December 6, 2025, 6:37 AM
23.8 C
Chennai

கொரோனா: டெஸ்ட் எடுக்க கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை! அரசு, தனியாருக்கு எச்சரிக்கை!

corono test

தனியார் ஆய்வகங்களில் கொரோனா சோதனைக்கு செல்வோரிடம் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. கொரோனா பரிசோதனைக்கு அரசு நிர்ணயித்ததை விட கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக எழுந்துள்ள புகார்களே இதற்கு காரணம்.

முன்னெச்சரிக்கையாக கொரோனா பரிசோதனை செய்ய விரும்புவோர் ரூ. 4,500 மட்டுமே கட்டணமாக செலுத்தினால் போதும். அதுவும் முதற்கட்ட சோதனையில் நெகட்டிவ் என வந்தால், அவர்கள் ரூ.1,500க்கு மேல் செலுத்த தேவையில்லை. மாறாக பாசிட்டிவ் என வந்தால் அதனை உறுதிப்படுத்த 2ம் கட்ட சோதனை நடக்கும்.

அதற்கு கூடுதலாக ரூ. 3000 செலுத்த வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். அரசு மருத்துவமனைக்கு கொரோனா அறிகுறியின் பேரில் சிகிச்சைக்கு செல்வோருக்கு தனியார் ஆய்வகங்களில் சோதனை நடத்தப்படுகிறது.

அதற்கு அரசின் சார்பில் நபர் ஒருவருக்கு ரூ.2,500 வீதம் செலுத்தி வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் தற்போது 34 அரசு ஆய்வகங்கள்,14 தனியார் ஆய்வகங்களிலும் கொரோனா பரிசோதனை நடைபெற்று வருகிறது.

இதுவரை அரசு தரப்பில் மட்டும் 1 லட்சத்து 40 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதற்கான தொகை முதல்வரின் காப்பீட்டுத் திட்டத்தில் இருந்து செலுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories