தன்னார்வ ரத்த தானத்தில் தமிழகம் முன்னோடி மாநிலம் – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

Published:

16 May 10 edapadi - 2026

தன்னார்வ ரத்த தானத்தில் இந்தியாவிலேயே தமிழகம் முன்னோடி மாநிலமாக விளங்குவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

“தேசிய தன்னார்வ ரத்த தான தினத்தை” முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரத்த தானம் மனித உயிரை காப்பாற்றும் புனிதமான செயல் என்று கூறியுள்ளார். தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கமும், குருதி பரிமாற்றுக் குழுமமும் இணைந்து ரத்த தான முகாம்களையும், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நடத்தி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஓராண்டில் 4 முறை ரத்த தானம் செய்த ஆண்கள், 3 முறை ரத்த தானம் செய்த பெண்கள் உள்ளிட்டோருக்கு பாராட்டுச் சான்றிதழ்களும் பதக்கங்களும் வழங்கப்படுவதாக முதலமைச்சர் கூறியுள்ளார். கடந்த ஆண்டு 99 விழுக்காடு ரத்தம் தன்னார்வக் கொடையாளர்கள் மூலம் பெறப்பட்டுள்ளதாகவும் நடப்பாண்டில் அதை 100 சதவீதமாக்க பொதுமக்கள் ஒத்துழைக்குமாறும் முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related articles

Recent articles

spot_img