December 5, 2025, 3:00 PM
27.9 C
Chennai

IPL 2025: போட்டி கொல்கத்தாவின் பக்கம்!

ipl 2025 games - 2025

ஐ.பி.எல் 2025 – கொல்கொத்தா vs டெல்லி –டெல்லி – 29.04.2025

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணி (204/9, அங்க்ரிஷ் ரகுவன்ஷி 44, ரிங்கு சிங் 36, சுனில் நரேன் 27, ரஹ்மானுல்லா குர்பாஸ் 26, அஹிங்க்யா ரஹானே 26, மிட்சல் ஸ்டார்க் 3/43, விப்ராஜ் நிகம் 2/41, அக்சர் படேல் 2/27) டெல்லி கேபிடல்ஸ் அணியை (190/9, டியு பிளேசிஸ் 62, அக்சர் படேல் 43, விப்ராஜ் நிகம் 38, சுனில் நரேன் 3/29, வருண் சக்ரவர்த்தி 2/39, அனுகூல் ராய், வைபவ் அரோரா, ரசல் தலா 1 விக்கட்) 14 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

பூவாதலையா வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. அதனால் கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் மட்டையாட வந்தது.

அந்த அணியின் முதல் நான்கு வீரர்கள் ரஹமானுல்லா குர்பாஸ் (12 பந்துகளில் 26 ரன், 5 ஃபோர், 1சிக்சர்), சுனில் நரேன் (16 பந்துகளில் 27 ரன், 2 ஃபோர், 2 சிக்சர்), அஹிங்க்யா ரஹானே (14 பந்துகளில் 26 ரன், 4 ஃபோர், 1 சிக்சர்), அங்க்ரிஷ் ரகுவன்ஷி (32 பந்துகளில் 44 ரன், 3 ஃபோர், 2 சிக்சர்) ஆகியோர் நல்ல் ரன்ரேட்டுடன் ரன் சேர்க்க உதவினர்.

வெங்கடேஷ் ஐயர் (7 ரன்) இன்றும் சரியாக ஆடவில்லை. அதன் பின்னர் வந்த ரிங்கு சிங் (25 பந்துகளில் 36 ரன், 3 ஃபோர், 1 சிக்சர்) ஆண்ட்ரூ ரசல் (9 பந்துகளில் 17 ரன், 2 ஃபோர், 1 சிக்சர்) இருவரும் அதே ரன் ரேட்டைத் தொடர்ந்தனர்.

20ஆவது ஓவரில் மிட்சல் ஸ்டார்க் வீசிய ஓவரில் ரோமன் போவெல் (5 ரன்), அனுகூல் ராய் (பூஜ்யம் ரன்), ரசல் மூவரும் ஆட்டமிழந்தனர். இதனால் கொல்கொத்தா அனி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கட் இழப்பிற்கு 205 ரன் எடுத்தது.

205 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு இரண்டாவதாகக் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணியின் தொடக்க வீரர் அபிஷேக் போரல் (4 ரன்) முதல் ஓவரில் ஆட்டமிழந்தார்.

மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான டியூ பிளேசிஸ் (45 பந்துகளில் 62 ரன், 7 ஃபோர், 2 சிக்சர்) 15.2ஆவது ஓவர் வரி ஆடினார். இவரைத் தவிர அக்சர் படேல் (23 பந்துகளில் 43 ரன், 4 ஃபோர், 3 சிக்சர்) மற்றும் விப்ராஜ் நிகம் (19 பந்துகளில் 38 ரன், 5 ஃபோர், 2 சிக்சர்) இருவரும் சிறப்பாக ஆடினார்கள்.

மற்றா வீரர்களான கே.எல். ராகுல் (7 ரன்), ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் (1 ரன்), அஷுத்தோஷ் ஷர்மா (7 ரன்), மிட்சல் ஸ்டார்க் (பூஜ்யம் ரன்), சமீரா ( 2 ரன்), குல்தீப் யாதவ் 1 ரன்) ஆகியோர் இன்று சரியாக விளையாடவில்லை.

கொல்கொத்தா அணியின் சுழல் பந்துவீச்சாளர்கள் வருண், சுனில் மற்றும் ரசல் இன்று சிறப்பாக பந்துவீசி மொத்தம் 6 விக்கட்டுகள் எடுத்தனர். 20 ஓவர் முடிவில் 9 விக்கட் இழப்பிற்கு 190 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது.

அதனால் டெல்லி அணி தோல்வி அடைந்தது.

கொல்கொத்தா அணியின் தொடக்க வீரர் மற்றும் சுழல் பந்துவீச்சாளர் சுனில் நரேன் ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories