செல்போனில் தகவல் திருட்டா?: நிறுவனங்களுக்கு மத்திய அரசு சுற்றறிக்கை

woman with cell phone - 2026

இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோரின் தனிப்பட்ட மற்றும் வங்கி சார்ந்த தகவல்கள் திருடப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து ஸ்மார்ட்போன்களில் கூடுதல் பாதுகாப்பு வசதிகளை வழங்குவது குறித்து மத்திய அரசு சார்பில் ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களுக்கு புதிய விதிமுறைகள் விதிக்கப்பட இருக்கிறது.

சைபர்செக்யூர்ட்டி தரம் சார்ந்த புதிய விதிமுறைகள் அடங்கிய அறிவிப்பு வரும் வாரங்களில் வெளியிடப்படுகிறது. இதில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோரின் தகவல்களை பாதுகாப்பது சார்ந்த அம்சங்களை அமல்படுத்தும் நோக்கில் தரம் உயர்த்தப்படும். இத்துடன் வாடிக்கையாளர்களின் தகவல்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுவதை கட்டுப்படுத்தும் பணிகளும் மேற்கொள்ளப்படும் என மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறையை சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் இண்டர்நெட் பயன்பாடு மொபைல் சாதனங்களில் அதிகப்படியாக இருப்பதை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. டிஜிட்டல் பண பரிவர்த்தனைகள் அரசு அறிவிப்புகளை தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஹேக்கிங் தகவல் திருட்டு போன்ற சம்பவங்களை கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் பெரும்பாலான ஸ்மார்ட்போன்கள் சீன நிறுவனங்களின் தயாரிப்பாக இருக்கிறது. சீனா மற்றும் இந்திய எல்லையில் தொடர்ந்து பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து இந்தியர்களின் தகவல்கள் திருடப்படாமல் இருப்பதற்கான அவசியம் ஏற்பட்டுள்ளது.

ALSO READ:  வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

தனிப்பட்ட தகவல்கள் மற்றும் பேங்கிங் சார்ந்த தகவல்கள் மட்டுமின்றி வாடிக்கையாளர்கள் செல்லும் இடங்கள் அவர்களது மருத்துவ குறிப்புகள் மற்றும் இணைய பயன்பாடு சார்ந்த தகவல்கள் திருடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு அச்சம் தெரிவித்துள்ளது. முன்னதாக மொபைல் போன் தயாரிப்பு நிறுவனங்கள் பின்பற்றி வரும் பாதுகாப்பு வழிமுறைகளை சமர்பிக்க மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.

ரிசர்வ் வங்கி மற்றும் தொலைதொடர்பு துறை ஆகியவற்றின் பரிந்துரையில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளதாகவும் சைபர் செக்யூரிட்டியை மேம்படுத்த விவோ, சியோமி, ஒன் பிளஸ் போன்ற சைனா மொபைல் கம்பெனி உட்பட 30 மொபைல் கம்பெனிகளுக்கு சுற்றறிக்கை விடப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

காலிறுதிக்கு முந்தைய சுற்று இன்று முதல் தொடங்குகிறது. நாளொன்றுக்கு இரண்டு ஆட்டங்கள் வீதம் ஜூலை 4 முதல் 7 வரை எட்டு ஆட்டங்கள் நடைபெறும்.

Topics

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

காலிறுதிக்கு முந்தைய சுற்று இன்று முதல் தொடங்குகிறது. நாளொன்றுக்கு இரண்டு ஆட்டங்கள் வீதம் ஜூலை 4 முதல் 7 வரை எட்டு ஆட்டங்கள் நடைபெறும்.

பஞ்சாங்கம் ஜூலை 04 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

தெற்கு ரயில்வே சார்பாக இயக்கப்படும் திருநெல்வேலி மேட்டுப்பாளையம் திருநெல்வேலி சிறப்பு ரயில் உட்பட சில சிறப்பு ரயில் சேவைகள் ஜூலை இறுதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தென்னக இரயில்வே அறிவித்துள்ளது .

Entertainment News

Popular Categories