Tag: சுண்டல்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பகம் சாப்டூர் வனச்சரகத்தில் உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில் பிரசித்தி பெற்ற ஆடி அமாவாசை திருவிழா ஆக 12 ஆம் தேதி நடைபெற உள்ளது.
ஆடிப்பெருக்கை முன்னிட்டு சிவகாசியில் சிறப்பு பூஜையுடன் புதிய காலண்டர் ஆல்பம் வெளியிடப்பட்டு காலண்டர் உற்பத்தி துவங்கப்பட்டது. மாத முதல் நாளிலேயே அந்த மாதத்திற்கான விடுமுறை நாட்களை அறிந்து கொள்ளும் வைகையில் நாட்காட்டி தயாரித்துள்ளது வரவேற்பை பெற்றுள்ளது.குட்டி ஜப்பான் என அழைக்கப்படும் சிவகாசியில் பட்டாசு மற்றும் அச்சு தொழில் பிரதானமாக விளங்கி...

நவராத்திரி ஸ்பெஷல்: பாசிப்பருப்பு சுண்டல்!

பாசிப்பருப்பை வெறும் வாணலியில் வாசனை வரும் வரை வறுத்து, ஒரு மணி நேரம் ஊறவிடவும். பின் அதை மலர வேகவிடவும். வாணலியில் எண்ணெய் சூடாக்கி.. கடுகு, உளுத்தம்பருப்பு, கீறிய பச்ச மிளகாய், கறிவேப்பிலை, இஞ்சித்துருவல், பெருங்காயத்தூள் தாளித்து, வேக வைத்த பருப்பு, உப்பு சேர்த்துக் கிளறவும். தேங்காய்த் துருவல் சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான பாசிப்பருப்பு சுண்டல் ரெடி.

நவராத்திரி ஸ்பெஷல்: காராமணி இனிப்பு சுண்டல்!

வெள்ளை காராமணியை 6 மணி நேரம் ஊறவிட்டு, வேகவிட்டு எடுக்கவும். வெல்லத்தைக் கரைத்து, வடிகட்டி கெட்டிப்பாகு காய்ச்சவும். வாணலியில் நெய்யை சூடாக்கி, காராமணியை சேர்க்கவும். கூடவே, காய்ச்சிய வெல்லப்பாகு, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறவும். இறக்குவதற்கு முன் தேங்காய்த் துருவல் தூவி இறக்கவும்.

ஆரோக்கிய சமையல் : கொள்ளு சுண்டல்

கொள்ளு, காராமணி, பச்சைப் பயறு ஆகியவற்றை ஒன்றாக முதல் நாள் இரவு ஊற வைக்கவும். மறுநாள் குக்கரில் வேக வைக்கவும். பிறகு நீரை வடிக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் தாளித்து… வேக வைத்த கொள்ளு கலவையை சேர்க்கவும். உப்பு போட்டு கிளறவும். கடைசியில் ப்ளாக்ஸ் சீட் பொடியைத் தூவி இறக்கவும்.

Recent articles

spot_img