ஆபரேஷன் சிந்தூர்: பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல்!

terrorist camps hitted by indian army - 2026

பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாதிகளை குறிவைத்து இந்திய ராணுவம் தாக்குதல் தொடங்கியது. இதற்கு ஆபரேஷன் சிந்தூர் என பெயர் சூட்டப்பட்டது. சிந்தூர் என்பது, குங்குமத்தைக் குறிக்கும். பெண்களின் குங்குமத்தைப் பறித்த பயங்கரவாதிகளை இல்லாமல் செய்யும் பாரத ராணுவத்தின் செயலாக இதற்கு இப்பெயர் சூட்டப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. 

பகல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக  இந்த ஆபரேஷன் சிந்தூர் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  பஹல்காம் தாக்குதலுக்கு நீதி நிலைநாட்டப்பட்டது- ஜெய்ஹிந்த் என்றூ, இந்திய ராணுவம் எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளது.

கோட்லி, பஹ்வால்பூர், முசாபராபாத் உள்ளிட்ட இடங்களில் ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.  முன்னதாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் முசாபராபாத்தில் மின்விநியோகம் துண்டிக்கப்பட்டது. 

 இந்த தாக்குதல் குறித்து அறிக்கை வெளியிட்ட இந்திய ராணுவம், ‘பாகிஸ்தான் ராணுவத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படவில்லை என்றும், மிகுந்த நிதானத்துடன் இலக்குகளை தேர்ந்தெடுத்து தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், பொதுமக்கள் அல்லது பாகிஸ்தான் ராணுவம் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை, பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து 9 இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் விளக்கம் அளித்துள்ளது. 

லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமது தலைமையகங்களை குறிவைத்து இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளதை பாகிஸ்தானும் உறுதிப் படுத்தியுள்ளது. இது குறித்து பாகிஸ்தான் பிரதமர் ஷஃபா ஷெரீப்,  ஐந்து இடங்களில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

முரிடிக் என்ற இடத்தில் உள்ள பயங்கரவாதிகளின் முகாமை குண்டுவீசி அழித்தது இந்திய ராணுவம். மேலும், தாக்குதலுக்கு தயார் என்றும், வெற்றிக்கான பயிற்சி இது என்றும் இந்திய ராணுவம் வீடியோ பதிவு வெளியிட்டுள்ளது. 

பாரதத்தின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில், சுற்றுலா சென்ற அப்பாவிப் பொதுமக்கள் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலுக்குக் காரணமான பயங்கரவாதிகளை ராணுவம் தேடி வருகின்றது. இருப்பினும், பயங்கரவாதிகளை உற்பத்தி செய்து மற்ற நாடுகளுக்கு அனுப்பி கொண்டிருக்கும் பாகிஸ்தானுக்கு தகுந்த பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் பயங்கரவாத முகாம்களின் மீது தாக்குதல் நடத்தி அவற்றை முற்றிலும் அழிப்பதே இந்தியாவின் பணி என்று குறிப்பிடப்பட்டது. அதன்படி பஹல்காம் தாக்குதல் நடைபெற்ற இரண்டே வாரங்களில் இந்தியா பதிலடிகொடுத்துள்ளது.

ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியா தாக்குதல் நடத்திய நிலையில், எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளது. எனினும் எல்லைப் பகுதியில் பதிலடி தாக்குதல் நடத்த தயாராக இருப்பதாக இந்திய ராணுவம் அறிவித்துள்ளது. இதனிடையே, பாகிஸ்தானின் லாகூரில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டதாகத் தகவல் வெளியானது. இந்தியா நடத்திய தாக்குதலால் நள்ளிரவில் பீதியில் உறைந்தனர் லாகூர்வாசிகள்.

இந்நிலையில், இந்தியாவில் உள்ளோர் இந்த தாக்குதலுக்கு வரவேற்பு தெரிவித்து “பாரத் மாதா கி ஜெய்- ஜெய்ஹிந்த்” என சமூகவலைதளங்களில் பதிவிட்டனர். குறிப்பாக, மத்திய அமைச்சர்கள், முதலமைச்சர்கள்  உள்ளிட்டோரும் இவ்வாறு சமூகத் தளங்களில் பதிவிட்டு தங்கள் வரவேற்பை தெரிவித்தனர். மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், கிரண் ரிஜிஜு, பியுஸ் கோயல் எக்ஸ் தளத்தில் பதிவிட்டனர். மேலும், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், உத்தரகாண்ட், சட்டீஸ்கர் முதலமைச்சர்களும் இவ்வாறு வரவேற்பு தெரிவித்து எக்ஸ்தளத்தில் பதிவிட்டனர். 

ஆபரேஷன் சிந்தூர்: 

ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியா நடத்திய தாக்குதலில் 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாத முகாம்கள்  மீது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 3 பயங்கரவாத அமைப்புகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. லஷ்கர் இ தொய்பா, ஹிஸ்புல் முஜாகிதீன், ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்புகளின் முகாம்கள் அழிக்கப்பட்டதாக இந்திய ராணுவம் அறிவித்துள்ளது.  

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

Topics

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

Entertainment News

Popular Categories