June 13, 2025, 7:04 PM
35.4 C
Chennai

மக்களிடம் விளக்குகிறார் மோடி… ஆபரேஷன் சிந்தூர் பற்றி … இன்று இரவு 8 மணிக்கு!

pm modi in bihar campaign

கடந்த ஏப். 22ம் தேதி  காஷ்மீர் மாநிலம் பஹல்காமில்  பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் சுற்றுலா சென்றிருந்த 26 அப்பாவி ஆண்கள் உயிரிழந்தனர்.  அப்போது,  அங்கிருந்த பெண்களிடம், “போய் மோடியிடம் சொல்” என்று  பயங்கரவாதிகள் எச்சரித்துவிட்டு சென்றனர். 

 இந்த தகவல் பெரிய அளவில் பேசப்பட்ட நிலையில்,  சம்பவம் குறித்து கேள்விப்பட்ட பிரதமர் மோடி தனது  சவுதி அரேபியா நாட்டு சுற்றுப்பயணத்தை பாதியிலேயே முடித்துக் கொண்டு அவசர அவசரமாக நாடு திரும்பி அன்று இரவே விமான நிலையத்தின் ஒரு பகுதியில் வைத்து பாதுகாப்பு ஆலோசனை மேற்கொண்டார். 

 தொடர்ந்து இரு வாரங்கள்  எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முப்படைகளுடன் ஆலோசனை நடத்தி ராணுவத்திற்கு முழு சுதந்திரத்தையும் அளித்தார்.  சம்பவம் நடந்து இரண்டு வாரங்கள் கழித்து மே 6ஆம் தேதி நள்ளிரவு பாகிஸ்தானில் உள்ள  9 பயங்கரவாத முகாம்களைக்  குறி வைத்து துள்ளிய தாக்குதலை இந்திய விமான படை மேற்கொண்டது.  அதைத் தொடர்ந்து இரு தரப்பிலும் தாக்குதல்கள் நடைபெற்றன.  இதில் பாகிஸ்தான் தரப்பில் பலத்து சேதம் ஏற்பட்டது.

 இந்த நடவடிக்கைகள் குறித்து பாரத ராணுவ அதிகாரிகளே மக்களிடம் பத்திரிகையாளர் சந்திப்புகள் மூலம் விளக்கி வந்த நிலையில்,  முதல் முறையாக நாட்டு மக்களுக்கு விளக்குவதற்காக இன்று இரவு 8 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி  உரையாற்ற உள்ளார்.  அவரது உரையினை தூர்தர்ஷன் சேனல்கள் மற்றும் அனைத்து வானொலி நிலையங்களும் ஒலிபரப்புகின்றன.

 இருநாட்டு ராணுவ நடவடிக்கைகளும் இரு தினங்களுக்கு முன் பரஸ்பர பேச்சுவார்த்தை மற்றும் புரிந்துணர்வு அடிப்படையில் நிறுத்திக் கொள்ளப்பட்ட நிலையில் பாகிஸ்தான் பிரதமர் ஷஃபா ஷெரீப் பாகிஸ்தான் தொலைக்காட்சிகளில் தோன்றி  இந்தியாவுக்கு எதிரான போரில் பாகிஸ்தான் வெற்றி பெற்றதாக அறிவித்தார். தொடர்ந்து  பாகிஸ்தான் ராணுவ தளபதிகள் டிவி பேட்டிகளில் பாகிஸ்தான் வெற்றி பெற்றதாக  அறிவிப்புகளை வெளியிட்டு வந்தனர் மேலும் இந்தியாவின் விமானங்களையும் விமானத்தளங்களையும் தாக்கி அழித்ததாகவும்  கூறி வருகின்றனர்.

 பாகிஸ்தான் கூறும் பொய்களை நம்பி இந்தியாவில் உள்ள சிலரும் அரசியல்வாதிகள் சிலரும் கேள்விகள் எழுப்பி வருகின்றனர்.  இந்நிலையில் இந்திய தரப்பின் நிலையை விளக்குவதற்காகவும் உண்மை நிலையை எடுத்துரைப்பதற்காகவும் நாட்டு மக்களிடையே நிலவும் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வகையிலும் பிரதமர் நரேந்திர மோடி இன்று மக்களை ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை எடுத்த  பிறகு முதல் முறையாக சந்திக்கிறார்.  எனவே இந்த பிரதமரின் உரை குறித்து மக்களிடையே எதிர்பார்ப்பு அதிகம் எழுந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

விமான விபத்தில் உயிரிழந்தோருக்கு மதுரையில் அஞ்சலி!

அகமதாபாத் விமான விபத்தில் உயிர் இழந்தவர்களுக்கு மதுரையில் சிறப்பு பிரார்த்தனை -தீப அஞ்சலி செலுத்தப்பட்டது.

சம்பளம் வழங்கக் கோரி மதுரை பல்கலை., பணியாளர்கள் போராட்டம்!

ஆண்டுகளாகவே காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர்கள் ஊழியர்கள், அலுவலர்கள் சம்பளம் ஓய்வூதியம் வழங்கப்படாத கண்டித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு

போயிங் போய்விட்டது! 11A மட்டும் தப்பியது!

விமானம் மேலேற முடியாமல் திணறி தரை இறங்கியுள்ளது.அதாவது பறக்க போதிய உந்துவிசை கிடைக்காமல் தரையில் விழுந்துள்ளது.

பஞ்சாங்கம் ஜூன் 13 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

அகமதபாதில் விமானம் விழுந்து பயங்கர விபத்து!

அமித் ஷா மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு ஆகியோரை அகமதாபாத் செல்ல உத்தரவிட்டார்.

Topics

விமான விபத்தில் உயிரிழந்தோருக்கு மதுரையில் அஞ்சலி!

அகமதாபாத் விமான விபத்தில் உயிர் இழந்தவர்களுக்கு மதுரையில் சிறப்பு பிரார்த்தனை -தீப அஞ்சலி செலுத்தப்பட்டது.

சம்பளம் வழங்கக் கோரி மதுரை பல்கலை., பணியாளர்கள் போராட்டம்!

ஆண்டுகளாகவே காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர்கள் ஊழியர்கள், அலுவலர்கள் சம்பளம் ஓய்வூதியம் வழங்கப்படாத கண்டித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு

போயிங் போய்விட்டது! 11A மட்டும் தப்பியது!

விமானம் மேலேற முடியாமல் திணறி தரை இறங்கியுள்ளது.அதாவது பறக்க போதிய உந்துவிசை கிடைக்காமல் தரையில் விழுந்துள்ளது.

பஞ்சாங்கம் ஜூன் 13 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

அகமதபாதில் விமானம் விழுந்து பயங்கர விபத்து!

அமித் ஷா மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு ஆகியோரை அகமதாபாத் செல்ல உத்தரவிட்டார்.

பெண்களை ‘ஓஸி’ என கேலி பேசும் திமுக.,வினர் இனி வெட்டியாக வீட்டில் அமர்வார்கள்!

வரும் 2026 தேர்தலில், ஒவ்வொரு திமுக சட்டமன்ற உறுப்பினரையும் தோற்கடித்து, வீட்டில் உட்கார வைத்து, உங்கள் ஆணவத்துக்கு பொதுமக்கள் பதிலடி கொடுப்பார்கள்.

UPI பரிவர்த்தனைகளுக்கு கட்டணமா? மத்திய நிதி அமைச்சகம் சொல்வது என்ன?

UPI பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் கிடையாது என்று, மத்திய நிதி அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. செய்தி ஊடகங்களின் தவறான தகவல்களுக்கு

பஞ்சாங்கம் ஜூன் 12 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories