April 28, 2025, 9:33 AM
28.9 C
Chennai

IPL 2025: வரிசையான தோல்விகளுக்குப் பின் மீண்ட சென்னை அணி!

ஐ.பி.எல் 2025 – லக்னோ vs சென்னை
லக்னோ – 14.04.2025

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை (166/7, ரிஷப் பந்த் 63, மிட்சல் மார்ஷ் 30, ஆயுஷ் பதோனி 22, அப்துல் சமத் 20, ஜதேஜா 2/24, பதிரணா 2/45, கலீல் அகமது, அன்ஷுல் காம்போஜ் தலா ஒரு விக்கட்) சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி (19.3 ஓவர்களில் 168/5, ஷிவம் துபே ஆட்டமிழக்காமல் 43, ரச்சின் ரவீந்திரா 37, ஷேக் ரஷீத் 27, எம்.எச். தோனி ஆட்டமிழக்காமல் 26, ரவி பிஷ்னோய் 2/18, திக்வேஷ் ரதி, ஆவேஷ் கான், எய்டன் மர்க்ரம் தலா ஒரு விக்கட்) 5 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

          பூவாதலையா வென்ற சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. இதனால் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி முதலில் மட்டையாட வந்தது. அந்த அணியின் தொடக்க வீரர் எய்டன் மர்க்ரம் (6 ரன்) முதல் ஓவரிலேயே ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து அதிரடி பேட்ஸ்மென் நிக்கோலஸ் பூரன் (8 ரன்) நாலாவது ஓவரில் ஆட்டமிழந்தார்.

மிட்சல் மார்ஷ் (25 பந்துகளில் 30 ரன், 2 ஃபோர், 2 சிக்சர்), ரிஷப் பந்த் (49 பந்துகளில் 63 ரன், 4 ஃபோர், 4 சிக்சர்), ஆயுஷ் பதோனி (17 பந்துகளில் 22 ரன், 1 ஃபோர், 2 சிக்சர்), அப்துல் சமத் (11 பந்துகளில் 20 ரன், 2 சிக்சர்) ஆகிய நால்வர் மட்டும் சிறப்பாக ஆடினர்.

ALSO READ:  சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த யூடியூபர் ஜாமீன் மனு விசாரணை ஒத்திவைப்பு!

மற்ற வீரர்களான டேவிட் மில்லர் ரன் எடுக்க வில்லை; ஷர்துல் தாகூர் (4 ரன்) விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. 20 ஓவர் முடிவில் லக்னோ அணி ஏழு விக்கட் இழப்பிற்கு 166 ரன் எடுத்தது. ஆயுஷ் பதோனியை ஸ்டம்பிங் செய்த விதத்திலும் அப்துல் சமதை ரன் அவுட் ஆக்கிய விதத்திலும் தோனி சிறந்து விளங்கினார்.

          167 என்ற எளிய இலக்குடன் இரண்டாவதாகக் களம் இறங்கிய சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் ஷேக் ரஷீத் (19 பந்துகளில் 27 ரன், 6 ஃபோர்) மற்றும் ரச்சின் ரவீந்திரா (22 பந்துகளில் 37 ரன், 5 ஃபோர்) இன்று சிறப்பான தொடக்கம் தந்தனர்.

அதன் பின்னர் ஆட வந்த ராகுல் திரிபாதி (10 பந்துகளில் 9 ரன்), ரவீந்த்ர ஜதேஜா (11 பந்துகளில் 7 ரன்) இன்று சோபிக்கவில்லை. சென்னை அணி இன்றும் தோல்வியுமோ என்று அனவரும் எண்ணியபோது  ஷிவம் துபே (37 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 43 ரன், 3 ஃபோர், 2 சிக்சர்) மற்றும் எம்.எஸ். தோனி (11 பந்துகளில் 26 ரன், 4 ஃபோர், 1 சிக்சர்) ஆகியோர் சிறப்பாக ஆடி அணிக்கு வெற்றியைத் த்மஎடித்தந்தனர்.

ALSO READ:  IPL 2025: பட்லர் அடிச்ச அடி... பராக்கு பாத்த டெல்லி அணி!

விஜய் ஷங்கர் (8 பந்துகளில் 9 ரன், 1 ஃபோர்) இடையில் வந்துபோனார். இதனால் 19.3 ஓவர்களில் 5 விக்கட்டுகள் இழப்பிற்கு சென்னை அணி 168  ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 

          சென்னை அணியின் அணித்தலைவர் மற்றும் விக்கட் கீப்பரான எம்.எஸ். தோனி ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

IPL 2025: முதலிடத்துக்கு முன்னேறிய பெங்களூர் அணி

ஐ.பி.எல் 2025 – இரண்டு ஆட்டங்கள் - 27.04.2025 முனைவர் கு.வை....

ராணுவத்துக்கு நிதி அளிக்குமாறு கோரும் வாட்ஸ்அப் தகவல்கள்; தவறான வழிகாட்டல் என விளக்கம்!

வாட்ஸ்அப்பில் பரவும் தவறான செய்தி குறித்து பாதுகாப்பு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நெல்லை ரயிலுக்கு 4 பெட்டி கூடுதல் சரி, ஆனா கடும் நெரிசலுள்ள மயிலாடுதுறை ரயிலுக்கு எப்போ?

கூடுதலாக 6 பெட்டிகளை இணைத்து 16 பெட்டிகளுடன் இயக்க வேண்டுமென மக்கள் பல மாதங்களாக கோரி வருகின்றனர்.

இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது!

தென்காசி மாவட்டத்தில் இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

IPL 2025: முதலிடத்துக்கு முன்னேறிய பெங்களூர் அணி

ஐ.பி.எல் 2025 – இரண்டு ஆட்டங்கள் - 27.04.2025 முனைவர் கு.வை....

ராணுவத்துக்கு நிதி அளிக்குமாறு கோரும் வாட்ஸ்அப் தகவல்கள்; தவறான வழிகாட்டல் என விளக்கம்!

வாட்ஸ்அப்பில் பரவும் தவறான செய்தி குறித்து பாதுகாப்பு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நெல்லை ரயிலுக்கு 4 பெட்டி கூடுதல் சரி, ஆனா கடும் நெரிசலுள்ள மயிலாடுதுறை ரயிலுக்கு எப்போ?

கூடுதலாக 6 பெட்டிகளை இணைத்து 16 பெட்டிகளுடன் இயக்க வேண்டுமென மக்கள் பல மாதங்களாக கோரி வருகின்றனர்.

இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது!

தென்காசி மாவட்டத்தில் இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

அமைச்சரவை மாற்றம்; பொன்முடி, செந்தில் பாலாஜி நீக்கம்! ஆளுநர் ஒப்புதல்!

தமிழக அமைச்சர்களாக இருந்து நீதிமன்ற நடவடிக்கைகள் மற்றும் சர்ச்சைகளில் சிக்கிய பொன்முடி, செந்தில் பாலாஜி ஆகியோரின் அமைச்சர் பதவிகள் பறிக்கப்பட்டுள்ளன.

செங்கோட்டை – மயிலாடுதுறை ரயிலில் நாளைக்கு போறீங்கன்னா… இத தெரிஞ்சுக்குங்க!

செங்கோட்டை- மயிலாடுதுறை ரயில் சேவையில் மாற்றம் செய்யப் பட்டுள்ளது. பராமரிப்புப் பணிகள் காரணமாக, நாளை ரயில் சேவையில் மாற்றம்

நாய்களை வாக்கிங் கூட்டிச் சென்ற போது தகராறு : 4 பேர் மீது வழக்கு!

இதுகுறித்து அசோக்குமார் கொடுத்த புகாரின் பேரில் விருதுநகர் பஜார் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Entertainment News

Popular Categories