December 5, 2025, 5:59 PM
26.7 C
Chennai

டிப்தீர்யாவால் இரண்டு சிறுவர்கள் உயிரிழப்பு ! அச்சத்தில் ஈரோடு !

dipthiriya 1 - 2025டிப்தீரியா இது தொண்டை அடைப்பான் நோய்தான். போலியோவைப் போல இந்த டிப்தீரியா’ எனப்படும் நோயும் தமிழகத்திலிருந்து முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிட்டதாக தமிழக சுகாதாரத்துறை நினைத்திருந்த வேளையில், ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தைச் சுற்றியுள்ள மலைப்பகுதிகளில் இந்த நோய் வேகமாகப் பரவிவருவது பயத்தைக் கிளப்பியிருக்கிறது.

இந்நோயானது 17 வயதுக்குட்பட்ட குழந்தைகளைத்தான் பெரும்பாலும் தாக்கும் என்பதுதான் கொடுமையான விஷயம். தொண்டையில் சவ்வு போன்று உருவாகி, மூச்சு விட முடியாமலும், உணவு உண்ண முடியாமலும் பெரும் சிரமத்தை ஏற்படுத்தும் இந்த நோயை ஆரம்பத்திலேயே கண்டுபிடிக்காவிட்டால் கொஞ்சம் சிரமம் தானாம்.dipthiriya - 2025கடந்த ஜூன் மாதம் 15-ம் தேதி ஈரோடு மாவட்டம், கேர்மாளம் ஊராட்சி உருளிகோட்டை கிராமத்தைச் சேர்ந்த 10 வயதான மாதப்பன் என்னும் பழங்குடியின சிறுவனுக்குத் தொண்டையில் வலி ஏற்பட, சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் பரிசோதித்திருக்கின்றனர். அங்கு சிறுவனுக்கு `டிப்தீரியா’ அறிகுறி இருப்பது தெரியவந்துள்ளது. கோவை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பப்பட்ட சிறுவன் மாதப்பன், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்திருக்கிறான்.

letter - 2025அப்போதே, பவானிசாகர் சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ சுந்தரம், தொண்டை அடைப்பான் நோயைக் கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டுமென’ மாவட்ட நிர்வாகத்துக்கு கடிதம் அனுப்பினார். மாவட்ட நிர்வாகம் இந்த விஷயத்தைப் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை.

அதற்குள்ளாக, ஈரோடு மாவட்டம், மல்லியம்மன் துர்க்கம் மலைக்கிராமத்தைச் சேர்ந்த காசி பிரசாத் என்னும் 10 வயதான சிறுவனுக்கு டிப்தீரியா' நோய் தாக்கி, சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை அளித்திருக்கின்றனர். எந்த சிகிச்சையாலும் காசி பிரசாத்தைக் காப்பாற்ற முடியவில்லை.டிப்தீரியா; நோய்க்கு ஈரோடு மாவட்டத்தில் இரண்டாவது ஆளாக பலியாகிப் போனான். தொண்டை வலியென சிகிச்சைக்குச் சென்றவனை, பாதையில்லாத அவனது சொந்த கிராமத்துக்கு வனத்தின் வழியே தொட்டில் கட்டி சடலமாகத்தான் தூக்கிச் சென்றனர்.

ஐஸ் சாப்பிட்டதால தொண்டையில சளி கட்டியிருக்கும்னு நினைச்சோம்’ என அவனுடைய உறவினர்கள் வெள்ளந்தியாகச் சொல்லவும், அவர்களின் விழிப்புணர்வற்ற நிலை நம்மைக் கலங்கடித்தது. இதற்கிடையே சத்தியமங்கலத்தைச் சுற்றியுள்ள மலைக்கிராமங்களைச் சேர்ந்த சுமார் 16 குழந்தைகளுக்கு `டிப்தீரியா’ நோயின் அறிகுறி தென்பட்டிருப்பது பெரும் அதிர்வை ஏற்படுத்தியிருக்கிறது.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் சவுண்டம்மாளிடம் பேசினோம். `மாதப்பன் என்னும் சிறுவன் இறந்தபோதே அவர்களுடைய கிராமத்தைச் சுற்றி 5 கி.மீ பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்கு தடுப்பூசிகளைப் போட்டோம்.

காசி பிரசாத் உயிரிழந்ததையடுத்து அவர் வசித்த மல்லியம்மன் துர்க்கத்தில் ஒரு மருத்துவக் குழு தங்கியிருந்து குழந்தைகளுக்கு தடுப்பூசி போட்டு கண்காணித்து வருகின்றனர். மேலும், சத்தியமங்கலத்தைச் சுற்றியுள்ள கிராமங்களுக்காக 21 மருத்துவக் குழுக்களை அனுப்பி குழந்தைகளுக்கு தீவிரமாக தடுப்பூசிகளைப் போட்டு வருகிறோம். இந்த நோய் மேலும் பரவாமலிருக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறோம்’ என்றார்.

எய்ம்ஸ், மல்ட்டி ஸ்பெஷாலிட்டி, சூப்பர் ஸ்பெஷாலிட்டி என நகர்ப்பகுதிகளில் பல்வேறு மருத்துவ வசதிகளைக் கொடுக்கும் அரசாங்கம், சமூகத்தின் கடைக்கோடியில் வாழும் மக்களுக்கு சாதாரண மருத்துவ வசதிகள் கிடைப்பதையாவது உறுதி செய்ய வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories