டிஎன்பிஎல் தொடரில் இன்று இரவு 7.15 மணிக்கு நெல்லை சங்கர் நகரில் உள்ள இந்தியா சிமெண்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் முதலாவது தகுதி சுற்று ஆட்டத்தில் முதலிடம் பிடித்த திண்டுக்கல் டிராகன்ஸ் அணி, 2-வது இடம் பெற்ற மதுரை பாந்தர்ஸ் அணியுடன் மோதுகிறது. இதில் வெற்றி பெறும் அணி வருகிற 12-ம் தேதி சென்னையில் நடைபெறும் இறுதிப்போட்டிக்கு நேரடியாக தகுதி பெறும். இதில் தோல்வி காணும் அணி நத்தத்தில் 10-ந் தேதி நடைபெறும் இரண்டாவது தகுதி சுற்று ஆட்டத்தில் விளையாட வேண்டும். அதில் வெற்றி பெற்றால் இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியும்.
3-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர் கடந்த ஜூன் 11-ம் தேதி தொடங்கி நெல்லை, திண்டுக்கல், சென்னை ஆகிய இடங்களில் நடந்து வருகிறது. இந்த போட்டி விறுவிறுப்பான இறுதி கட்டத்தை எட்டி விட்டது. நேற்று முன்தினத்துடன் 28 லீக் ஆட்டங்கள் முடிவுக்கு வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.