இந்துக் கடவுள்கள் சாத்தான்கள் என்று கூறிய மோகன் சி லாசரஸ் மீது நடவடிக்கை கோரி முதல்வருக்கு மனு!

MohanCLazarus 2 - 2026

நாகர்கோவில்: இந்துக் கடவுள்களை சாத்தான்கள் என்று கூறி மோகன் சி லாசரஸ் பேசிய பேச்சுக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. மதக் கலவரத்தைத் தூண்டும் வகையிலும், இந்து – கிறிஸ்துவ மத மோதலை ஏற்படுத்தும் வகையிலும், ஒரு மதத்தையும், மதக் கடவுள்களையும் அவதூறாகப் பேசிய கிறிஸ்துவ மத போதகர் மோகன் சி.லாசரஸ் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பலவேறு தரப்பினரும் புகார்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இது குறித்து தமிழக முதல்வருக்கு இந்து முன்னணி (மிசா சி சோமன், தலைவர், குமரி மாவட்டம்) சார்பில் எழுதப் பட்டுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது…

நான் கன்னியாகுமரி மாவட்ட இந்து முன்னணி மாவட்டத் தலைவராக இருந்து தேசப் பணி செய்து வருகிறேன்.

சமூக வலைதளங்களில் JESUS REDEEMS என்ற கிறிஸ்தவ அமைப்பை நடத்திவரும் மோகன் C லாசரஸ் என்கிற கிருஸ்தவ மதபோதகர் சமீபத்தில் நடைபெற்ற ஒரு கிருஸ்தவ நிகழ்ச்சியில் ஹிந்து கடவுள்களை சாத்தான்கள் என்றும் ஹிந்து ஆலயங்களை சாத்தான்களின் அரண்கள் என்றும், இந்தியாவிலேயே அதிகமாக சாத்தான்களின் அரண்கள் உள்ள இடம் தமிழகம் என்றும், குறிப்பாக கும்பகோணம் பகுதியில் அத்தனை கோவில்களிலும் சாத்தான் அதிகமாக இருப்பதாகவும், ஹிந்துக்களின் வழிபாட்டு முறைகளான யாகங்கள் வேள்விகளை கேலிசெய்யும் விதமாகவும் பேசியுள்ளார்.

மேலும் இவரது அமைப்பு மூலம் இவர் நடத்தும் நிகழ்ச்சிகளில் தொடர்ந்து ஹிந்து கடவுள்களையும் ஹிந்து மத நம்பிக்கைகளையும் இழிவாக பேசி வருகிறார். இவரது இந்த செயல் பெரும்பான்மை சமுதாயமான ஹிந்துக்களின் மனம் புண்படும் வகையில் உள்ளது.

ஹிந்து மத நம்பிக்கைகளுக்கு எதிராக பேசி மதக் கலவரத்தை தூண்ட முயற்சி செய்யும் இவரது அமைப்பை தடை செய்வதோடு தொடர்ந்து ஹிந்து மத துவேசத்தில் ஈடுபடும் இவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் sec 295A – மத உணர்வுகளை புண்படுத்துதல், மதத்தின் பெயரால் பிற மதத்தினரை நிந்தித்தல், மத உணர்வுகளை அவமதித்தல் பற்றி இந்திய தண்டனைச் சட்டம் sec 295A – 298 போன்ற சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கும்படி கேட்டு கொள்ளுகிறேன்..

– என்று குறிப்பிட்டுள்ளார்.

1 COMMENT

  1. இவரை இதுவரை கைது செய்யாமல் இருப்பது தமிழக அரசுக்கு இஷ்டமில்லையா ? அல்லது கிறிஸ்துவ தர்மமா? இதுதான் தமிழ்நாட்டுக்கு, இங்கு வாழும் ஹிந்துக்களுக்கு அரசு கொடுக்கும் பாதுகாப்பா ?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories