போகி அன்று தேர்வா?: ரத்து செய்து விடுமுறை அளிக்க இந்து முன்னணி கோரிக்கை

Published:

போகி அன்று தேர்வை ரத்து செய்து தமிழக அரசு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி இந்துமுன்னணி அமைப்பின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. 

இது குறித்து அந்த அமைப்பின் சார்பில் வெளியான அறிக்கையில், 

சமீபத்தில் ஏற்பட்ட வெள்ள சேதம் காரணமாக தமிழக அரசு பள்ளிகளுக்கு தொடர் விடுமுறையளித்து தேர்வுகளை ஒத்தி வைத்தது. கிறிஸ்துமஸ் மற்றும் மிலாடிநபி பண்டிகையை ஒட்டி 10 நாட்கள் தொடர் விடுமுறை அளித்துள்ளது.

ஆனால் தமிழர் பண்டிகையான போகி பண்டிகையன்று தேர்வு நடத்துகின்றது.

தமிழகத்தில் 10% கூட இல்லாத கிறிஸ்தவ முஸ்லீம் பண்டிகைக்கு விடுமுறை தரும் தமிழக அரசு பெரும்பான்மை தமிழர் கொண்டாடும் போகிபண்டிகையன்று தேர்வு நடத்துவது மிகுந்த மன வேதனையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்துகிறது.

பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் நம் நாட்டை ஆண்ட பொழுது ஆங்கிலேய கிறித்தவ ஆட்சி காலத்தில் கிறிஸ்துவர்களுக்காக கிறிஸ்துமஸ் மற்றும் கிறித்தவ புத்தாண்டு கொண்டாட்த்திற்கு விடப்பட்டதை போல இன்னும் விடுமுறை தருவதை விடுத்து நமது பாரம்பரிய பண்டிகையையும் நிணைவில் கொண்டு போகி பண்டிகை நாளன்று தேர்வை ரத்து செய்து விடுமுறை தர வேண்டுமென இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்… 

ALSO READ:  நெல்லையில் நடந்த இந்து முன்னணி மாநிலப் பொதுக்குழு; போதை நடமாட்டம், திருச்செந்தூர், தீபம் உள்ளிட்ட 8 தீர்மானங்கள்!

என்று அந்தச் செய்தியில் கூறப்பட்டிருந்தது.

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img