1000வது டெஸ்டில் இங்கிலாந்து : ஐசிசி வாழ்த்து

15 July31 England - 202615 July31 England - 2026இங்கிலாந்து அணி வரலாற்று சிறப்புமிக்க 1000வது டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளதற்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வாழ்த்து தெரிவித்துள்ளது. இந்திய அணியுடன் பர்மிங்காமில் நாளை தொடங்கும் முதல் டெஸ்ட் போட்டி, இங்கிலாந்து களமிறங்கும் 1000வது டெஸ்ட் போட்டியாகும். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 1877 மார்ச்சில் தனது முதல் டெஸ்ட் போட்டியில் மோதிய அந்த அணி இதுவரை விளையாடி உள்ள 999 டெஸ்டில், 357ல் வெற்றி பெற்றுள்ளது. 297 டெஸ்டில் தோல்வி கண்டுள்ள அந்த அணி, 345 போட்டியை டிரா செய்துள்ளது. பர்மிங்காம் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் 1902ல் இருந்து இதுவரை 50 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ள இங்கிலாந்து 27 வெற்றி, 8 தோல்வி, 15 டிரா கண்டுள்ளது. வரலாற்று சிறப்புமிக்க 1000வது டெஸ்டில் விளையாட உள்ள இங்கிலாந்து அணிக்கு, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வாழ்த்து தெரிவித்துள்ளது. இது குறித்து ஐசிசி தலைவர் ஷஷாங்க் மனோகர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘1000வது டெஸ்டில் விளையாடும் இங்கிலாந்து அணிக்கு கிரிக்கெட் குடும்பத்தின் சார்பில் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த சாதனை மைல்கல்லை எட்டும் முதல் அணி என்பதில் கூடுதல் மகிழ்ச்சி. கிரிக்கெட் விளையாட்டின் மணிமகுடமாக விளங்கும் டெஸ்ட் போட்டிகளுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வருவதுடன் உலகத் தரம் வாய்ந்த வீரர்களை உருவாக்குவதையும் தொடர வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார். இந்த சரித்திர நிகழ்வை கவுரவிக்கும் வகையில், நியூசிலாந்து அணி முன்னாள் கேப்டனும் சிறப்பு போட்டி நடுவர்கள் குழுவின் உறுப்பினருமான ஜெப் குரோ, ஐசிசி சார்பில் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியத் தலைவர் கோலின் கிரேவ்சுக்கு போட்டி தொடங்குவதற்கு முன்பாக வெள்ளிக் கோப்பையை நினைவுப் பரிசாக அளிக்க உள்ளார். l 1932 ஜூனில் இருந்து இதுவரை இந்திய அணியுடன்117 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ள இங்கிலாந்து 43 வெற்றி, 25 தோல்வி, 49 டிரா கண்டுள்ளது.  l சொந்த மண்ணில் விளையாடிய போட்டிகளில் இங்கிலாந்து 30 வெற்றியும், இந்தியா 6 வெற்றியும் பெற்றுள்ளன. 21 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன. l எட்ஜ்பாஸ்டனில் இரு அணிகளும் 6 முறை மோதியுள்ளதில், இங்கிலாந்து 5-0 என முன்னிலை வகிக்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories