மேட்டூர் அணை நீர்மட்டம் 114 அடியை எட்டியது! அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

Published:

mettur dam jul21 - 2026

சேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 114 அடியை எட்டியது. அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால், நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

கர்நாடகத்தின் கபினி, கேஆர்எஸ் அணைகளில் இருந்து நீர் அதிகளவில் வெளியேற்றப் பட்டு வருகிறது. கபினியில் இருந்து விநாடிக்கு 14,583 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து விநாடிக்கு 47,816 கனஅடி நீர் வெளியேற்றப் படுகிறது. இதை அடுத்து ஒகேனக்கலில் நீர்வரத்து விநாடிக்கு 66 ஆயிரம் கனஅடியாக உள்ளது.
இந்நிலையில் மேட்டூர் அணையில் நீர்மட்டம் 114.63 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு நீர்வரத்து 64,595 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து பாசனத்திற்காக விநாடிக்கு 20 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப் படுகிறது. அணையில் நீர் இருப்பு 85.16 ஆக உள்ளது.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img