December 5, 2025, 7:46 PM
26.7 C
Chennai

மேட்டூர் அணையில் 7-வது ஆண்டாக நீர் திறப்பு இல்லை

07 June12 Mettur - 2025மேட்டூர் அணையில் 7-வது ஆண்டாக தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். டெல்டா பகுதியில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. திறக்கப்படும் தண்ணீர் கல்லணைக்கு வந்து சேர்ந்து அதன் பின்னர் காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய் (புது ஆறு) வழியாக சென்று குறுவை சாகுபடிக்கு பாசனம் அளிக்கிறது. இதன் மூலம் இப்பகுதிகளில் உள்ள 2 லட்சத்து 6 ஆயிரத்து 267 ஏக்கர் விளை நிலங்கள் பயன் அடையும்.

ஆனால் கடந்த 6 ஆண்டுகளாக கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு உரிய அளவிலான காவிரி நீர் கிடைக்காததால் ஜூன் 12(இன்று) தண்ணீர் திறக்கப்படவி்ல்லை. தற்போது மேட்டூர் அணையின் நீர்வரத்து 1,206 கனஅடியில் இருந்து 847 கனஅடியாக குறைந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 39.94 அடியாகவும், நீர் இருப்பு 12.05 டி.எம்.சி.யாகவும், நீர் வெளியேற்றம் 500 கனஅடியாக உள்ளது. நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்து வருவதால் வினாடிக்கு 847 கனஅடியாக விகிதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

அணையில் 12.05 டி.எம்.சி. மட்டுமே தண்ணீர் உள்ளதால் இந்த ஆண்டும் 12-ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை. மேட்டூர் அணையில் 120 டி.எம்.சி. தண்ணீர் இருந்தால் மட்டுமே பாசனத்துக்ககு நீர் திறக்க முடியும் என்பதால் குடிநீர் தேவைக்கு மட்டும் தற்போது 500 கனஅடி விகிதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. தண்ணீர் திறந்துவிடாததை கண்டித்து நாகை மாவட்டம் மீனம்பநல்லூரில் வறண்டு இருக்கும் பாசன வாய்க்காலில் மெழுகுவர்த்தி ஏற்றி விவசாயிகள் அஞ்சலி செலுத்தினர். பெண்கள் கும்மி அடித்தும் ஒப்பாரி வைத்தும் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கண்டனத்தை பதிவு செய்தனர். தென்மேற்கு பருவ மழை காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. எனவே தமிழகத்துக்கு உரிய தண்ணீரை கர்நாடகத்திடம் இருந்து பெற்றுத்தர தமிழக அரசு, காவிரி மேலாண்மை ஆணையம் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories