வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம்

03 Oct11 Cricket - 2026

இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் படுதோல்வியை சந்தித்த மேற்கிந்திய தீவுகள் அணி, கடும் விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளது. இன்று தொடங்க உள்ள 2வது டெஸ்ட் போட்டியிலும் அந்த அணியை வீழ்த்தி தொடரை வெல்ல காத்திருக்கிறது இந்திய அணி.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. கிறிஸ் கெய்ல், கேமர் ரோச், சாமுவேல்ஸ் போன்ற அனுபவ வீரர்கள் இல்லாத நிலையில், மேற்கிந்திய தீவுகள் அணி பரத்வெயிட் தலைமையில் முதல் டெஸ்டில் களம் இறங்கியது. சொந்த மண்ணில் முழு பலத்துடன் களம் இறங்கிய இந்திய அணியை, மேற்கிந்திய தீவுகள் அணியால் கட்டுப்படுத்த முடியவில்லை.

இதன் பிரதிபலனாக அறிமுகப்போட்டியில் தொடக்க ஆட்டக்காரராக களம் கண்ட, இளம் வீரர் ப்ரித்வி ஷா சதம் அடித்து அசத்தினார். போதாக்குறைக்கு மற்ற வீரர்களும் தங்கள் பங்குக்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, ஒரு இன்னிங்ஸ் மற்றும் 272 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவிடம் சரண் அடைந்தது மேற்கிந்திய தீவுகள் அணி. இதனால் கடும் விமர்சனத்துக்குள்ளான அந்த அணி, 2வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நாளை 2வது டெஸ்ட் தொடங்க உள்ள நிலையில், இரு அணி வீரர்களும் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் கேப்டன் ஹோல்டர், வேகப்பந்து வீச்சாளர் கேமர் ரோச் அணிக்கு திரும்பியுள்ளது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு நம்பிக்கை அளிக்கிறது. இந்திய அணிக்கு சத்தமில்லாமல் நெருக்கடி கொடுக்க உள்ளதாக கேப்டன் ஹோல்டர் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் இந்திய அணியின் வலுவான பேட்டிங் வரிசையும், பந்து வீச்சும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தலாம்.

இதற்கிடையே, அறிமுக வீரர் ப்ரித்வி ஷாவை, அதிரடி வீரர் ஷேவாக்குடன் ஒப்பிட வேண்டாம் என கவுதம் கம்பீர் கூறியுள்ளார். கிரிக்கெட் வாழ்க்கையை ப்ரித்வி தற்போது தான் தொடங்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ள கம்பீர், அவருக்கு இனி தான் சவால்கள் காத்திருக்கின்றன என கூறியுள்ளார்.

நாளை தொடங்கும் 2வது டெஸ்ட் போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை வெல்ல இந்திய அணி முனைப்பு காட்டும் வேளையில், மேற்கிந்திய தீவுகள் அணியும் இந்திய அணிக்கு நெருக்கடி கொடுக்க தயாராக இருப்பதால், இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Topics

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories