சிலைக் கடத்தல் வழக்குகளை சிபிஐ.,க்கு மாற்றியது நீதிமன்ற அவமதிப்பு செயல்: உயர் நீதிமன்றம்

16 June03 high court - 2026

சென்னை: சிலைக் கடத்தல் தொடர்பான வழக்குகளை சி.பி.ஐ.க்கு மாற்றும் தமிழக அரசின் உத்தரவு என்பது நீதிமன்ற அவமதிப்புச் செயல் என்று கருத்து தெரிவித்துள்ள உயர் நீதிமன்றம், இந்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது. மேலும், இந்த அரசாணை ஒரு நிமிடம் கூட  அமலில் இருக்க அனுமதிக்க முடியாது; இது குறித்து தமிழக அரசு விரிவான பதில் அளிக்க வேண்டும் என்று கூறியது.

இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள தமிழக ஆலயங்களில்  சிலைகள் திருட்டுப் போனது குறித்து சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜி பொன்.மாணிக்கவேல் தலைமையிலான குழுவினர் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் பொன். மாணிக்கவேலை இடமாற்றம் செய்தது தமிழக அரசு. ஆனால், நீதிமன்றம் தங்கள் கண்காணிப்பில் இந்த வழக்கை மிகவும் உணர்வுபூர்வமாக அணுகுவதாகக் கூறியது. இதை அடுத்து நீதிமன்ற அனுமதியுடன் பணியைத் தொடர்ந்த பொன்மாணிக்கவேல்  விசாரணையில் தமக்கு நம்பிக்கை இல்லை என்று தமிழக அரசு கூறியது. மேலும், சிலைக்கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றித் தமிழக அரசு ஆணை பிறப்பித்தது.

ALSO READ:  டெட் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பில் உடனடி சட்ட நிவாரணம் தேவை!

தமிழக அரசின் ஆணையை எதிர்த்து வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் ஒரு வழக்கு தொடர்ந்தார். அதன் மீதான விசாரணை இன்று மீண்டும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஆதிகேசவலு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிமன்றத்தில் ஆஜரான மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், சிலை கடத்தல் வழக்குகளை சி.பி.ஐ.க்கு மாற்றுவதன் மூலம், யாரையோ காப்பாற்ற அரசு முயற்சிக்கிறது என்று கூறினார். சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு நீதிமன்றத்தால் அமைக்கப்பட்டு ஓராண்டாகியும், அந்த அமைப்புக்கு இதுவரை போதுமான ஒத்துழைப்பு அளிக்காத தமிழக அரசு, தற்போது வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றியதில் உள்நோக்கம் இருப்பதாகவும், அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்றும்  நீதிமன்றத்தில் கேட்டுக் கொண்டார்.

அப்போது ஆஜரான கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர், மனுதாரரின் குற்றச்சாட்டு தவறானது என்று கூறினார். முன்னர் அவரே இந்த வழக்குகளை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று கோரினார். மேலும், இது அரசின் கொள்கை முடிவு என்பதால், தடை விதிக்கக் கூடாது, விரிவான முறையில் பதிலளிக்க அரசுத் தரப்புக்கு கால அவகாசம் வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

ALSO READ:  மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

அப்போது, சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவை அமைத்து ஓர் ஆண்டு ஆகியும் அரசு ஒத்துழைப்பு வழங்காதது ஏன்? சிலை கடத்தல் தொடர்பாக நீதிமன்றம் பிறப்பித்த 23 உத்தரவுகளை தமிழக அரசு அமல்படுத்தவில்லை. தற்போது அந்த வழக்குகளை அவசர அவசரமாக சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டிய அவசியம் என்ன? என்று கேள்வி எழுப்பினார் நீதிபதி மகாதேவன்.

அப்போது குறுக்கிட்ட அரசுத் தரப்பு வழக்கறிஞர், நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு விசாரிக்கும்; போலீஸ் விசாரணையில் இருக்கும் வழக்குகளையும் புதிய வழக்குகளையுமே சி.பி.ஐ. விசாரிக்கும் என்று  விளக்கம் அளித்தார்.

ஆனால் அவரது விளக்கத்தை நீதிபதிகள் ஏற்க மறுத்தனர். தமிழக அரசின் இந்த அரசாணை ஒரு நிமிடம் கூட அமலில் இருக்க அனுமதிக்க முடியாது; சி.பி.ஐ.க்கு மாற்றும் அரசின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்கப் படுகிறது; தமிழக அரசு விரிவான பதிலளிக்கவேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணை நாளை நடைபெறும் என்று  ஒத்தி வைத்தனர்.

ALSO READ:  மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்:

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 11 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 11 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூலை 10 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

FIFA 2026: ரவுண்ட் 16… கடைசி நான்கு ஆட்டங்கள், அதிர்ச்சித் தோல்விகள்!

காலிறுதிச் சுற்றுக்கு முந்தைய சுற்றின் கடைசி ஆட்டம் வான்கூவரில் சுவிட்சர்லாந்து, கொலம்பியா அணிகளுக்கிடையே நடந்தது. இதில் இருஅணிகளும் ஆட்டநேர முடிவு வரை கோல் எதுவும் போடவில்லை. எக்ஸ்ட்ரா டைமான அடுத்த 30 நிமிடத்திலும்

பஞ்சாங்கம் ஜூலை 09 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories