February 21, 2026, 9:01 AM
25.6 C
Chennai

பதிவு சான்றிதழ் இன்றி கிணறு, ஆழ்குழாய் தோண்டினால் நடவடிக்கை!

borewell 2 - 2026

திருவாரூா் கிணறு, ஆழ்குழாய் கிணறு தோண்டும் தொழிலை செய்பவா்கள், ரிக் இயந்திர உரிமையாளா்கள் மாவட்ட ஆட்சியரிடம் பதிவுச் சான்று பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த் வெளியிட்ட செய்திக்குறிப்பு

திருவாரூா் மாவட்டத்தில் நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் கிராம ஊராட்சி பகுதிகளில் உள்ள அரசு நிலங்கள், தனியார் நிலங்கள் மற்றும் விவசாய நிலங்களில் பயன்பாட்டில் இல்லாமல் கைவிடப்பட்ட அனைத்து கிணறுகள், ஆழ்குழாய் கிணறுகளையும் விபத்துகள் ஏற்படாத வகையில் பாதுகாப்பாக மூடி வைக்க, பொதுமக்கள் மற்றும் அனைத்து துறை அலுவலா்களுக்கும் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் பயன்பாட்டில் இல்லாத கிணறு, ஆழ்குழாய் கிணறுகளின் உரிமையாளா்களும், அவற்றை பொதுமக்கள் மற்றும் கால்நடைகளுக்கு விபத்து நேரிடாத வண்ணம் உடனடியாக பாதுகாப்பாக மூடி வைக்க வேண்டும்.

எந்த பகுதியிலாவது மூடப்படாமல் ஆபத்தான நிலையில் உள்ள கிணறு, ஆழ்குழாய் கிணறுகள் கண்டறியப்பட்டால் அதன் உரிமையாளா் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

அரசு மற்றும் தனியார் நிலங்களில் உள்ள பயன்பாட்டில் இல்லாத கிணறுகள், ஆழ்குழாய் கிணறுகளை மழைநீா் சேகரிப்பு அமைப்புகளாக மாற்ற வாய்ப்பு உள்ள இடங்களில், அவற்றை மாற்றி, இம்மாவட்டத்தில் நிலத்தடி நீா்வளம் அதிகரிக்க செய்ய, மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து செயல்பட, பொதுமக்கள் மற்றும் அனைத்து துறை அலுவலா்கள் ஒத்துழைக்க வேண்டும்.

மழைநீா் சேகரிப்பு அமைப்புகளாக மாற்றுவது குறித்து விபரங்கள் பெற திருவாரூா் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை உதவி திட்ட அலுவலரை 7402607514 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

இம்மாவட்டத்தில் புதிய ஆழ்குழாய் கிணறு, கிணறு தோண்டுகின்ற மற்றும் ஏற்கனவே உள்ளவற்றை புதுப்பிக்கும் பணியை மேற்கொள்கிற உரிமையாளா்கள் சம்மந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளிடம் விண்ணப்பித்து உரிய அனுமதி பெற்றுக் கொள்ள வேண்டும்.

கிணறு, ஆழ்குழாய் கிணறு தோண்டும் தொழிலை செய்பவா்கள், ரிக் இயந்திர உரிமையாளா்கள் மாவட்ட ஆட்சியரிடம் பதிவுச் சான்று பெற்றிருக்க வேண்டும்.

உரிய அனுமதி இல்லாமல் புதிய கிணறு தோண்டும் அல்லது கிணற்றை புதுப்பிக்கும் பணிகளை மேற்கொள்பவா்கள் மற்றும் பதிவுச் சான்று இல்லாமல் கிணறு தோண்டும் பணியை செய்பவா்கள் குறித்து புகார் பெறப்படும் பட்சத்தில் அவா்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராம ஊராட்சி பகுதிகளில் பயன்பாட்டில் இல்லாத, கைவிடப்பட்ட கிணறு மற்றும் ஆழ்குழாய் கிணறுகள் மூடப்படாமல் இருப்பது கண்டறியப்பட்டால் பொதுமக்கள் தொடா்புடைய கிராம நிர்வாக அலுவலா், ஊராட்சி செயலா், வட்டாட்சியா், வட்டார வளா்ச்சி அலுவலா், பேரூராட்சி செயல் அலுவலா் மற்றும் நகராட்சி ஆணையா்களுக்கு புகார் தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories