spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeகிரைம் நியூஸ்ஏடிஎம் யை உடைத்து கொள்ளை முயற்சி!

ஏடிஎம் யை உடைத்து கொள்ளை முயற்சி!

- Advertisement -
atm

தங்கச்சிமடத்தில் ஏடிஎம் இயந்திரத்தை மர்ம நபர்கள் உடைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமேசுவரம் அடுத்துள்ள தங்கச்சிமடம் தேசிய நெடுஞ்சாலையையொட்டி இந்தியன் வங்கி உள்ளது. இந்த வங்கியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுடன் செயல்பட்டு வருகிறது. வாடிக்கையாளர்கள் பயன் பெரும் வகையில் ஏ.டி.எம். மிஸின் வங்கியின் முன் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் பணம் எடுக்கும் வசதியும், பணம் போடும் வசதியும் உள்ளது.

இந்த நிலையில் ஞாயிற்றுகிழமை கொரோனா முழு பொது முடக்கம் காரணமாக பொதுமக்கள் இன்றி வெறிச்சோடியது இன்று (திங்கட்கிழமை) அதிகாலை வங்கிக்கு வந்த மர்ம நபர்கள் வங்கியின் ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்றுள்ளனர். ஆனால் இயந்திரத்தை உடைக்க முடியாமல் அங்கிருந்து சென்று விட்டனர்.

காலையில் பணம் எடுக்க சென்று பொதுமக்கள் ஏ. டி.எம். இயந்திரம் உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே வங்கி மேலாளர் மற்றும் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இது குறித்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe