December 5, 2025, 8:11 PM
26.7 C
Chennai

IPL 2025: வரிசையான தோல்விகளுக்குப் பின் மீண்ட சென்னை அணி!

ipl 2025 games - 2025

ஐ.பி.எல் 2025 – லக்னோ vs சென்னை
லக்னோ – 14.04.2025

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை (166/7, ரிஷப் பந்த் 63, மிட்சல் மார்ஷ் 30, ஆயுஷ் பதோனி 22, அப்துல் சமத் 20, ஜதேஜா 2/24, பதிரணா 2/45, கலீல் அகமது, அன்ஷுல் காம்போஜ் தலா ஒரு விக்கட்) சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி (19.3 ஓவர்களில் 168/5, ஷிவம் துபே ஆட்டமிழக்காமல் 43, ரச்சின் ரவீந்திரா 37, ஷேக் ரஷீத் 27, எம்.எச். தோனி ஆட்டமிழக்காமல் 26, ரவி பிஷ்னோய் 2/18, திக்வேஷ் ரதி, ஆவேஷ் கான், எய்டன் மர்க்ரம் தலா ஒரு விக்கட்) 5 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

          பூவாதலையா வென்ற சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. இதனால் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி முதலில் மட்டையாட வந்தது. அந்த அணியின் தொடக்க வீரர் எய்டன் மர்க்ரம் (6 ரன்) முதல் ஓவரிலேயே ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து அதிரடி பேட்ஸ்மென் நிக்கோலஸ் பூரன் (8 ரன்) நாலாவது ஓவரில் ஆட்டமிழந்தார்.

மிட்சல் மார்ஷ் (25 பந்துகளில் 30 ரன், 2 ஃபோர், 2 சிக்சர்), ரிஷப் பந்த் (49 பந்துகளில் 63 ரன், 4 ஃபோர், 4 சிக்சர்), ஆயுஷ் பதோனி (17 பந்துகளில் 22 ரன், 1 ஃபோர், 2 சிக்சர்), அப்துல் சமத் (11 பந்துகளில் 20 ரன், 2 சிக்சர்) ஆகிய நால்வர் மட்டும் சிறப்பாக ஆடினர்.

மற்ற வீரர்களான டேவிட் மில்லர் ரன் எடுக்க வில்லை; ஷர்துல் தாகூர் (4 ரன்) விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. 20 ஓவர் முடிவில் லக்னோ அணி ஏழு விக்கட் இழப்பிற்கு 166 ரன் எடுத்தது. ஆயுஷ் பதோனியை ஸ்டம்பிங் செய்த விதத்திலும் அப்துல் சமதை ரன் அவுட் ஆக்கிய விதத்திலும் தோனி சிறந்து விளங்கினார்.

          167 என்ற எளிய இலக்குடன் இரண்டாவதாகக் களம் இறங்கிய சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் ஷேக் ரஷீத் (19 பந்துகளில் 27 ரன், 6 ஃபோர்) மற்றும் ரச்சின் ரவீந்திரா (22 பந்துகளில் 37 ரன், 5 ஃபோர்) இன்று சிறப்பான தொடக்கம் தந்தனர்.

அதன் பின்னர் ஆட வந்த ராகுல் திரிபாதி (10 பந்துகளில் 9 ரன்), ரவீந்த்ர ஜதேஜா (11 பந்துகளில் 7 ரன்) இன்று சோபிக்கவில்லை. சென்னை அணி இன்றும் தோல்வியுமோ என்று அனவரும் எண்ணியபோது  ஷிவம் துபே (37 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 43 ரன், 3 ஃபோர், 2 சிக்சர்) மற்றும் எம்.எஸ். தோனி (11 பந்துகளில் 26 ரன், 4 ஃபோர், 1 சிக்சர்) ஆகியோர் சிறப்பாக ஆடி அணிக்கு வெற்றியைத் த்மஎடித்தந்தனர்.

விஜய் ஷங்கர் (8 பந்துகளில் 9 ரன், 1 ஃபோர்) இடையில் வந்துபோனார். இதனால் 19.3 ஓவர்களில் 5 விக்கட்டுகள் இழப்பிற்கு சென்னை அணி 168  ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 

          சென்னை அணியின் அணித்தலைவர் மற்றும் விக்கட் கீப்பரான எம்.எஸ். தோனி ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories