December 5, 2025, 12:17 PM
26.9 C
Chennai

IPL 2025: சென்னை அணியின் கௌரவமான தோல்வி!

ipl 2025 games - 2025

ஐ.பி.எல் 2025 – சென்னை vs பஞ்சாப் – சென்னை – 30.04.2025

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியை (19.2 ஓவர்களில் 190, சாம் கரன் 88, டிவால் பிரிவிஸ் 32, யஸ்வேந்திர சாஹல் 4/32, அர்ஷதீப் சிங் 2/25, மார்கோ ஜேன்சன் 2/30, உமர்சராய் 1/39, ஹர்பிரீத் ப்ரார் 1/21) பஞ்சாப் கிங்க்ஸ் அணி (19.4 ஓவர்களில் 194/6, ஷ்ரேயாஸ் ஐயர் 72, பிரப்சிம்ரன் சிங் 54, பிரியான்ஸ் ஆர்யா 23, ஷஷாங்க் சிங் 23, கலீல் அகமது 2/28, பதிரனா 2/45, ஜதேஜா 1/32, நூர் அகமது 1/39) 4 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

பூவாதலையா வென்ற பஞ்சாப் கிங்க்ஸ் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. அதனால் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி முதலில் மட்டையாட வந்தது.

அந்த அணியின் தொடக்க வீரர்கள் ஷேக் ரஷீத் (12 பந்துகளில் 11 ரன்) மாற்றும் ஆயுஷ் மஹத்ரே (6 பந்துகளில் 7 ரன்) இருவரும் இன்று சரியாக ஆடவில்லை.

ஆனால் மூன்றவதாகக் களமிறங்கிய சாம் கரண் (47 பந்துகளில் 88 ரன், 9 ஃபோர், 4 சிக்சர்), ரவீந்திர ஜதேஜா (12 பந்துகளில் 17 ரன்) மற்றும் டிவால்ட் ப்ரிவிஸ் (26 பந்துகளில் 32 ரன்) இருவருடனும் இணைந்து அணியின் ஸ்கோரை நிலைப்படுத்தினார்.

அவரது அதிரடி ஆட்டத்தால் அணி 220 ரன் வரை போகும் எனக் கணக்கிட்டிருந்த நிலையில் ஷிவம் துபே (6 ரன்), தோனி (11 ரன்), தீபக் ஹூடா (2 ரன்), அன்ஷுல் காம்போஜ் (பூஜ்யம் ரன்), நூர் அகமது (பூஜ்யம் ரன்), கலீல் அகமது (ஆஅட்டமிழக்காமல் பூஜ்யம் ரன்) ஆகியோர் அதற்கு மேல் ரன் சேர்க்க முடியாமல் ஆட்டமிழந்தனர்.

குறிப்பாக யசுவேந்திர சாஹல் வீசிய 19ஆவது ஓவரைக் குறிப்பிட வேண்டும். அதில் அவர் நான்கு விக்கட்டுகள் எடுத்தார்; அதில் ஒரு ஹாட்ரிக்கும் அடங்கும். இதனால் 19.2 ஓவர்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து சென்னை அணி 190 ரன் எடுத்தது.

இந்த ஐபிஎல்லில் சென்னை அணி எடுத்த அதிகபட்ச ஸ்கோர் இது.

191 ரன் எடுத்தால் வெற்றி என்ற வெற்றி இலக்கோடு இரண்டாவதாகக் கள்மிறங்கிய பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்கள் பிரியான்ஷ் ஆர்யா (15 பந்துகளில் 23 ரன், 5 ஃபோர்) மற்றும் பிரப்சிம்ரன் சிங் (36 பந்துகளில் 54 ரன், 5 ஃபோர், 3 சிக்சர்) நல்ல தொடக்கம் தந்தனர்.

அதன் பின்னர் பஞ்சாப் அணியின் அணித்தலைவர் ஷ்ரேயாஸ் ஐயர் (41 பந்துகளில் 72 ரன், 5 ஃபோர், 4 சிக்சர்) அணியை வெற்றிப்பாதையில் இட்டுச் சென்றார். அவருக்குத் துணையாக ஷஷாங்க் சிங் (12 பந்துகளில் 23 ரன், 1 ஃபோர், 2 சிக்சர்) விளையாடினார். நெஹல் வதேரா (5 ரன்) இன்று சரியாக விளையாடவில்லை.

அணியின் ஸ்கோர் 188ஆக இருக்கும்போது ஷ்ரேயாஸ் ஐயர் ஆட்டமிழக்க, கடைசி ஓவரில் 2 ரன் எடுக்கவேண்டிய கட்டம். அந்த ஓவரிலும் ஷெட்கே ஆட்டமிழக்க, அவருக்குப் பின்னால் வந்த மார்கோ ஜேன்சன் ஒரு நாலு அடித்து வெற்றியை உறுதி செய்தார்.

ஆட்டநாயகனாக ஷ்ரேயாஸ் ஐயர் அறிவிக்கப்பட்டார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories