பதிவு சான்றிதழ் இன்றி கிணறு, ஆழ்குழாய் தோண்டினால் நடவடிக்கை!

borewell 2 - 2026

திருவாரூா் கிணறு, ஆழ்குழாய் கிணறு தோண்டும் தொழிலை செய்பவா்கள், ரிக் இயந்திர உரிமையாளா்கள் மாவட்ட ஆட்சியரிடம் பதிவுச் சான்று பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த் வெளியிட்ட செய்திக்குறிப்பு

திருவாரூா் மாவட்டத்தில் நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் கிராம ஊராட்சி பகுதிகளில் உள்ள அரசு நிலங்கள், தனியார் நிலங்கள் மற்றும் விவசாய நிலங்களில் பயன்பாட்டில் இல்லாமல் கைவிடப்பட்ட அனைத்து கிணறுகள், ஆழ்குழாய் கிணறுகளையும் விபத்துகள் ஏற்படாத வகையில் பாதுகாப்பாக மூடி வைக்க, பொதுமக்கள் மற்றும் அனைத்து துறை அலுவலா்களுக்கும் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் பயன்பாட்டில் இல்லாத கிணறு, ஆழ்குழாய் கிணறுகளின் உரிமையாளா்களும், அவற்றை பொதுமக்கள் மற்றும் கால்நடைகளுக்கு விபத்து நேரிடாத வண்ணம் உடனடியாக பாதுகாப்பாக மூடி வைக்க வேண்டும்.

எந்த பகுதியிலாவது மூடப்படாமல் ஆபத்தான நிலையில் உள்ள கிணறு, ஆழ்குழாய் கிணறுகள் கண்டறியப்பட்டால் அதன் உரிமையாளா் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

அரசு மற்றும் தனியார் நிலங்களில் உள்ள பயன்பாட்டில் இல்லாத கிணறுகள், ஆழ்குழாய் கிணறுகளை மழைநீா் சேகரிப்பு அமைப்புகளாக மாற்ற வாய்ப்பு உள்ள இடங்களில், அவற்றை மாற்றி, இம்மாவட்டத்தில் நிலத்தடி நீா்வளம் அதிகரிக்க செய்ய, மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து செயல்பட, பொதுமக்கள் மற்றும் அனைத்து துறை அலுவலா்கள் ஒத்துழைக்க வேண்டும்.

மழைநீா் சேகரிப்பு அமைப்புகளாக மாற்றுவது குறித்து விபரங்கள் பெற திருவாரூா் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை உதவி திட்ட அலுவலரை 7402607514 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

இம்மாவட்டத்தில் புதிய ஆழ்குழாய் கிணறு, கிணறு தோண்டுகின்ற மற்றும் ஏற்கனவே உள்ளவற்றை புதுப்பிக்கும் பணியை மேற்கொள்கிற உரிமையாளா்கள் சம்மந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளிடம் விண்ணப்பித்து உரிய அனுமதி பெற்றுக் கொள்ள வேண்டும்.

கிணறு, ஆழ்குழாய் கிணறு தோண்டும் தொழிலை செய்பவா்கள், ரிக் இயந்திர உரிமையாளா்கள் மாவட்ட ஆட்சியரிடம் பதிவுச் சான்று பெற்றிருக்க வேண்டும்.

உரிய அனுமதி இல்லாமல் புதிய கிணறு தோண்டும் அல்லது கிணற்றை புதுப்பிக்கும் பணிகளை மேற்கொள்பவா்கள் மற்றும் பதிவுச் சான்று இல்லாமல் கிணறு தோண்டும் பணியை செய்பவா்கள் குறித்து புகார் பெறப்படும் பட்சத்தில் அவா்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராம ஊராட்சி பகுதிகளில் பயன்பாட்டில் இல்லாத, கைவிடப்பட்ட கிணறு மற்றும் ஆழ்குழாய் கிணறுகள் மூடப்படாமல் இருப்பது கண்டறியப்பட்டால் பொதுமக்கள் தொடா்புடைய கிராம நிர்வாக அலுவலா், ஊராட்சி செயலா், வட்டாட்சியா், வட்டார வளா்ச்சி அலுவலா், பேரூராட்சி செயல் அலுவலா் மற்றும் நகராட்சி ஆணையா்களுக்கு புகார் தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories