அறப்பளீசுர சதகம்: மனைவியின் மாண்பு!

arapaliswarar - 2026
  1. இல்லாளின் சிறப்பு

கணவனுக் கினியளாய், ம்ருதுபாஷி யாய், மிக்க கமலைநிகர் ரூப வதியாய்க்,
காய்சினம் இலாளுமாய், நோய்பழி யிலாததோர்
கால்வழியில் வந்த வளுமாய்,
மணமிக்க நாணம்மடம் அச்சம் பயிர்ப்பென்ன
வரும்இனிய மார்க்க வதியாய்,
மாமிமா மற்கிதம் செய்பவளு மாய், வாசல்
வருவிருந் தோம்பு பவளாய்,
இணையில்மகிழ் நன்சொல்வழி நிற்பவளு மாய்வந்தி
என்பெயர் இலாத வளுமாய்,
இரதியென வேலீலை புரிபவளு மாய்ப்பிறர்தம்
இல்வழி செலாத வளுமாய்,
அணியிழை யொருத்தியுண் டாயினவள் கற்புடையள்
ஆகும்;எம தருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!

எமது தேவனே! கணவன்
பார்வைக்கு இனியவளாய், இன்மொழி யுடையவளாய், திருமகளைப் போலச் சாலவும் அழகியாய்,
வெறுக்கத்தக்க கோபம் இல்லாதவளாய்,
நோயும் இழிவும் இல்லாத ஒப்பற்ற மரபிலே பிறந்தவளாய், புகழத்தக்க நான்கு பண்புகளும் பொருந்திய நல்லொழுக்கமுடையவளாய், மாமிக்கும் மாமனுக்கும் நலம் புரிபவளாய்,
வாயிலில் வரும் விருந்தினரை
ஆதரிப்பவளாய், ஒப்பற்ற
கணவன் மொழிப்படி நடப்பவளாய்,
மலடியெனும் பெயரில்லாதவளாய்,
இரதியைப்போல இன்பக்கலவி செய்பவளாய், மற்றவருடைய வீட்டுவழி செல்லாதவளாய், அழகிய அணிகலன்களையுடைய ஒரு
மங்கை இருந்தால், அவள் கற்புடையவள்
எனப்படுவாள்.

ALSO READ:  அகநானூறு, புறநானூரில் ஸ்ரீராமன்!

இரதியென லீலை புரிதலும், மகிழ்நன் சொல் வழிநிற்றலும் பிற்கூறப்பட்டன வாதலால் முதலிற்கூறிய இனிமை அழகினால் இனிமையூட்டுதலை மட்டுங் குறிப்பதாகும்.

மற்றையபண்புகள் பெண்களுக்குப் பொதுவானவை. நாணம் மடம் அச்சம் பயிர்ப்பு என்பவை பெண்களின் இயல்புக்குக் காவலான படைகள்.

புகழேந்தியாரும்,
‘நாற்குணமும் நாற்படையா’ என்று கூறுதலைக் காண்க. பெரும்பான்மையும்
ஒழுக்கங் கூறுதலின் சிறுபான்மையான நோய் பழியில்லாமையும்
கூறப்பட்டது. நோய் பழியிலாமை நோயற்ற வாழ்வுக்காகக் கூறப்பட்டது.

இரதி, மதன் எனப்படுவோர் காமத் தெய்வங்கள். கலையைக் கலைமகளாகவும், திருவைத் திருமகளாகவும், கொற்றத்தைக் (வெற்றியை) கொற்றவையாகவும் வழிபடுதல் போலக் காமத்தையும் இரதி, காமன் என வழிபடுதல் நம் நாட்டு வழக்கு.

சிலப்பதிகாரம், சிந்தாமணி போன்ற காவியங்களிற் காமக் கோட்டமும்
அங்குச் சென்று வழிபடுதலும் இருத்தலைக் காண்க. இங்குக் கூறப்பட்டவை கற்புடைய பெண்ணின் பண்புகள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 25 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

ஹெச்.ராஜாயிஸமா? பொன்னாரிஸமா? தமிழிசையிஸமா? முருகனிஸமா? அண்ணாமலையிஸமா?

பஞ்சாங்கம் மே 24 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மே 23 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

எங்கேயிருந்தும் யாரிடமிருந்தும் குறைகள், குற்றச் செயல்கள் குறித்து ஆதாரங்கள் வெளிவந்தால் தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Topics

பஞ்சாங்கம் மே 25 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

ஹெச்.ராஜாயிஸமா? பொன்னாரிஸமா? தமிழிசையிஸமா? முருகனிஸமா? அண்ணாமலையிஸமா?

பஞ்சாங்கம் மே 24 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மே 23 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

எங்கேயிருந்தும் யாரிடமிருந்தும் குறைகள், குற்றச் செயல்கள் குறித்து ஆதாரங்கள் வெளிவந்தால் தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

விஜயின் வெற்றி – அதிர்ஷ்டமா? ஆளுமையா?

இலங்கை ஜெயராஜ் - இலக்கியப் பேச்சாளர்கேள்வி: விஜய்யின் தேர்தல் வெற்றியினைப் பார்த்தீர்களா?...

செங்கோட்டை – பெங்களூரு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கம்!

பெங்களூரு-செங்கோட்டை - பெங்களூரு கன்டோன்மென்ட் இடையே ஒரு வழி சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கம்!

வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அருணாச்சல பிரதேசம்

சுதர்சன் ஜி தான் அருணாச்சல பிரதேசத்துக்கு வந்த முதல் சர்சங்கசாலக். 2007 ல் அவர் அந்த மாநிலத்திற்கு விஜயம் செய்தார் . 2011 ல் முதன்முதலாக அந்த மாநிலத்தில் சங்க சிக்ஷா வர்க எனப்படும் இருபது நாட்கள் நடைபெறும் பயிற்சி முகாம் நடந்தது. நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அதில் பயிற்சி பெற்றனர்.

Entertainment News

Popular Categories