December 5, 2025, 4:26 PM
27.9 C
Chennai

‘ஆபரேஷன் சிந்தூர்’ எனும் வெற்றிச் செய்தி பெருமிதம் தருகிறது!

hindumunnani
hindumunnani

“ஆப்ரேஷன் சிந்தூர்” எனும் வெற்றி செய்தியை கேட்டு பெருமிதப்படுகிறோம். பயங்கரவாதம் முற்றிலும் ஒழிக்கும் வீரதீர செயல் செய்த இந்திய இராணுவத்திற்கு இந்து முன்னணியின் வீர வணக்கம். பாரத இராணுவத்தின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் மக்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று, இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா C.சுப்ரமணியம் சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கையில் குறிப்பிடப் பட்டிருப்பதாவது…

கடந்த ஏப்ரல் இருபத்தி இரண்டாம் தேதி பஹல்காமில் சுற்றுலா வந்த 26 அப்பாவி மக்களை ஈவிரக்கமின்றி பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர்.
இதனால் நாடே சோகத்தில் உறைந்திருந்தது.

இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நமது பாரத இராணுவம் நேற்று “ஆபரேஷன் சிந்தூர்” என்ற பெயரில் பயங்கரவாத முகாம்களை குறி வைத்து தாக்கி அழித்துள்ளதை அனைவரும் வரவேற்றுள்ளனர்.

இந்த முக்கியமான தருணத்தில் மக்கள் அனைவரும் தேசத்தின் நலனைக் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும். உணர்ச்சிகளை தூண்டக்கூடிய வகையில், விமர்சனம் என்று கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வந்தாலோ, கேட்டாலோ அதன் உண்மை தன்மையை அறியாமல் பகிர வேண்டாம். வதந்திகள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

சமீபகாலமாக சமூக வலைத்தளங்களில் எந்த நிகழ்வு நடந்தாலும் அதற்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு என கருத்து மோதல்கள் உருவாகி வருகிறது. ஆப்ரேஷன் சிந்தூர் விஷயத்தில் இணையத்தில் கருத்து சொல்வதை தவிர்ப்போம்.

கடந்த காலங்களில் நமது தேசம் அண்டை நாடுகளுடன் போர் புரியும் போது எத்தகைய சூழல்களில் ஒத்துழைப்பு கொடுத்தோமோ அதைவிட நூறு சதவீதம் இப்பொழுதும் ஒத்துழைப்பு கொடுப்போம்.

அதேபோல நமது இராணுவத்தை பற்றியோ, தேசத்தை பற்றியோ தவறான தகவல்களை யாரேனும் பரப்பினால் உடனடியாக நேரிலோ, தொலைபேசி மூலமோ, இணைய வழியிலோ தேசிய புலனாய்வு முகமையில் புகார் அளிப்போம். அதேபோல இன்று நாட்டின் பல மாவட்டங்களில் போர் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற உள்ளது.

அந்தந்த மாவட்டங்களில் உள்ள மக்கள், அதற்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து நமது ராணுவத்திற்கு வலு சேர்க்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறோம். பயங்கரவாதத்தை ஒழிக்கும் இந்திய இராணுவ நடவடிக்கைகளுக்கு எல்லோரும் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories