December 5, 2025, 7:03 PM
26.7 C
Chennai

IPL 2025: கடைசி இடம் பிடிப்பதில் சென்னை, மும்பை அணிகளுக்கு இடையே போட்டியா?

ipl 2025 games - 2025

ஐ.பி.எல் 2025 – 30.03.2025
இன்று இரண்டு ஆட்டங்கள்

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

முதல் ஆட்டம் – ஹைதராபாத் vs டெல்லி

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை (18.4 ஓவர்களில் 163. அனிகேத் வர்மா 74, ஹென்றி கிளாசன் 32, ட்ராவிஸ் ஹெட் 22, மிட்சல் ஸ்டார்க் 5/35, குல்தீப் யாதவ் 3/22, மோஹித் ஷர்மா 1/25) டெல்லி கேபிடல்ஸ் அணி (ஓவர்களில் 166/3, டியு பிளேசிஸ் 50, ஜேக் ஃப்ரேசர் மெகர்க் 38, அபிஷேக போரல் ஆட்டமிழக்காமல் 34, கேல் ராகுல் 15, ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் ஆட்டமிழக்காமல் 21, சீஷன் அன்சாரி 3/42) 7 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

          பூவா தலையா வென்ற ஹைதராபாத் அணி முதலில் மட்டையாடத் தீர்மானித்தது. அந்த அணியின் தொடக்க வீரர் அபிஷேக ஷர்மா (1 ரன்) ஒரு மேசமான ரன் அவுட்டில் ஆட்டமிழந்தார். இல்லாத ஒரு ரன்னுக்கு ட்ராவிஸ் ஹெட் ஓட, அபிஷேக் தனது ஓட்டத்தில் வேகம் காட்டாததால் நிகம் வீசிய பந்து ஸ்டம்பில் நேராக அடித்ததால் ஆட்டமிழந்தார்.

மற்றொரு தொடக்க வீரரான ட்ராவிஸ் ஹெட் (12 பந்துகளில் 22 ரன், 4 ஃபோர்) அதற்கடுத்து வந்த இஷான் கிஷன்  (5 ரன்), நிதீஷ் குமார் ரெட்டி (பூஜ்யம் ரன்) என சன்ரைசர்ஸ் அணியின் வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து அணியின் ஸ்கோர் 37/4 என ஆகியது. அவர்களுக்குப் பின்னர் ஆட வந்த அனிகேத் வர்மா (41 பந்துகளில் 74 ரன், 5 ஃபோர், 6 சிக்சர்), ஹென்றி கிளாசன் (19 பந்துகளில் 32 ரன், 2 ஃபோர், 2 சிக்சர்) இருவரும் சிறப்பாக ஆடினர்.

அதற்குப் பிறகு ஆடவந்த அபினவ் மனோகர் (4 ரன்), பேட் கம்மின்ஸ் (2 ரன்), வியன் முல்டர் (9 ரன்), ஹர்ஷல் படேல் (5 ரன்) ஆகியோர் சிறப்பாக ஆடவில்லை. இதனால் ஹைதராபாத் அணி 18.4 ஓவர்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 163 ரன் மட்டுமே எடுத்தது.

          167 ரன் என்ற வெற்றி இலக்கை அடைய இரண்டாவதாக ஆடவந்த டெல்லி அணியின் தொடக்க வீரர்கள் ஜேக் ஃப்ரேசர் மெகர்க் (32 பந்துகளில் 38 ரன், 4 ஃபோர், 2 சிக்சர்), மற்றும் டியு பிளேசிஸ் (27 பந்துகளில் 50 ரன், 3 ஃபோர், 3 சிக்சர்) மூன்றாவதாகக் களமிறங்கிய அபிஷேக் போரல் (18 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 34 ரன், 2 ஃபோர், 2 சிக்சர்), கே.எல். ராகுல் (5 பந்துகளில் 15 ரன், 2 ஃபோர், 1 சிக்சர்), ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் (14 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 21 ரன்) ஆகியோர் அதிரடியாக ஆடி, 16 ஓவர்களில் 3 விக்கட் இழப்பிற்கு 166 ரன் எடுத்து அணிக்கு வெற்றியைப் பெற்றுத்தந்தனர். 

          அதிரடி பேட்டிங்க் அனி எனப் பெயர் பெற்றிருக்கும் சன்ரைசர்ஸ் அணியை இன்று டெல்லி அணி வென்றது அந்த அணிக்கு உற்சாகத்தை அளிக்கும்.

          டெல்லி அணியின் வேகப் பந்துவீச்சாளர் மிட்சல் ஸ்டார்க்  ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

இரண்டாவது ஆட்டம் – ராஜஸ்தான் vs சென்னை

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி (182/9, நிதீஷ் ராணா 81, ரியான் பராக் 37, சஞ்சு சாம்சன் 20, ஷிம்ரன் ஹெட்மயர் 19, கலீல் அகமது 2/38, நூர் அகமது 2/28, மதீஷா பதிரனா 2/28, அஷ்வின் 1/46, ஜதேஜா 1/10) சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியை ( 176/6, ருதுராஜ் கெய்க்வாட் 63, ரவீந்தர ஜதேஜா ஆட்டமிழக்காமல் 32, ராகுல் திரிபாதி 23, ஷிவம் துபே 18, தோனி 16, ஜாமி ஓவர்டன் ஆட்டமிழக்காமல் 11, வனிந்து ஹசரங்கா 4/35, ஆர்ச்சர் 1/13, சந்தீப் ஷர்மா 1/42) ஆறு ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

          பூவாதலையா வென்ற சென்னை அணி முதலில் பந்துவீசத்தீர்மானித்தது. ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர் யசஷ்வீ ஜெய்ஸ்வால் (4 ரன்) இன்றும் சோபிக்கவில்லை. மற்றொரு தொடக்க வீரரான சஞ்சு சாம்சன் (16 பந்துகளில் 20 ரன்) எட்டாவது ஓவரில் ஆட்டமிழந்தார். மூன்றாவதாகக் களமிறங்கிய நிதீஷ் ராணா (36 பந்துகளில் 81 ரன், 10 ஃபோர், 5 சிக்சர்) 12ஆவது ஓவர் வரை விளையாடினார்.

அவருக்குத் துணையாக அணித்தலைவர் ரியான் பராக் (28 பந்துகளில் 37 ரன், 2 ஃபோர், 2 சிக்சர்) 18ஆவது ஓவர் வரை விளையாடினார். ஆயினும் மற்ற வீரர்களான துருவ் ஜுரல் (3 ரன்), வனிந்து ஹசரங்கா (4 ரன்), ஷிம்ரன் ஹெட்மயர் (16 பந்துகளில் 19 ரன்), ஆர்ச்சர் (பூஜ்யம் ரன்), குமார் கார்த்திகெய சிங் (1 ரன்), மஹேஷ் தீக்ஷணா (2 ரன்), துஷார் தேஷ்பாண்டே (1 ரன்) ஆகியோர் விரைவாக ரன் சேர்க்க முயன்று விரைவில் ஆட்டமிழந்தனர். இதனால் ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கட் இழப்பிற்கு 182 ரன் எடுத்தது.

          183 ரன் என்ற கடினமான வெற்றி இலக்கை அடைய இரண்டாவதாக ஆடவந்த சென்னை அணியின் தொடக்க வீரர் ரச்சின் ரவீந்திரா (பூஜ்யம் ரன்) முதல் ஓவரிலேயே ஆட்டமிழந்தார். அதற்கடுத்து விளையாட வந்த ராகுல் திரிபாதி (19 பந்துகளில் 23 ரன், 3 ஃபோர், 1 சிக்சர்), ருதுராஜ் கெய்க்வாட் (44 பந்துகளில் 63 ரன், 7 ஃபோர், 1 சிக்சர்), ஷிவம் துபே (10 பந்துகளில் 18 ரன், 1 ஃபோர், 2 சிக்சர்) ஆகியோர் சிறப்பாக ஆடினர்.

ஆயினும் ரன்ரேட் ராஜஸ்தான் அணியின் ரன்ரேட்டைவிடக் குறைவாகவே இருந்தது. 15.5ஆவது ஓவரில் ருதுராஜ் ஆட்டமிழக்கும்போது அனியின் ஸ்கொர் 129ஆக் இருந்தது. மீதமுள்ள 4 ஓவர்களில் 54 ரன் எடுக்க வேண்டியிருந்தது. ரவீந்திர ஜதேஜா (22 பந்துகளில் 32 ரன்) எம்.எஸ். தோனி (11 பந்துகளில் 16 ரன்) களத்தில் இருந்தபோதும். 20 ஓவர் வரை ஆடியபோதும் வெற்றி இலக்கை சென்னை அணி அடைய முடியவில்லை. எனவே ராஜஸ்தான் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

          ராஜஸ்தான் அணியின் நிதீஷ் ராணா தனது அற்புதமான பேட்டிங்கிற்காக ஆட்டநாயகன் விருது பெற்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories