December 5, 2025, 6:07 PM
26.7 C
Chennai

ஆபரேஷன் சிந்தூர்: என்ன நினைக்கிறார்கள் சமூகத் தளத்தில்!?

operation sithoor 2 - 2025

பாகிஸ்தான் இராணுவம் பாரதத்தை திரும்ப தாக்க வேண்டும். பயங்கரவாதிகள் கொண்டு தாக்க கூடாது. அப்போதுதான் இது முழு யுத்தமாக மாறும்.

வெறுத்துப் போய்விட்டது சமாதானம் பேசிப் பேசி. இவர்களுக்கு என்ன செய்தாலும் புத்தியே வரப்போவதில்லை. இவர்களை வைத்துக்கொண்டு உள்ளூரில் எச்சக்கலை நாய்கள் செய்யும் அரசியலும் சகிக்கவில்லை.

அதனால் பயங்கரவாதிகள் என்று எதுவுமே இருக்க வேண்டாம். ஆயுத பொருளாதாரமும் இதை உத்தேசித்து தான் உலகம் முழுவதும் நடந்து வருகிறது. அமெரிக்காவும் பிரிட்டனும் இன்னும் பல மேற்கத்திய நாடுகளும் பாகிஸ்தானுக்கு பணம் கொடுத்து ஆயுதங்கள் கொடுத்து இந்தியாவுக்கு எதிராக கொம்பு சீவி விடுவதை அவர்களே ஒப்புக்கொண்டு உள்ளார்கள்.

எவ்வளவு அதிகமாக அழிக்க முடியுமோ அழித்து விடுவோம். இதனால் நம் மீதும் சில தாக்குதல்கள் ஏவப்படலாம். நமது தரப்பிலும் சில அழிவுகள் ஏற்படலாம். பாதகம் இல்லை. அதை நாம் எப்படியோ சமாளித்துக் கொண்டு விடுவோம். காரணம் 1400 ஆண்டுகளாக மாபெரும் அழிவுகளை சந்திப்பதற்கு பதில் இந்த கடைசி முறையாக ஒரு அழிவை சந்தித்து விட்டு எதிரியை மொத்தமாக முடித்துவிட்டு இனி எதிரியில்லை எனும் நிலைமைக்கு கொண்டு போய் விட்டு அதன் பிறகாவது நிம்மதியாக வாழ்வோம்.

அவர்கள் கூறுகிறார்கள் மரணத்துக்கு பிறகு தான் தங்களுக்கு வாழ்வு ஆரம்பிக்கிறது என்று. அதை அவர்களுக்கு அளித்து விடுவோம். போதும் இந்த வாழ்வா சாவா போராட்டம்.

அப்பாவி உயிர்கள் என்று எதுவுமே கிடையாது. அப்படி அப்பாவிகளாக அங்கு இருப்பவர்களுக்காக கவலைப்பட்டுக் கொண்டிருக்க முடியாது. எப்போது எதிரி பக்கம் இருக்கிறார்கள் என்று தெரிகிறதோ அப்போதே அவர்களும் எதிரிகளாக ஆகிவிட்டார்கள். பெற்றுக் கொடுக்கும் போது எதிரிகளாக தெரியாதவர்கள் எப்படி கொலை செய்யப்படும்போது மட்டும் அப்பாவிகளாக தெரிகிறார்கள்?

தேவையே இல்லை அப்படி ஒரு அப்பாவி. எல்லோரையும் மொத்தமாக முடித்து விடுங்கள். எல்லோருக்கும் சேர்த்து வேண்டுமானால் பிண்டம் வைத்து விடுவோம்.

  • ஆனந்த் வெங்கட்

பஹல்பூருக்கு பதில் பஹவல்பூர் – மசூத் ஆசாத்தின் ஃபேமிலி 14 பேர் மர்கயா!

பாகிஸ்தானின் மிக பாதுகாப்பான சில இடங்கள் என்றால் “மர்கஸ் சுப்ஹான் அல்லா” என்ற பஹவல்பூரில் உள்ள ஒரு 5 நட்சத்திர ஹோட்டலுக்கு இணையான ஒரு ட்ரெய்னிங்க் கேம்ப் மற்றும் லஸ்கரின் தலைமை அலுவலகம்.

கிட்டத்தட்ட 100 ரூம்களுக்கு மேல் Spa, நீச்சல் குளம், தியேட்டர், ட்ரெய்னிங், ரகசியமான பங்கர்கள், ஆலோசனை தளங்கள் முதல் எமெர்ஜென்ஸி ஹாஸ்பிடல் வரை அங்கே உள்ளது. மசூத் ஆசாத் தொடர் டயாலிஸ் செய்யப்படும் நோயாளி, அவனுக்கு அங்கே மருத்துவம் பார்க்கும் அளவிற்கு எமெர்ஜென்ஸி மருத்துவ வசதிகள் உண்டு!

இதற்கு சீனாவின் HQ-9 வான் பாதுகாப்பும், ரேடார் பாதுகாப்பும் உள்ளது. இதை இந்தியாவில், ராஜஸ்தானில் உள்ள பிஹானூரில் இருந்து ரஃபேல் விமானத்தால் ஏவப்பட்ட ஏவுகணை 102 கிமீ தாண்டி சென்று தாக்கியுள்ளது.

இதில் தாக்குதல் கேட்டு அக்கப்பக்கத்தில் செய்தி பரவி சைக்கிளில் கூட பார்க்க வந்துவிட்டார்கள், ஆனால் சீனாவின் வான்பாதுகாப்பு சிஸ்டத்திற்கு இன்னும் விஷயம் தெரியவில்லை.

இது தற்போதைய மிக மோசமான நிலை என்பதால் சீனா தனது பாதுகாப்பு சிஸ்டத்தை பயன்படுத்தியதாக சொல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தி உள்ளது.

இதில் மசூத் ஆசாத்தின் குடும்பத்தில் அவனது சகோதரி உற்பட 14 பேர் மர்கயா! இந்த பகுதி முற்றிலும் அழிக்கப்பட்டதா? அதில் ஆசாத்தின் நிலை என்ன என்பது இன்னும் தெரியவில்லை.

இந்த நிலையில் PoK கில் பறந்த JF-17 விமானத்தை சுட்டு வீழ்த்தி இருக்கிறார்கள். இது ஒற்றை எஞ்சின் விமானம் என்பதும், மூக்ககுப்பகுதி கருப்பாக இருப்பதால் சீனாவின் JF-17 ஆகத்தான் இருக்க வேண்டும்.

ஆனால் பாகிஸ்தான் இந்தியாவின் விமானம் என்கிறது. இந்தியாவின் மிராஜ் ரக விமானம் மட்டுமே அதுபோல உள்ளது. நம் விமானம் இந்திய எல்லையை கடந்து செல்லவில்லை, என்பது மட்டுமல்ல, நமது அனைத்து விமானமும் திரும்ப தரை இறங்கிவிட்டது என்ற இந்திய ஏர்ஃபோர்ஸ் உறுதி செய்துள்ளது.

அதாவது சீனாவின் எந்த பொருளும் நம்பும்படியாக இல்லை என்பது மீண்டும் உறுதிபட்டுள்ளது.

இது LeT தலைமையகம் மட்டுமல்ல மற்ற தீவிரவாரகளின் தலைமையகமும் தரைமட்டமாகி இருக்கிறது. மொத்தம் 9 இடங்கள், 21 இடங்கள், அதில் 9 இடங்கள் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாரிகளின் தலைமை அலுவலகங்கள்.

#Indhea


சொல்லி அடிப்பேனடி..

அதகளம் பண்ணியிருக்கிறார்கள் நம்மவர்கள். ஆக்ரமிப்பு காஷ்மீர் பகுதியில் துல்லியமான தாக்குதலை நடத்தியது நம் இந்திய விமானப் படை விமானங்கள்.

ஜெய்-ஷி-முகமது, லஷ்கர் ஈ தொய்பா முகாம்களை அடித்து தொம்சம் செய்திருக்கிறார்கள். நம் பக்கத்தில் எந்த ஒரு சேதாரமும் இல்லை.

அதேசமயம் பக்கிகள் ஏகப்பட்ட தவறான தகவல்களை தற்சமயமே பரப்பிப்கொண்டு வருகிறார்கள் .

பாகிஸ்தானிய பிரதமர் ஷப்பா ஷெரிப் இந்திய ராணுவம் ஐந்து நிலைகளை தாக்கியதாக அவர் குற்றஞ்சாட்டிய நிலையில் நம் இந்திய தரப்பில் இருந்து ஏற்கனவே திட்டமிட்டபடி 9 இடங்களை நம் இந்திய நிலப்பரப்பில்…. இந்திய வான் பகுதியில் இருந்தே இந்த தாக்குதல் நடத்தி அதிரடித்திருக்கிறார்கள்.

அட்டகாசமான நகர்வு இது.

ஏனெனில் இன்றைய தினம் இந்தியா முழுவதும் அதி உஷார் நிலைக்கு கொண்டு சென்று போர்க்கால யுத்த ஒத்திகை பார்க்க உத்தரவு கொடுத்தவர்கள்….. இன்று அதிகாலை நேரத்திலேயே பூஞ்ச் மாவட்டத்தில் தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள். அங்கு சேதாரம் அதிகம் என்கிறார்கள்.

யுத்த காலத்தில் எதிர்ப்பாராத நேரத்தில் எதிர்ப்பாராத இடத்தில் பலமாக தாக்குதல் நடத்துவது தான். அதனை மிக செம்மையாக செய்து இருக்கிறார்கள் நம்மவர்கள்.

போதாகுறைக்கு,

குறித்த நாளில்…

குறித்த நேரத்தில் வெகு துல்லியமான தாக்குதலை LOC யில் நடத்தி அசரடித்திருக்கிறார்கள்.

அங்கு… அவர்கள் தரப்பில் இருந்து நம்முடைய இரண்டு விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பொய்யான தகவல்களை பரப்பி வருகின்றனர். ஆனால் அப்படி எந்த ஒரு சேதாரமும் நம் பக்கத்தில் இல்லை.

பஞ்சாப் மாகாணத்தில் யுத்த கால அவசரநிலை பிரகடனம் செய்து இருக்கிறார்கள் அவர்கள்.

இது ஒரு புறம் இருக்க…..

தாக்குதல் நடத்தியது தீவிரவாதிகள் அமைப்புக்கள் மீது தான். பாகிஸ்தானிய ராணுவ நிலைகள் மீதல்ல என்பதை நம் தரப்பில் இருந்து வெளியிட்ட தகவலில் சொல்லாமல் சொல்லி இருக்கிறார்கள்.

அதாவது போர் அறிவிப்பு ஏதும் நம் பக்கத்தில் இருந்து வெளியிடவில்லை என்பது இதன் அர்த்தம்.

இன்னமும் நுட்பமாக சொன்னால்…… நீங்கள் ஆக்கிரமித்து வைத்திருக்கும் காஷ்மீர் பகுதி எங்களுடையது. அங்கு கூடாரம் அமைத்து தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வந்தவர்கள் மீது இந்திய அரசு ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதனால் தேவையில்லாமல் நீங்கள்… அதாவது பாகிஸ்தான் ராணுவம் தலையிடுமானால் விளைவுகள் கடுமையாக இருக்கும் என நேரடியாக, அதேசமயம் கடுமையாக எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள்.

அப்படி என்றால் இது ஒரு சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் போலவா என்றால்……. அதில் தான் விஷயமே இருக்கிறது.

எப்படி….?!?!?

தற்சமயம் இங்கு ஆக்ரமிப்பு காஷ்மீரில் உள்ள இடங்களில் தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள். இதற்கு பதிலடி கொடுக்க பாகிஸ்தான் வந்தால் அது போர். ஒருவேளை திருடனுக்கு தேள் கொட்டிய கதை என பேசாமல் இருந்தால்…. மீதமுள்ள 31 இடங்கள் தாக்க மீண்டும் ஒரு முகூர்த்தம் நிச்சயக்கப்படும்.

இனி இது பாகிஸ்தானுக்கான செக்-மேட்.

ஒடவும் முடியாது ஒளியவும் முடியாது. அதேசமயம் எந்த ஒரு நடவடிக்கைகளையும் அத்தனை சுலபத்தில் எடுக்க முடியாது.

என்ன செய்தாலும் அடி பலமாக விழும். முதுகெலும்பு முறுயும்.

இது பற்றி அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்… சொல்வதற்கு ஒன்றுமில்லை. அதேசமயம் இது வெகுவிரைவில் முடிவுக்கு வந்துவிடும் என்றார்.

நம் தரப்பில் இதற்கு ஆப்ரேஷன் ஸிந்தூர் என இதற்கு பெயர் கொடுத்து இருக்கிறார்கள். நீதி நிலைநாட்டப்பட்டது , ஜெய் ஹிந்த்….என நம் தரப்பில் மிக சுருக்கமாக செய்தி வெளியிட்டு முடித்துக் கொண்டார்கள் நம்மவர்கள்.

வேறோர் விஷயத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.

இது ஏற்கனவே நம் பதிவில் பார்த்தது போல கோச்சார ரீதியில் குறித்த நாளில் தாக்குதல் நடத்தி இருப்பது தான். நிச்சயமாக பாகிஸ்தான் தாக்குதல் நடத்தாது. மீறி நடத்தினால் அது இருக்காது.

அந்த அளவிற்கு மிக மிக துல்லியமான உளவு தரவுகள்… கால நிலை என அத்தனையும் கவனித்தில் கொண்டு கன கச்சிதமாக செய்து இருக்கிறார்கள். அதேசமயம் தந்த்ரோபாயமாக மிக துரிதமாக செயல்பட்டு இருக்கிறார்கள்.

இதற்கு கொடுத்திருக்கும் பெயர் இன்னமும் துல்லியமானது…. தரமானது. ஆபரேஷன் ஸிந்தூர். இதற்கு வெற்றி திலகம் என்றும் ஒரு பொருள். அதேசமயம் நம் இந்திய தேசத்தின் நெற்றி திலகம் போன்ற இடத்தை மீட்டெடுக்கும் முயற்சியின் முதல் நடவடிக்கை என சொல்லாமல் சொல்லி இருக்கிறார்கள்.

  • ஜெய் ஹிந்த் ஸ்ரீராம்

மகளிர் சக்தியே பதிலடி!

இந்தியா இன்று நடத்திய பாகிஸ்தான் மீதான துணிகரமான தாக்குதலுக்கு பெண் வீராங்கனைகளை களமிறக்கியிருக்கின்றது இது பல பதில்களை மிக அர்த்தமாக தருகின்றது

முதலாவது இந்து பெண்கள் குங்குமம் இழந்த கொடிய தீவிரவாதத்துக்கு பதிலடி, காஷ்மீர் பஹல்ஹாமில் சித்திரை மாதம் 9ம் தேதி அதாவது ஏப்ரல் 22ம் தேதி அன்று நடந்த பெரும் தாக்குதலில் இந்து பெண்களின் கதறலுக்கு இந்து பெண்கள் மூலமாகவே பதிலடி கொடுத்து சதிகாரர்கள் கொல்லபட்டிருக்கின்றார்கள் என்பது

இரண்டாவது இது உலக அரங்கில் இந்திய ராணுவத்துக்கு நற்பெயரை பாதுகாக்கும், பெண்களை களமிறக்கி பெண்களுக்கு எதிரான அநீதியினை இந்தியா ஒடுக்குகின்றது என்பது உலக அரங்கில் தனி கவனமும் சலுகையும் பெற்றுதரும்

மூன்றாவது இந்திய ராணுவத்தின் வலிமையான பெண்கள் படை பிரிவு எந்த நாட்டுக்கும் சளைத்தல்ல, இந்தியா பெண்களுக்கு பெரும் இடம் கொடுக்கும் நாடு எனபதை சொல்லி, பாகிஸ்தானை ஒடுக்க பெண்களே போதும் என முகத்தில் அறைந்து சொல்லியிருக்கின்றது

இது நிச்சயம் வரலாற்று புரட்சி

இரு பெண் தளபதிகள் அங்கே அப்படி அறிமுகபடுத்தபடுகின்றார்கள் இவர்கள்தான் தாக்குதலை முன்னின்று செய்தவர்கள்

ஒருவர் சோபியா குரேஷி வயது 35, இவர் குஜராத்தின் வதோரா பகுதியினை சேர்ந்தவர், பயோ கெமிஸ்ட்ரி படிப்புடன் ராணுவத்துக்கு வந்தவர் தன் தனி தைரியம் மற்றும் திறமையால் ராணுவத்தை அசரவைத்து பெரும் இடம் பிடித்தார்

இது அவருக்கு எளிதாக வந்த இடமல்ல, 18 ஆண் தளபதிகளுடன் போராடி தன்னை பல களங்களில் நிருபித்து பெற்ற இடம்

இரண்டாம் பெண் வியோமிக்கா சிங், இவர் உத்திரபிரதேச பக்கம் சார்ந்தவர் என அறியபடுகின்றது, பட்டபடிப்புடன் இந்திய ராணுவ பைலட் பணிக்கு வந்தவர் சுகோய் 30 போன்ற நவீன விமானங்களை வழிநடத்தும் பயிற்சி பெற்றவர் வயது 34 என்கின்றன செய்திகள்

வயோமிக்கா என்றால் காற்று என பொருள்

35 ஆயிரம் அடி உயரத்தில் மின்னல் வேக போர் விமானத்தை கையாள்வது கடினம் அதனை அனாசயமாக செய்திருக்கின்றார் இப்பெண்

இவர்கள் இருவர்தான் இந்த திட்டத்தை வரைந்திருக்கின்றார்கள் , இங்கே மனித உளவு தகவலும் கைகொடுத்திருக்கின்றது

திட்டம் உறுதி செய்யபட்டவுடன் நள்ளிரவு தாக்குதலை, மிக கடினமான இத்தாக்குதலை எளிதாக செய்து முடித்திருக்கின்றார்கள்

இப்போது இந்திய ராஜதந்திரி விக்ரம் சிங்குடன் இருவரும் பத்திரிகைகளுக்கு அறிமுகமானார்கள். உலகம் கைதட்டி வரவேற்கின்றது

பாகிஸ்தானுக்கு இதைவிட அவமானம் வாழ்நாளில் இருக்கவே முடியாது, அந்த தீவிரவாத கூட்டத்துக்கும் இருக்க முடியாது

இது நாயகி தேவி, ஜீஜாபாய், ராணி வேலுநாச்சியார் , தாரபாய் வாழ்ந்த மண் என்பது மீண்டும் உலகுக்கு நிருபிக்கபட்டிருக்கின்றது

இந்த பெண்களை உலக நாடுகள் பாராட்டுகின்றன, வாழ்த்துகின்றன, பாரத தேசம் இப்பெண்களால் பெருமை அடைகின்றது

மோடியின் ஆட்சி அப்படியானது என்பதை உலகம் கைதட்டி வாழ்த்துகின்றது, பாரத பெண்கள் குலம் இன்று பெரும் இடத்தில் நிர்கின்றது

இதைத்தான் அன்றே கனவு கண்டு பாடினான் நெல்லை பாரதி

“நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்,
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்,
திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்;
அமிழ்ந்து பேரிரு ளாமறி யாமையில்
அவல மெய்திக் கலையின்றி வாழ்வதை
உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணற மாகுமாம்
உதய கன்னி உரைப்பது கேட்டீரோ!

உலக வாழ்க்கையின் நுட்பங்கள் தேரவும்,
ஓது பற்பல நூல்வகை கற்கவும்,
இலகு சீருடை நாற்றிசை நாடுகள்
யாவுஞ் சென்று புதுமை கொணர்ந்திங்கே
திலக வாணுத லார்நங்கள் பாரத
தேசமோங்க உழைத்திடல் வெண்டுமாம்;
விலகி வீட்டிலோர் பொந்தில் வளர்வதை
வீரப் பெண்கள் விரைவில் ஒழிப்பாராம்.

சாத்தி ரங்கள் பலபல கற்பாராம்;
சவுரி யங்கள் பலபல செய்வராம்;
மூத்த பொய்ம்மைகள் யாவும் அழிப்பராம்;
மூடக் கட்டுக்கள் யாவுந் தகர்ப்பராம்;
காத்து மானிடர் செய்கை யனைத்தையும்
கடவு ளர்க்கினி தாகச் சமைப்பராம்;
ஏத்தி ஆண்மக்கள் போற்றிட வாழ்வராம்;
இளைய நங்கையின் எண்ணங்கள் கேட்டீரோ!

போற்றி,போற்றி!ஜயஜய போற்றி!இப்
புதுமைப் பெண்ணொளி வாழிபல் லாண்டிங்கே!
மாற்றி வையம் புதுமை யுறச்செய்து
மனிதர் தம்மை அமர்க ளாக்கவே
ஆற்றல் கொண்ட பராசக்தி யன்னைநல்
அருளி நாலொரு கன்னிகை யாகியே
தேற்றி உண்மைகள் கூறிட வந்திட்டாள்
செல்வம் யாவினும் மேற்செல்வம் எய்தினோம்”

அவன் ஆன்மா இன்று ஆனந்த பெருவுகை கொண்டிருக்கும்

பாரதியின் குரு சுவாமி விவேகானந்தர் சொல்வார் “எங்கள் மத பெண்கள் அறிவும், திறமையும் மிக்கவர்கள். எங்கள் சம்பிரதாயத்தில் ரிஷிகள் கூட மனைவியோடுதான் யாகங்கள் செய்வார், சமயத்தில் ரிஷிகள் மந்திரத்தை மறந்தால் கூட மனைவிதான் சொல்லி கொடுப்பாள்

அதாவது பெண் என்பவள் சக்திவாய்ந்த பின்னணி, ஆண் தடுமாறும்போது தாங்கி பிடிப்பவள்

இதனால்தான் எங்கள் தர்மம் ஆண்களை முன்னிறுத்தி பெண்களை பின்னால் வைத்தது, அதன் பெயர் அடிமைதனம் அல்ல, பெண் ப்லவீனமானவள் என்பதால் அல்ல , மாறாக அவளே பலமிக்கவள் ஆண் வீழ்ந்தாலும் அவனை விட மனதால் அறிவால் மிக்க பலமான அவள் வெற்றிய்னை தேடி தருவாள் , அவளே தன்னையும் குடும்பத்தையும் நாட்டையும் காப்பாள் என்பதற்காக‌

இதையே எங்கள் புராணம் சொன்னது , எங்கள் மதம் சொன்னது, எங்கள் வாழ்வியல் தர்மம் சொன்னது

எங்கள் இதிகாசத்தின் பெண்கள் வீரமானவர்கள் எங்கள் சீதையும் பாஞ்சாலியும் சக்திமிக்கவர்கள், அவர்கலே எதிரிகளை அழித்திருக்கலாம் ஆனால் அப்படி செய்தால் தங்கள் கணவர்க்கு அவமானம் என்றே அவர்களுக்காய் விட்டு கொடுத்தார்கள்

இதைத்தான் எங்கள் நாட்டு அரசிகளும் செய்தார்கள்

ஓ உலகத்தீரே, எங்கள் சிவனுக்கே சக்தி கொடுப்பவள் பெண் என கொண்டாடும் மாபெரும் தர்மத்தின் வழி வந்தவனாய் சொல்கின்றேன், உரிய காலம் வரும்போது எங்கள் நாட்டு பெண்கள் எவ்வளவுக்கு ஆற்றல் வாய்ந்தவர்கள் என்பதை உணார்வீர்கள், எங்கள் மதமும் வாழ்வியல் தர்மமும் காலம் காலாமாய் அவர்களை அவ்வளவு சக்திவாய்ந்தவர்களாக உருவாக்கி வைத்திருக்கின்றது”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories