டெஸ்ட் போட்டிகளில் இருந்து… விடைபெற்ற விராட் கோலி! 

virat kohli retiring from test cricket - 2026

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விராட் கோலி ஓய்வு முடிவை அறிவித்திருக்கிறார். தாம் 14 ஆண்டு காலமாக டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இந்தியாவுக்காக விளையாடியதை சுட்டிக்காட்டி தனது ஓய்வு முடிவை அவர் அறிவித்துள்ளார்.  

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து அதிகாரபூர்வமாக ஓய்வு பெறுவதாக, ஓர் உணர்ச்சிபூர்வமான சமூக ஊடகப் பதிவு மூலம் உறுதிசெய்துள்ளார். இது குறித்து தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் அவர் குறிப்பிட்ட போது, இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது எப்போதுமே சிறப்பு வாய்ந்த ஒன்று  என்று குறிப்பிட்டுள்ளார். 

கிரிக்கெட்டில் அவரது தீவிர ஆர்வம், தலைமைத்துவம் மற்றும் பங்களிப்புகள் உடற்தகுதி மற்றும் விளையாட்டில் புதிய அளவுகோல்களை அமைத்தது மட்டுமல்லாமல், டி20 கிரிக்கெட் எழுச்சியின் மத்தியில் விளையாட்டின் நீண்ட வடிவத்தில் அவருக்கு இருந்த ஆர்வத்தை மீண்டும் உயிர்ப்பித்ததன் ஒரு சகாப்தத்தின் முடிவை அவரது விலகல் குறிக்கிறது. 

ALSO READ:  ₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

கோலியின் ஓய்வு, கவுதம் கம்பீர் உள்ளிட்ட கிரிக்கெட் பிரபலங்களிடமிருந்து மனமார்ந்த வாழ்த்துகளைப் பெற்றுள்ளது, இது விளையாட்டில் அவர் ஏற்படுத்திய தாக்கத்திற்கான பரவலான பாராட்டைப் பிரதிபலிக்கிறது. 

இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இங்கிலாந்து செல்ல உள்ள நிலையில் கோலி ஓய்வினை அறிவித்துள்ளது இப்போது பேசுபொருளாகியுள்ளது. 

விராட் கோலி, 2011ம் ஆண்டு ஜூன் 20ம் தேதி மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட் வாழ்வைத் தொடங்கினார். இந்திய அணிக்காக 123 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளார் 123 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்காக 9,230 ரன்களைக் குவித்துள்ளார்

இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் 30 சதங்களையும், 31 அரை சதங்களையும் விளாசியுள்ளார்  இந்திய அணிக்காக ஒரு இன்னிங்சில் 254 ரன்கள் குவித்ததே கோலியின் அதிகபட்ச டெஸ்ட் ஸ்கோர்.  இந்திய அணிக்காக 68 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்ட கோலி 40 போட்டிகளை வென்று கொடுத்தவர்

இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக அதிக முறை சதம் மற்றும் இரட்டை சதம் அடித்தவர் இவர். டெஸ்ட் கேப்டனாக இருந்த போது இந்திய அணிக்காக 7 முறை இரட்டை சதம் அடித்துள்ளார். இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன்களில் அதிக ரன்கள் அடித்தவர் என்ற பெருமையும் விராட் கோலிக்கு உண்டு

ALSO READ:  தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

விராட் கோலியின் டெஸ்ட் போட்டிகளிலான ஓய்வு முடிவு குறித்து இந்நாள் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், பிரபலங்கள் பலர் சமூகத் தளங்கள்ல் கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். 

சச்சின் டெண்டுல்கர் தனது பக்கத்தில் குறிப்பிட்டிருப்பதாவது : 

நீங்கள் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும்போது ஒரு சம்பவத்தை நினைவுகூர்கிறேன்.  ​​12 ஆண்டுகளுக்கு முன்பு, எனது கடைசி டெஸ்ட் போட்டியின் போது, ​​உங்கள் சிந்தனைமிக்க செயல் எனக்கு நினைவுக்கு வருகிறது. உங்கள் மறைந்த தந்தையிடமிருந்து ஒரு நூலை எனக்கு பரிசளிக்க முன்வந்தீர்கள். அது எனக்கு மிகவும் தனிப்பட்ட ஒன்று, அதை நான் ஏற்றுக்கொள்ள முடியாது, ஆனால் அந்தச் செயல் மனதைத் தொடும் விதமாக இருந்தது. அன்றிலிருந்து இன்றுவரை என்னுடன் இருந்து வருகிறது. பதிலுக்கு என்னிடம் ஒரு நூலும் இல்லை என்றாலும், நீங்கள் எனது ஆழ்ந்த பாராட்டையும் வாழ்த்துக்களையும் கொண்டுள்ளீர்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள். விராட், உங்கள் உண்மையான மரபு, எண்ணற்ற இளம் கிரிக்கெட் வீரர்களை விளையாட்டை எடுக்க ஊக்குவிப்பதில் உள்ளது. என்ன ஒரு நம்பமுடியாத டெஸ்ட் வாழ்க்கை உங்களுக்கு இருந்தது! நீங்கள் இந்திய கிரிக்கெட்டுக்கு அதிகமான ரன்களை வழங்கியுள்ளீர்கள் – நீங்கள் அதற்கு ஆர்வமுள்ள ரசிகர்கள் மற்றும் வீரர்களை வழங்கியுள்ளீர்கள். மிகவும் சிறப்பு வாய்ந்த டெஸ்ட் வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள். – என்று கூறியுள்ளார். 

ALSO READ:  ஐபிஎல் 2026: இதுவரை... புள்ளிப் பட்டியலில் பஞ்சாப் முதலிடம்!

விராட் கோலியின் ஓய்வு முடிவுக்கு பிசிசிஐயும் நன்றியும் வாழ்த்தும் வெளியிட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

பஞ்சாங்கம் மே 31- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories