித் ஷர்மா அறிவிக்கப்பட்டார். இந்த சாம்பியன்ஸ் ட்ராபியின் தொடர் நாயகனாக  ரச்சின் ரவீந்திரா அறிவிக்கப்பட்டார்.   

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

Topics

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

மறு தேர்தல் ஆறு மாதத்திற்கு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் குடியரசுத் தலைவரின் பெயரில் கவர்னர் ஆட்சி செய்வார். இத்தகைய சூழ்நிலைகளில், ஆளுநர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories