December 5, 2025, 6:08 PM
26.7 C
Chennai

IPL 2025: குஜராத் அதிர்ஷ்ட வெற்றி

ipl 2025 games - 2025

ஐ.பி.எல் 2025 – மும்பை vs குஜராத் –  வாங்கடே, மும்பை – 06.05.2025

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

மும்பை இந்தியன்ஸ் அணியை (155/8, வில் ஜேக்ஸ் 53, சூர்யகுமார் யாதவ் 35, கார்பின் போஷ் 27, சாய் கிஷோர் 2/34, சிராஜ், அர்ஷத் கான், பிரசித் கிருஷ்ணா, ரஷீத் கான், ஜெரால்ட் கோயட்சி தலா ஒரு விக்கட்) குஜ்ராத் டைடன்ஸ் அணி (19 ஓவர்களில் 147/7, ஷுப்மன் கில் 43, ஜாஸ் பட்லர் 30, ரூதர்ஃபோர்ட் 28, பும்ரா 2/19, போல்ட் 2/22, அஷ்வினி குமார் 2/28, தீபக் சாஹார் 1.32) டக்வொர்த் லூயிஸ் முறையில் 3 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

          பூவாதலையா வென்ற குஜராத் டைடன்ஸ் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. அதனால் மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் மட்டையாட வந்தது. பொதுவாக மட்டையாடுவதில் சிறந்து விளங்கும் மும்பை அணி இன்று தொடக்கம் முதலே சொதப்பியது. தொடக்க வீரர்கள் ரியன் ரிக்கிள்டன் (2 ரன்), ரோஹித் ஷர்மா (7 ரன்) இருவரும் முதல் நாலு ஓவர்களுக்குள் ஆட்டமிழந்தனர்.

அடுத்த ஜோடியான வில் ஜேக்ஸ் (35 பந்துகளில் 53 ரன், 5 ஃபோர், 3 சிக்சர்) மற்றும் சூர்யகுமார் யாதவ் (24 பந்துகளில் 35 ரன், 5 ஃபோர்) இருவரும் 12ஆவது ஓவர் வரை விளையாடி அணிக்கு வேகமாக ரன் சேர்த்தனர். ஆனால் அதற்குப் பின் வந்த திலக் வர்மா (7 ரன்), ஹார்திக் பாண்ட்யா (1 ரன்), நமன் திர் (7 ரன்), ஆகியோர் இன்று ஏமாற்றினர்.

கோர்பின் போஷ் (22 பந்துகளில் 27 ரன், 1 ஃபோர், 2 சிக்சர்) இறுதியில் சற்று ஆறுதல் தந்தார். இதனால் மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்தது.

          156 ரன் எடுத்தால் வெற்றி, என்ற இலக்கோடு இரண்டாவதாகக் களமிறங்கிய குஜராத் அணியின் தொடக்க வீரர் சாய் சுதர்ஷன் (5 ரன்) இரண்டாவது ஓவரில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான ஷுப்மன் கில் (46 பந்துகளில் 43 ரன், 3 ஃபோர், 1 சிக்சர்), ஜாஸ் பட்லர் (27 பந்துகளில் 30 ரன், 3 ஃபோர், 1 சிக்சர்) மற்றும் ரூதர்ஃபோர்ட் (15 பந்துகளில் 28 ரன், 2 ஃபோர், 2 சிக்சர்) உடன் இணைந்து நிதானமாக ரன் சேர்த்தார்.

மும்பையின் பந்துவீச்சாளர்கள் குறிப்பாக வேகப் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசினர். 18ஆவது ஓவர் முடிந்தபோது குஜராத் அணி 6 விக்கட் இழப்பிற்கு 136 ரன் எடுத்திருந்தது. அச்சமயத்தில் மழை குறுக்கிட்டது.

இரவு 1229க்கு ஆட்டம் மீண்டும் தொடங்கியது. டக்வொர்த் லூயிஸ் முறைப்படி குஜராத் அணிக்கு ஆட்டம் 19 ஓவராகக் குறைக்கப்பட்டு, இலக்கு 147 என மாற்றியமைக்கப்பட்டது. அதாவது கடைசி ஓவரில் அந்த அணி 15 ரன் எடுக்க வேண்டும். தீபக் சாஹர் கடைசி ஓவரை வீசினார்.

ராகுல் திவாத்தியா மற்றும் கோயட்சி இருவரும் குஜராத் அணிக்காக விளையாடினர். முதல் பந்தில் 4, இரண்டாவது பந்தில் சிங்கிள், மூன்றாவது பந்தில் சிக்சர், நாலாவது பந்தில் 1 ரன்; அது நோபாலாகப் போனது. மீண்டும் வீசப்பட்ட நாலாவது பந்தில் 1 ரன். ஐந்தாவது பந்தில் கோயட்சி ஆட்டமிழந்தார்.

ஆறாவது பந்தில் ஒரு ரன் அடித்தால் வெற்றி. மிட்-ஆஃப் திசையில் அடிக்கப்பட்ட பந்தை எடுத்த பாண்ட்யா பந்துவீச்சாளர் ஸ்டம்பில் வீசினார்; ஆனால் அது ஸ்டம்பை அடிக்க வில்லை. அதனால் குஜராத் அணி வெற்றி பெற்றது.

ஆட்டநாயகனாக ஷுப்மன் கில் அறிவிக்கப்பட்டார்.  

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories