போலீஸ்காரம்மா திருடிச்சி… பொதுசனம் திருப்பி கொடுத்துச்சி… எட்டரை லட்ச ரூபான்னா சும்மாவா…!?

Published:

lady police and sivakasi sivasankari - 2026

சென்னை: கடந்த இரு நாட்களில் அரசியல் நிகழ்வுகள் அல்லாது சமூகம் சார்ந்த இரு நிகழ்வுகள் பெரிதும் பேசப்பட்டன. சமூக வலைத்தளங்களில் ஆதிக்கம் செலுத்திய இரு பெண்கள் குறித்த செய்திதான் அது!

லேடீ போலீஸ் கான்ஸ்டபிள், சூப்பர் மார்க்கெட் ஒன்றில் போன் பேசியபடியே, கையில் கிடைத்ததை எடுத்து பாக்கெட்டில் போட்டுக் கொண்டு, ஒன்றும் தெரியாதது போல் ஒதுங்கினார். ஆனால் கேமரா காட்டிக் கொடுக்க, வேறு வழியின்றி அதைப் போட்டுவிட்டு இனி இப்படி பொருள்களை திருட மாட்டேன் என மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்தார்.

lady police and sivakasi sivasankari1 - 2026

இன்னொரு சம்பவமாக சிவகாசியில் நடந்த நிகழ்வு… ஜவுளிக் கடையில் துணி வாங்கியபோது, அதைப் போட்டுக் கொடுக்கும் பைக்குப் பதிலாக, எட்டரை லட்சம் ரூபாய் பணம் இருந்த பையை கவனக் குறைவாகக் கொடுத்துவிட்டார் கடை முதலாளி. அதை தனது வீட்டுக்குச் சென்ற பிறகு எடுத்துப் பார்த்துள்ளார் சிவகாசி சாச்சிபுரத்தைச் சேர்ந்த சிவசங்கரி எனும் பெண்மணி. உடனே கடைக்கு வந்து கடை முதலாளியிடம் எட்டரை லட்ச ரூபாய் பணத்தை  அப்படியே திருப்பிக் கொடுத்தார்,.

ALSO READ:  டெட் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பில் உடனடி சட்ட நிவாரணம் தேவை!

இப்போது இந்த இரு படங்களும் செய்திகளும் சமூக வலைத்தளங்களில் ஒன்றாகப் பார்க்கப்பட்டு பகிரப்பட்டு வருகிறது. திருட்டைத் தடுக்க வேண்டிய போலீஸ்காரம்மா நேர்மையை இழந்து திருடுவதும், பொதுசனமோ நேர்மையாக இருந்து பணத்தை உரியவரிடம் கொடுப்பதும்.. என இந்த புகைப்படங்கள் சேதி சொல்கின்றன…

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img