‘ஆபரேஷன் சிந்தூர்’ எனும் வெற்றிச் செய்தி பெருமிதம் தருகிறது!

hindumunnani
hindumunnani

“ஆப்ரேஷன் சிந்தூர்” எனும் வெற்றி செய்தியை கேட்டு பெருமிதப்படுகிறோம். பயங்கரவாதம் முற்றிலும் ஒழிக்கும் வீரதீர செயல் செய்த இந்திய இராணுவத்திற்கு இந்து முன்னணியின் வீர வணக்கம். பாரத இராணுவத்தின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் மக்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று, இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா C.சுப்ரமணியம் சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கையில் குறிப்பிடப் பட்டிருப்பதாவது…

கடந்த ஏப்ரல் இருபத்தி இரண்டாம் தேதி பஹல்காமில் சுற்றுலா வந்த 26 அப்பாவி மக்களை ஈவிரக்கமின்றி பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர்.
இதனால் நாடே சோகத்தில் உறைந்திருந்தது.

இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நமது பாரத இராணுவம் நேற்று “ஆபரேஷன் சிந்தூர்” என்ற பெயரில் பயங்கரவாத முகாம்களை குறி வைத்து தாக்கி அழித்துள்ளதை அனைவரும் வரவேற்றுள்ளனர்.

இந்த முக்கியமான தருணத்தில் மக்கள் அனைவரும் தேசத்தின் நலனைக் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும். உணர்ச்சிகளை தூண்டக்கூடிய வகையில், விமர்சனம் என்று கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வந்தாலோ, கேட்டாலோ அதன் உண்மை தன்மையை அறியாமல் பகிர வேண்டாம். வதந்திகள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

சமீபகாலமாக சமூக வலைத்தளங்களில் எந்த நிகழ்வு நடந்தாலும் அதற்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு என கருத்து மோதல்கள் உருவாகி வருகிறது. ஆப்ரேஷன் சிந்தூர் விஷயத்தில் இணையத்தில் கருத்து சொல்வதை தவிர்ப்போம்.

ALSO READ:  யானைகள் அணிவகுப்புடன், திருச்சூர் பூரம் விழா கொண்டாட்டம்!

கடந்த காலங்களில் நமது தேசம் அண்டை நாடுகளுடன் போர் புரியும் போது எத்தகைய சூழல்களில் ஒத்துழைப்பு கொடுத்தோமோ அதைவிட நூறு சதவீதம் இப்பொழுதும் ஒத்துழைப்பு கொடுப்போம்.

அதேபோல நமது இராணுவத்தை பற்றியோ, தேசத்தை பற்றியோ தவறான தகவல்களை யாரேனும் பரப்பினால் உடனடியாக நேரிலோ, தொலைபேசி மூலமோ, இணைய வழியிலோ தேசிய புலனாய்வு முகமையில் புகார் அளிப்போம். அதேபோல இன்று நாட்டின் பல மாவட்டங்களில் போர் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற உள்ளது.

அந்தந்த மாவட்டங்களில் உள்ள மக்கள், அதற்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து நமது ராணுவத்திற்கு வலு சேர்க்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறோம். பயங்கரவாதத்தை ஒழிக்கும் இந்திய இராணுவ நடவடிக்கைகளுக்கு எல்லோரும் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 25 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

ஹெச்.ராஜாயிஸமா? பொன்னாரிஸமா? தமிழிசையிஸமா? முருகனிஸமா? அண்ணாமலையிஸமா?

பஞ்சாங்கம் மே 24 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மே 23 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

எங்கேயிருந்தும் யாரிடமிருந்தும் குறைகள், குற்றச் செயல்கள் குறித்து ஆதாரங்கள் வெளிவந்தால் தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Topics

பஞ்சாங்கம் மே 25 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

ஹெச்.ராஜாயிஸமா? பொன்னாரிஸமா? தமிழிசையிஸமா? முருகனிஸமா? அண்ணாமலையிஸமா?

பஞ்சாங்கம் மே 24 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மே 23 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

எங்கேயிருந்தும் யாரிடமிருந்தும் குறைகள், குற்றச் செயல்கள் குறித்து ஆதாரங்கள் வெளிவந்தால் தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

விஜயின் வெற்றி – அதிர்ஷ்டமா? ஆளுமையா?

இலங்கை ஜெயராஜ் - இலக்கியப் பேச்சாளர்கேள்வி: விஜய்யின் தேர்தல் வெற்றியினைப் பார்த்தீர்களா?...

செங்கோட்டை – பெங்களூரு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கம்!

பெங்களூரு-செங்கோட்டை - பெங்களூரு கன்டோன்மென்ட் இடையே ஒரு வழி சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கம்!

வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அருணாச்சல பிரதேசம்

சுதர்சன் ஜி தான் அருணாச்சல பிரதேசத்துக்கு வந்த முதல் சர்சங்கசாலக். 2007 ல் அவர் அந்த மாநிலத்திற்கு விஜயம் செய்தார் . 2011 ல் முதன்முதலாக அந்த மாநிலத்தில் சங்க சிக்ஷா வர்க எனப்படும் இருபது நாட்கள் நடைபெறும் பயிற்சி முகாம் நடந்தது. நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அதில் பயிற்சி பெற்றனர்.

Entertainment News

Popular Categories