இங்கிலாந்து- இந்தியா அணிகளுக்கு இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி, லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்தது. இந்த டெஸ்ட் போட்டியுடன் இங்கிலாந்து வீரர் அலெஸ்டர் குக் ஓய்வு பெறுகிறார். இந்த டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் 71 ரன்கள் எடுத்த குக், 2வது இன்னிங்ஸில் 147 ரன்கள் விளாசினார். இது அவருக்கு 33வது சர்வதேச டெஸ்ட் சதமாகும். இதை பாராட்டியுள்ள பத்த்ரிகை துறையை சேர்ந்தவர்கள், இதை நினைவு கூறும் வகையில், குக்கிற்கு, 33 பீர் பாட்டில்களை பரிசாக அளித்துள்ளனர்.


