3 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை! முதியவருக்கு 27 வருட சிறை! பெற்றோருக்கு ரூ.5 லட்சம்!

ravi
ravi

3 வயது குழந்தைக்கு 50 வயது நபர் செய்த கொடூர செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

50 வயதான ரவி என்ற நபர், சென்னை வியாசர்பாடியில் வசித்து வந்துள்ளார். இவரது கீழ் வீட்டில் வசித்து வந்த தம்பதியினருக்கு 3 வயது பெண் குழந்தை ஒன்று இருந்துள்ளது.

இதனையடுத்து, ரவி அந்த குழந்தையை அடிக்கடி தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று கொஞ்சியுள்ளார். அதே சமயம், அந்த குழந்தையும் தாத்தா என்று அழைத்து ரவியிடம் பாசமாக பழகியுள்ளது.

தனது குழந்தையுடன் ரவி பாசமாக பழகுவதாலும், குழந்தையும் பிரச்சனை இல்லாமல் விளையாடுவதாலும் குழந்தையின் தாய் சந்தோசமாக இருந்துள்ளார்.

இந்நிலையில், திடீரென்று ஒரு நாள் அந்த குழந்தை, “அம்மா வலிக்கிறது” என்று சொல்லி அழுதுள்ளது
குழந்தை விளையாடும் போது ஏதும் ஆகிவிட்டதா என்றபடியே, என்ன செய்தாய், எங்கே விழுந்தாய் என்று என்று கேட்டிருக்கிறார் தாய்.

அதற்கு அந்த குழந்தை, மேல் வீட்டு தாத்தா என்று கை காட்டி இருக்கிறது. இதில் அதிர்ச்சியான தாய் குழந்தையிடம் மேலும் விசாரித்ததில், தனக்கு தெரிந்த வார்த்தைகளிலும் செய்கைகளிலும் குழந்தை சொல்லியதைக் கேட்டு தாய் பெரிதும் அதிர்ந்து போயிருக்கிறார்.

மூன்று வயது குழந்தை என்றும் பாராமல் அந்த குழந்தையிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டிருக்கிறான் அரக்கன் என்று ஆவேசப்பட்டு, ரவியிடம் சென்று அந்த தாய் சண்டை இட்டிருக்கிறார்.

பின்னர் அக்கம்பக்கத்தினர் அளித்த ஆலோசனையின் பேரில், எம்கேபி நகர் அனைத்து மகளிர் போலீசாரிடம் சென்று புகார் அளித்திருக்கிறார்.

புகாரின் பேரில் எம்கேபி நகர் அனைத்து மகளிர் போலீசார் ரவியை கைது செய்து சென்னை குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ராஜலட்சுமி, குழந்தையை கடத்திச் சென்ற குற்றத்திற்காகவும், 12 வயதிற்கு கீழ் உள்ள குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காகவும் ரவிக்கு 27 ஆண்டுகள் தண்டனை விதித்தார்.

மேலும் 15 ஆயிரம் அபராதம் கட்டவேண்டும் என்றும் தீர்ப்பளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட அந்த குழந்தையின் பெற்றோருக்கு நிவாரணமாக ஐந்து லட்சம் ரூபாய் தமிழக அரசு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

கடந்த 2018-ஆம் ஆண்டில் நடந்த சம்பவத்தில் நீதிமன்றம் தற்போது இந்த பரபரப்பு தீர்ப்பினை வழங்கியிருக்கிறது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஏப்ரல் 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தாமரை வாக்குறுதிகள்’ என்ற பெயரில் பாஜக., தேர்தல் அறிக்கை வெளியீடு!

பாஜக.,வின் 27 வேட்பாளர்களைக் குறிக்கும் வகையில் 27 முக்கிய வாக்குறுதிகளைக் குறிப்பிட்டு தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் உள்ள முக்கிய வாக்குறுதிகள்:

பிரசாரத்தில் இருந்த திமுக., வேட்பாளர்; வீட்டில் 122 பவுன் நகை கொள்ளை!

தேர்தல் நேரத்தில் திமுக வேட்பாளர் வீட்டில் திருடு போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் தீவிபத்து..

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மடத்துப் பட்டியில் இன்று 13 ஏப்ரல்...

Topics

பஞ்சாங்கம் – ஏப்ரல் 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தாமரை வாக்குறுதிகள்’ என்ற பெயரில் பாஜக., தேர்தல் அறிக்கை வெளியீடு!

பாஜக.,வின் 27 வேட்பாளர்களைக் குறிக்கும் வகையில் 27 முக்கிய வாக்குறுதிகளைக் குறிப்பிட்டு தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் உள்ள முக்கிய வாக்குறுதிகள்:

பிரசாரத்தில் இருந்த திமுக., வேட்பாளர்; வீட்டில் 122 பவுன் நகை கொள்ளை!

தேர்தல் நேரத்தில் திமுக வேட்பாளர் வீட்டில் திருடு போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் தீவிபத்து..

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மடத்துப் பட்டியில் இன்று 13 ஏப்ரல்...

ஐபிஎல் 2026: சஞ்சு சாம்சனால் தேறும் சென்னை அணி!

ஐபிஎல் 2026: சஞ்சு சாம்சனால் தேறும் சென்னை அணி!

ரமாபாய், சவிதா அம்பேத்கர்: இந்திய வரலாற்றில் மறைந்த உருவங்கள்!

ரமாபாயின் வாழ்க்கை வறுமை மற்றும் தனிமை படுத்தப்பட்டதான சூழ்நிலையில் இருந்தது. 1898 இல் மகாராஷ்டிராவில் ஒரு கடலோர கிராமத்தில் அவர் பிறந்தார்

ஆப்கன், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கும் சீனா!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK), ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகில் சீனா புதிய மாவட்டத்தை அமைக்கிறது; இது இந்தியாவிற்கு கவலை அளிக்கும் அம்சம்.

Entertainment News

Popular Categories