February 21, 2026, 3:35 AM
25.6 C
Chennai

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழாவுக்கு வைக்கப் பட்ட பேனர்களை அகற்ற நீதிமன்றம் உத்தரவு

mgr centenary - 2026

சென்னை: எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழாவுக்காக அதிமுக.,வினர் விதிகளை மீறி வைத்துள்ள அனைத்து பேனர்களையும் அகற்ற வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் இன்று எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழா நடக்கிறது. சட்டப் பேரவை சபாநாயகர் தனபால் தலைமையில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், அதிமுக., தலைவர்கள் என பலரும் இந்த விழாவில் கலந்து கொள்கிறார்கள்.

இந்த விழாவுக்காக சென்னை முழுக்க பேனர் வைக்கப்பட்டுள்ளது. முக்கியமாக பாதசாரிகள் நடக்கும் நடைபாதைகளிலும் பேனர் வைக்கப் பட்டுள்ளது. சென்னையில் விதியை மீறி இதுபோல் பேனர் வைக்கக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தாவிட்டுள்ள நிலையில் இவ்விதம் விதிமீறல்களில் ஈடுபட்டுள்ளதற்காக சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.

இந்த வழக்கு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது பதில் அளித்த தமிழக அரசு 120க்கும் அதிகமான முறைகேடான பேனர்களை அகற்றிவிட்டோம். வேறு எங்கும் விதிமுறையை மீறி பேனர் வைக்கவில்லை என்று கூறியுள்ளது.

இதற்கு பதிலளித்த டிராபிக் ராமசாமி தரப்பு, அரசுத் தரப்பே முறைகேடாக பேனர் வைத்ததை ஒப்புக்கொண்டுள்ளது. எனவே அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்னும் நிறைய பேனர்கள் அகற்றப்படாமல் உள்ளது. அதையும் நீக்க வேண்டும் என்று கூறியது.

இதை அடுத்து, விதியை மீறி முறைகேடாக வைக்கப்பட்ட அனைத்து பேனர்களையும் அகற்ற நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories