ப்யூச்சர் போனில் UPI வசதி!

upi - 2026

இந்தியாவில் பணப்பரிமாற்றத்திற்காக வெற்றிகரமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் திட்டங்களுள் ஒன்று UPI (Unified Payment Interface).

இந்தியாவில் ஒரு ஸ்மார்ட் போன் மற்றும் மொபைல் எண்ணுடன் இணைந்த வங்கிக் கணக்கு வைத்திருக்கும் யார் வேண்டுமானாலும் UPI மூலம் பணப்பரிமாற்றத்தை மேற்கொள்ள முடியும்.

ஆனால், இந்தியாவில் ப்யூச்சர் போனை (Feature Phone) எனும் கீபேட் கொண்ட போன்களைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை இன்றும் அதிக அளவில்லேயே இருக்கிறது.

இந்தியாவில் 74 கோடி பேர் ஸ்மார்ட் போனைப் பயன்படுத்தும் அதே நேரத்தில் 44 கோடி பேர் ப்யூச்சர் போனையே இன்னும் பயன்படுத்தி வருகிறார்கள்.

ப்யூச்சர் போன் பயன்படுத்தும் மக்களுக்கும் UPI பயன்பாட்டை அறிமுகப்படுத்தும் நோக்கத்தில் UPI மூலம் ஆஃப்லைன் பேமண்ட் வசதியை அறிமுகப்படுத்தும் திட்டத்தில் இருக்கிறது NPCI (National Payments Corporation of India).

UPI முறையாக இயங்க ஸ்மார்ட் போன் மற்றும் வங்கிக் கணக்கு மட்டுமின்றி சரியான இணைய இணைப்பும் அவசியம். இந்தியாவில் 59 சதவிகிதம் மக்கள் இன்னும் இணைய வசதியைப் பயன்படுத்தவில்லை.

ALSO READ:  நாடு திரும்புங்க; அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஸோஹோ ஸ்ரீதர் வேம்புவின் மடல்!

இதனால், இணைய இணைப்பு இல்லாத ஃபீச்சர் போன்களில் UPI Lite வசதி மூலம் பணப்பரிவர்த்தனை வசதிகளை அறிமுகப்படுத்துவதற்கான சோதனைகளை நடத்தத் தொடங்கியிருக்கிறது NPCI.

முதற்கட்டமாக இந்த UPI Lite மூலம் கிராமப்புறங்களில் 200 ரூபாய்க்கும் குறைவான பணப் பரிவர்த்தனையை ஜனவரி 5 முதல் சோதனை முறையில் நடத்திப் பார்க்க ரிசர்வ் வங்கி அனுமதி அளித்திருந்தது.

சிம் ஓவர்லே (Sim Overlay) மற்றும் OTA (Over-The-Air) அப்டேட் என இரண்டு வழிமுறைகள் மூலம் இணைய வசதி இல்லாத இடங்கள் மற்றும் இணைய வசதி இல்லாத ஃபீச்சர் போன்களில் ஆஃப்லைன் பேமண்ட்களை சாத்தியப்படுத்தத் திட்டமிட்டிருக்கின்றனர்.

சிம் ஓவர்லே வசதி கொண்ட ஃபீச்சர் போன்கள் மூலம் செய்யப்படும் பணப்பரிவர்த்தனைகள் NPCI சர்வர்களுக்குச் சென்று அங்கிருந்து வழக்கமான UPI பணப்பரிவர்த்தனை போலச் செயல்படும்.

இவையனைத்தும் இணைய இணைப்பு இல்லாமல், நாம் மொபைலில் எஸ்எம்எஸ் அனுப்பும் செயல்முறை போலச் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆஃப்லைன் பணப்பரிவர்த்தனை வழிமுறைகள் மூலம் இந்தியாவில் மொபைல் இணைப்புடன் வங்கிக் கணக்கு வைத்திருக்கும் யாராலும் UPI வழி பணப்பரிவர்த்தனையை மேற்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ:  ஈரான் விஷயத்தில் பாரதம் ஏன் தலையிடவில்லை?!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 25 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

ஹெச்.ராஜாயிஸமா? பொன்னாரிஸமா? தமிழிசையிஸமா? முருகனிஸமா? அண்ணாமலையிஸமா?

பஞ்சாங்கம் மே 24 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மே 23 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

எங்கேயிருந்தும் யாரிடமிருந்தும் குறைகள், குற்றச் செயல்கள் குறித்து ஆதாரங்கள் வெளிவந்தால் தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Topics

பஞ்சாங்கம் மே 25 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

ஹெச்.ராஜாயிஸமா? பொன்னாரிஸமா? தமிழிசையிஸமா? முருகனிஸமா? அண்ணாமலையிஸமா?

பஞ்சாங்கம் மே 24 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மே 23 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

எங்கேயிருந்தும் யாரிடமிருந்தும் குறைகள், குற்றச் செயல்கள் குறித்து ஆதாரங்கள் வெளிவந்தால் தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

விஜயின் வெற்றி – அதிர்ஷ்டமா? ஆளுமையா?

இலங்கை ஜெயராஜ் - இலக்கியப் பேச்சாளர்கேள்வி: விஜய்யின் தேர்தல் வெற்றியினைப் பார்த்தீர்களா?...

செங்கோட்டை – பெங்களூரு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கம்!

பெங்களூரு-செங்கோட்டை - பெங்களூரு கன்டோன்மென்ட் இடையே ஒரு வழி சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கம்!

வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அருணாச்சல பிரதேசம்

சுதர்சன் ஜி தான் அருணாச்சல பிரதேசத்துக்கு வந்த முதல் சர்சங்கசாலக். 2007 ல் அவர் அந்த மாநிலத்திற்கு விஜயம் செய்தார் . 2011 ல் முதன்முதலாக அந்த மாநிலத்தில் சங்க சிக்ஷா வர்க எனப்படும் இருபது நாட்கள் நடைபெறும் பயிற்சி முகாம் நடந்தது. நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அதில் பயிற்சி பெற்றனர்.

Entertainment News

Popular Categories