Tag: மேட்டூர்

  • கேஆர்எஸ் அணை நீர் திறப்பு நிறுத்தம்; 3வது முறையாக நிரம்பிய மேட்டூர் அணை!

    மேட்டூர் அணை நீர்மட்டம் மூன்றாவது முறையாக முழுக் கொள்ளளவை எட்டியுள்ளது. கர்நாடக அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரிநீரின் அளவு குறைக்கப் பட்டுள்ள நிலையில், கேஆர்எஸ் அணையில் இருந்து நீர் வெளியேற்றம் நிறுத்தப் பட்டுள்ளது. கர்நாடக அணைகளுக்கான நீர்வரத்து குறைந்ததால், கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்படுவது  நிறுத்தப்பட்டுள்ளது. கபினி அணையில் இருந்து தற்போது வினாடிக்கு 20 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. இதனிடையே மேட்டூர் அணை  3 வது முறையாக 120 அடியை…

  • ஒரே ஆண்டில் 2வது முறையாக… நிரம்பியது மேட்டூர் அணை!

    கடந்த 2004ல் ஒரே வருடத்தில் 4 முறை மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. அதன் பின்னர் தற்போது ஒரே ஆண்டில் இரண்டாவது முறையாக இன்று மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியது. ஏற்கெனவே கேரளா மாநிலம் மழை வெள்ளத்தில் சிக்கித்தவிப்பதால் கேராளாவிற்கு திறந்து விட வேண்டிய நீரையும் சேர்த்து, காவிரியில் திறந்து விட்டுள்ளனர். இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1 லட்சம் கனஅடியாக உயர்ந்துள்ளது. கர்நாடகாவில் கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணைகளில்…

  • மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு; நீர்மட்டம் குறைந்தது!

    சேலம்: மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 14,600 கன அடியாக சரிந்த நிலையில், அணையின் நீர்மட்டம் 10 நாட்களுக்குப் பின்னர் தற்போது 120 அடிக்குக் கீழ் குறைந்துள்ளது. கர்நாடகத்தின் கபினி அணையில் இருந்து விநாடிக்கு 20 ஆயிரம் கன அடி நீரும், கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து விநாடிக்கு 5,160 கன அடி நீரும் திறந்து விடப்படுகிறது. இந்நிலையில், ஒகேனக்கல்லுக்கு இன்று காலை 7 மணி நிலவரப்படி வினாடிக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர் வரத்து…

  • மேட்டூர் அணையிலிருந்து இன்று முதல் தண்ணீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு

    மேட்டூர் அணையிலிருந்து புள்ளம்பாடி மற்றும் புதிய கட்டளை மேட்டு கால்வாய்களில் தண்ணீர் திறக்குமாறு முதலமைச்சர் பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம், திருச்சி, தஞ்சை, அரியலூர் மாவட்டங்களில் உள்ள 42 ஆயிரத்து 736 ஏக்கர் நிலம், பாசன வசதி பெறும் என்றும், நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறும் இன்று முதல் தண்ணீரை திறந்து விட உத்தரவிட்டுள்ளதாகவும் தமிழக  முதலமைச்சர் பழனிசாமி குறிப்பிட்டுள்ளார். ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணையிலிருந்து தண்ணீரை திறக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.  இதன்படி, கீழ்பவானி திட்ட…

  • மேட்டூர் அணை நீர்மட்டம் 114 அடியை எட்டியது! அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

    சேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 114 அடியை எட்டியது. அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால், நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. கர்நாடகத்தின் கபினி, கேஆர்எஸ் அணைகளில் இருந்து நீர் அதிகளவில் வெளியேற்றப் பட்டு வருகிறது. கபினியில் இருந்து விநாடிக்கு 14,583 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து விநாடிக்கு 47,816 கனஅடி நீர் வெளியேற்றப் படுகிறது. இதை அடுத்து ஒகேனக்கலில் நீர்வரத்து விநாடிக்கு 66 ஆயிரம் கனஅடியாக உள்ளது. இந்நிலையில் மேட்டூர் அணையில் நீர்மட்டம் 114.63…

  • பாசனத்திற்காக மேட்டூர் அணையை திறந்தார் முதல்வர் பழனிச்சாமி

    சேலம் மேட்டூர் அணை பாசனத்திற்காக திறக்கப்பட்டது. 85வது ஆண்டாக மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தண்ணீரை திறந்து விட்டார். முதல்வர் பொறுப்பு வகிப்பவர், நீர்திறந்து விடுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக, அங்குள்ள அணைகள் நிரம்பியுள்ளன. இதனால் அங்குள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளின் பாதுகாப்பு கருதி ஒரு லட்சத்து 20 ஆயிரம் கனஅடிக்கு மேல் உபரிநீர்…

  • கர்நாடக அணைகளில் உபரி நீர் திறப்பு; மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

    தருமபுரி: காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் கன மழை பெய்து, கர்நாடக அணைகளில் நீர் நிரம்பி வருவதை அடுத்து, காவிரியில் உபரிநீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதை அடுத்து, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 10 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. இதன்  காரணமாக, கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதை அடுத்து, அணைகளின் பாதுகாப்பினைக் கருத்தில் கொண்டு,  கர்நாடகம் கபினி அணையில் இருந்து…

  • மேட்டூர் அணையில் 7-வது ஆண்டாக நீர் திறப்பு இல்லை

    மேட்டூர் அணையில் 7-வது ஆண்டாக தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். டெல்டா பகுதியில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. திறக்கப்படும் தண்ணீர் கல்லணைக்கு வந்து சேர்ந்து அதன் பின்னர் காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய் (புது ஆறு) வழியாக சென்று குறுவை சாகுபடிக்கு பாசனம் அளிக்கிறது. இதன் மூலம் இப்பகுதிகளில் உள்ள 2 லட்சத்து 6 ஆயிரத்து 267 ஏக்கர் விளை நிலங்கள்…

  • மேட்டூர் அணையில் போதிய அளவில் தண்ணீர் இல்லாததால் ஜூன் 12 ஆம் தேதி நீர் திறக்க வாய்ப்பில்லை : முதலமைச்சர் பழனிசாமி

    குறுவை சாகுபடிக்காக வரும் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படாது என்று சட்டப்பேரவை விதி எண் 110ன் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். “அணையின் நீர்மட்டம் 39.42 அடியாக இருப்பதால், குறுவை சாகுபடிக்கு நீர் திறக்க இயலாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஜெயலலிதாவின் முயற்சியால் கடந்த 5 ஆண்டுகளில் குறுவை நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டது. மேட்டூர் அணை திறப்பு தாமதமாவதால் குறுவைசாகுபடிக்கு தொகுப்பு திட்டம் இவ்வாண்டு அமல்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

  • மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

    மேட்டூர் : மேட்டூர் அணைக்கு  நீர்வரத்து அதிகரித்துள்ளது. தற்போது நீர்வரத்து 1,886 கன அடியில் இருந்து 2,038 கன அடியாக உயர்ந்துள்ளது.