மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு; நீர்மட்டம் குறைந்தது!

Published:

mettur dam jul21 - 2026

சேலம்: மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 14,600 கன அடியாக சரிந்த நிலையில், அணையின் நீர்மட்டம் 10 நாட்களுக்குப் பின்னர் தற்போது 120 அடிக்குக் கீழ் குறைந்துள்ளது.

கர்நாடகத்தின் கபினி அணையில் இருந்து விநாடிக்கு 20 ஆயிரம் கன அடி நீரும், கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து விநாடிக்கு 5,160 கன அடி நீரும் திறந்து விடப்படுகிறது. இந்நிலையில், ஒகேனக்கல்லுக்கு இன்று காலை 7 மணி நிலவரப்படி வினாடிக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர் வரத்து குறைந்தது. இருப்பினும், அருவிகளில் குளிக்கவும், பரிசல்களை இயக்கவும் 25-வது நாளாக மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

மேட்டூர் அணைக்கு இன்று  காலை நிலவரப் படி, 14,660  கன அடியாக நீர்வரத்து சரிந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 119.98 அடியாகக் குறைந்துள்ளது. அணையில் 93.43 டி.எம்.சி  நீர் இருப்பு உள்ளது. அணையில் இருந்து இன்று காலை முதல் விநாடிக்கு 18,400 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

ALSO READ:  உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img