February 22, 2026, 11:44 PM
26.7 C
Chennai

3 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை! முதியவருக்கு 27 வருட சிறை! பெற்றோருக்கு ரூ.5 லட்சம்!

ravi
ravi

3 வயது குழந்தைக்கு 50 வயது நபர் செய்த கொடூர செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

50 வயதான ரவி என்ற நபர், சென்னை வியாசர்பாடியில் வசித்து வந்துள்ளார். இவரது கீழ் வீட்டில் வசித்து வந்த தம்பதியினருக்கு 3 வயது பெண் குழந்தை ஒன்று இருந்துள்ளது.

இதனையடுத்து, ரவி அந்த குழந்தையை அடிக்கடி தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று கொஞ்சியுள்ளார். அதே சமயம், அந்த குழந்தையும் தாத்தா என்று அழைத்து ரவியிடம் பாசமாக பழகியுள்ளது.

தனது குழந்தையுடன் ரவி பாசமாக பழகுவதாலும், குழந்தையும் பிரச்சனை இல்லாமல் விளையாடுவதாலும் குழந்தையின் தாய் சந்தோசமாக இருந்துள்ளார்.

இந்நிலையில், திடீரென்று ஒரு நாள் அந்த குழந்தை, “அம்மா வலிக்கிறது” என்று சொல்லி அழுதுள்ளது
குழந்தை விளையாடும் போது ஏதும் ஆகிவிட்டதா என்றபடியே, என்ன செய்தாய், எங்கே விழுந்தாய் என்று என்று கேட்டிருக்கிறார் தாய்.

அதற்கு அந்த குழந்தை, மேல் வீட்டு தாத்தா என்று கை காட்டி இருக்கிறது. இதில் அதிர்ச்சியான தாய் குழந்தையிடம் மேலும் விசாரித்ததில், தனக்கு தெரிந்த வார்த்தைகளிலும் செய்கைகளிலும் குழந்தை சொல்லியதைக் கேட்டு தாய் பெரிதும் அதிர்ந்து போயிருக்கிறார்.

மூன்று வயது குழந்தை என்றும் பாராமல் அந்த குழந்தையிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டிருக்கிறான் அரக்கன் என்று ஆவேசப்பட்டு, ரவியிடம் சென்று அந்த தாய் சண்டை இட்டிருக்கிறார்.

பின்னர் அக்கம்பக்கத்தினர் அளித்த ஆலோசனையின் பேரில், எம்கேபி நகர் அனைத்து மகளிர் போலீசாரிடம் சென்று புகார் அளித்திருக்கிறார்.

புகாரின் பேரில் எம்கேபி நகர் அனைத்து மகளிர் போலீசார் ரவியை கைது செய்து சென்னை குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ராஜலட்சுமி, குழந்தையை கடத்திச் சென்ற குற்றத்திற்காகவும், 12 வயதிற்கு கீழ் உள்ள குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காகவும் ரவிக்கு 27 ஆண்டுகள் தண்டனை விதித்தார்.

மேலும் 15 ஆயிரம் அபராதம் கட்டவேண்டும் என்றும் தீர்ப்பளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட அந்த குழந்தையின் பெற்றோருக்கு நிவாரணமாக ஐந்து லட்சம் ரூபாய் தமிழக அரசு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

கடந்த 2018-ஆம் ஆண்டில் நடந்த சம்பவத்தில் நீதிமன்றம் தற்போது இந்த பரபரப்பு தீர்ப்பினை வழங்கியிருக்கிறது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

Topics

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories