IPL 2025: கடைசி இடம் பிடிப்பதில் சென்னை, மும்பை அணிகளுக்கு இடையே போட்டியா?

ipl 2025 games - 2026

ஐ.பி.எல் 2025 – 30.03.2025
இன்று இரண்டு ஆட்டங்கள்

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

முதல் ஆட்டம் – ஹைதராபாத் vs டெல்லி

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை (18.4 ஓவர்களில் 163. அனிகேத் வர்மா 74, ஹென்றி கிளாசன் 32, ட்ராவிஸ் ஹெட் 22, மிட்சல் ஸ்டார்க் 5/35, குல்தீப் யாதவ் 3/22, மோஹித் ஷர்மா 1/25) டெல்லி கேபிடல்ஸ் அணி (ஓவர்களில் 166/3, டியு பிளேசிஸ் 50, ஜேக் ஃப்ரேசர் மெகர்க் 38, அபிஷேக போரல் ஆட்டமிழக்காமல் 34, கேல் ராகுல் 15, ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் ஆட்டமிழக்காமல் 21, சீஷன் அன்சாரி 3/42) 7 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

          பூவா தலையா வென்ற ஹைதராபாத் அணி முதலில் மட்டையாடத் தீர்மானித்தது. அந்த அணியின் தொடக்க வீரர் அபிஷேக ஷர்மா (1 ரன்) ஒரு மேசமான ரன் அவுட்டில் ஆட்டமிழந்தார். இல்லாத ஒரு ரன்னுக்கு ட்ராவிஸ் ஹெட் ஓட, அபிஷேக் தனது ஓட்டத்தில் வேகம் காட்டாததால் நிகம் வீசிய பந்து ஸ்டம்பில் நேராக அடித்ததால் ஆட்டமிழந்தார்.

மற்றொரு தொடக்க வீரரான ட்ராவிஸ் ஹெட் (12 பந்துகளில் 22 ரன், 4 ஃபோர்) அதற்கடுத்து வந்த இஷான் கிஷன்  (5 ரன்), நிதீஷ் குமார் ரெட்டி (பூஜ்யம் ரன்) என சன்ரைசர்ஸ் அணியின் வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து அணியின் ஸ்கோர் 37/4 என ஆகியது. அவர்களுக்குப் பின்னர் ஆட வந்த அனிகேத் வர்மா (41 பந்துகளில் 74 ரன், 5 ஃபோர், 6 சிக்சர்), ஹென்றி கிளாசன் (19 பந்துகளில் 32 ரன், 2 ஃபோர், 2 சிக்சர்) இருவரும் சிறப்பாக ஆடினர்.

அதற்குப் பிறகு ஆடவந்த அபினவ் மனோகர் (4 ரன்), பேட் கம்மின்ஸ் (2 ரன்), வியன் முல்டர் (9 ரன்), ஹர்ஷல் படேல் (5 ரன்) ஆகியோர் சிறப்பாக ஆடவில்லை. இதனால் ஹைதராபாத் அணி 18.4 ஓவர்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 163 ரன் மட்டுமே எடுத்தது.

          167 ரன் என்ற வெற்றி இலக்கை அடைய இரண்டாவதாக ஆடவந்த டெல்லி அணியின் தொடக்க வீரர்கள் ஜேக் ஃப்ரேசர் மெகர்க் (32 பந்துகளில் 38 ரன், 4 ஃபோர், 2 சிக்சர்), மற்றும் டியு பிளேசிஸ் (27 பந்துகளில் 50 ரன், 3 ஃபோர், 3 சிக்சர்) மூன்றாவதாகக் களமிறங்கிய அபிஷேக் போரல் (18 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 34 ரன், 2 ஃபோர், 2 சிக்சர்), கே.எல். ராகுல் (5 பந்துகளில் 15 ரன், 2 ஃபோர், 1 சிக்சர்), ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் (14 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 21 ரன்) ஆகியோர் அதிரடியாக ஆடி, 16 ஓவர்களில் 3 விக்கட் இழப்பிற்கு 166 ரன் எடுத்து அணிக்கு வெற்றியைப் பெற்றுத்தந்தனர். 

          அதிரடி பேட்டிங்க் அனி எனப் பெயர் பெற்றிருக்கும் சன்ரைசர்ஸ் அணியை இன்று டெல்லி அணி வென்றது அந்த அணிக்கு உற்சாகத்தை அளிக்கும்.

          டெல்லி அணியின் வேகப் பந்துவீச்சாளர் மிட்சல் ஸ்டார்க்  ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

இரண்டாவது ஆட்டம் – ராஜஸ்தான் vs சென்னை

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி (182/9, நிதீஷ் ராணா 81, ரியான் பராக் 37, சஞ்சு சாம்சன் 20, ஷிம்ரன் ஹெட்மயர் 19, கலீல் அகமது 2/38, நூர் அகமது 2/28, மதீஷா பதிரனா 2/28, அஷ்வின் 1/46, ஜதேஜா 1/10) சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியை ( 176/6, ருதுராஜ் கெய்க்வாட் 63, ரவீந்தர ஜதேஜா ஆட்டமிழக்காமல் 32, ராகுல் திரிபாதி 23, ஷிவம் துபே 18, தோனி 16, ஜாமி ஓவர்டன் ஆட்டமிழக்காமல் 11, வனிந்து ஹசரங்கா 4/35, ஆர்ச்சர் 1/13, சந்தீப் ஷர்மா 1/42) ஆறு ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

          பூவாதலையா வென்ற சென்னை அணி முதலில் பந்துவீசத்தீர்மானித்தது. ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர் யசஷ்வீ ஜெய்ஸ்வால் (4 ரன்) இன்றும் சோபிக்கவில்லை. மற்றொரு தொடக்க வீரரான சஞ்சு சாம்சன் (16 பந்துகளில் 20 ரன்) எட்டாவது ஓவரில் ஆட்டமிழந்தார். மூன்றாவதாகக் களமிறங்கிய நிதீஷ் ராணா (36 பந்துகளில் 81 ரன், 10 ஃபோர், 5 சிக்சர்) 12ஆவது ஓவர் வரை விளையாடினார்.

அவருக்குத் துணையாக அணித்தலைவர் ரியான் பராக் (28 பந்துகளில் 37 ரன், 2 ஃபோர், 2 சிக்சர்) 18ஆவது ஓவர் வரை விளையாடினார். ஆயினும் மற்ற வீரர்களான துருவ் ஜுரல் (3 ரன்), வனிந்து ஹசரங்கா (4 ரன்), ஷிம்ரன் ஹெட்மயர் (16 பந்துகளில் 19 ரன்), ஆர்ச்சர் (பூஜ்யம் ரன்), குமார் கார்த்திகெய சிங் (1 ரன்), மஹேஷ் தீக்ஷணா (2 ரன்), துஷார் தேஷ்பாண்டே (1 ரன்) ஆகியோர் விரைவாக ரன் சேர்க்க முயன்று விரைவில் ஆட்டமிழந்தனர். இதனால் ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கட் இழப்பிற்கு 182 ரன் எடுத்தது.

          183 ரன் என்ற கடினமான வெற்றி இலக்கை அடைய இரண்டாவதாக ஆடவந்த சென்னை அணியின் தொடக்க வீரர் ரச்சின் ரவீந்திரா (பூஜ்யம் ரன்) முதல் ஓவரிலேயே ஆட்டமிழந்தார். அதற்கடுத்து விளையாட வந்த ராகுல் திரிபாதி (19 பந்துகளில் 23 ரன், 3 ஃபோர், 1 சிக்சர்), ருதுராஜ் கெய்க்வாட் (44 பந்துகளில் 63 ரன், 7 ஃபோர், 1 சிக்சர்), ஷிவம் துபே (10 பந்துகளில் 18 ரன், 1 ஃபோர், 2 சிக்சர்) ஆகியோர் சிறப்பாக ஆடினர்.

ஆயினும் ரன்ரேட் ராஜஸ்தான் அணியின் ரன்ரேட்டைவிடக் குறைவாகவே இருந்தது. 15.5ஆவது ஓவரில் ருதுராஜ் ஆட்டமிழக்கும்போது அனியின் ஸ்கொர் 129ஆக் இருந்தது. மீதமுள்ள 4 ஓவர்களில் 54 ரன் எடுக்க வேண்டியிருந்தது. ரவீந்திர ஜதேஜா (22 பந்துகளில் 32 ரன்) எம்.எஸ். தோனி (11 பந்துகளில் 16 ரன்) களத்தில் இருந்தபோதும். 20 ஓவர் வரை ஆடியபோதும் வெற்றி இலக்கை சென்னை அணி அடைய முடியவில்லை. எனவே ராஜஸ்தான் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

          ராஜஸ்தான் அணியின் நிதீஷ் ராணா தனது அற்புதமான பேட்டிங்கிற்காக ஆட்டநாயகன் விருது பெற்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories