மனிதர்களின் அறிவார்ந்த வாழ்க்கையில் ஏஐ.,யின் குறுக்கீடு ஓர் அபாயம்தான்!

artificial intelligence - 2026
#image_title

மனிதர்களின் அறிவார்ந்த வாழ்க்கையில் ஏ ஐ யின் குறுக்கீடு ஒரு அபாயம்தான்

பிரிட்ஜோப் காப்ராவின் நேர்காணல்
— கார்லோ பிஸ்ஸாட்டி —
— தமிழில் : திருநின்றவூர் ரவிக்குமார் —

இயற்பியலில் நோபல் பரிசு பெற்றவர் பிரிட்ஜோப் காப்ரா (86). மேற்கத்திய அறிவியலையும் கீழையஞானத்தையும் இணைக்கும் பாலமாக கருதப்படுவது அவர் எழுதிய தாவோ ஆப் பிசிக்ஸ் (இயற்பியலின் வழி). அது மிக அதிக விற்பனையான நூல் மாத்திரமன்று உலகின் பார்வையை மாற்றிய நூல்களில் ஒன்று. அது வெளிவந்து ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலான நிலையில் இன்றைய எண்ம உலகில் தொன்மையான ஆசிய ஞானத்தின் பொருத்தம் பற்றி இந்த நேர்காணலில் அவர் விவாதிக்கிறார். நேர்காணல் செய்த கார்லோ பிஸ்ஸாட்டி பிரபல எழுத்தாளர்.

bridge cobra - 2026

கேள்வி : மேற்கத்திய அறிவியலுக்கும் ஆசிய தத்துவங்களுக்கும் இடையேயான விவாதத்தில் தாவோ ஆப் பிசிக்ஸ் இன்றும் நிலைத்திருப்பது எப்படி ?

பதில் : அந்த புத்தகத்தை படித்துவிட்டு மக்கள் மிகவும் உணர்வுபூர்வமாக கருத்துக்களை சொன்ன போது நான் மிகவும் ஆச்சரியப்பட்டு போனேன். இயற்பியல் உலகில் எந்திரத்தனமான உலகியல் பார்வை மாறி முழுமையானதாகவும் சூழலியல் சார்ந்ததாகவும் மாறி விட்டிருந்ததே அந்த உணர்வுபூர்வமான எதிர் வினைக்கு காரணம். அது இப்பொழுது அறிவியல் துறைகள் எல்லாவற்றிலும் சமுதாயத்திலும் ஏற்பட்டு வருகிறது.

‘ நான் நீண்ட காலமாக நினைத்திருந்ததை ஆனால் வார்த்தைகளில் சொல்ல முடியாமல் இருந்ததை நீங்கள் சரியாக சொல்லி இருந்தீர்கள்’ என்றும் ‘இந்த புத்தகம் என் வாழ்க்கையை மாற்றி விட்டது’ என்றும் மக்கள் மீண்டும் மீண்டும் சொல்வதைக் கேட்கிறேன். வாழ்க்கையை பற்றிய சீரான பார்வை என்று நான் சொல்லும் புதிய உலக கண்ணோட்டத்தை பெரும்பாலான மக்கள் ஏற்றுக் கொள்கிறார்கள் என்றே நான் நினைக்கிறேன்.

உலகை பற்றிய இந்த ஒருங்கிணைந்த பார்வை உருவாகி வருவதும், கிழக்கத்திய தத்துவங்கள் மற்றும் ஆன்மீகத்துடன் தொடர்பு ஆகியவை இந்த நூல் நீடித்திருப்பதற்கு காரணம்.

கேள்வி : தாவோ ஆப் பிசிக்ஸ் நூல் மேற்கத்திய அறிவியலுக்கும் ஆசிய தத்துவங்களுக்கும் இடையே பாலமாக இருக்கிறது என்பது உண்மைதான். ஆனால் ஆன்மீகத்தை புத்தகத்தைப் படித்து தெரிந்து கொள்ள முடியாதே. ஆசிய தத்துவங்களை மேற்கத்திய அறிவியல் முறைகள்படி விளக்க முடியாவிட்டால் அவற்றின் சாரம் குறைந்து விடுவது மட்டுமின்றி அவற்றை கற்றுக் கொள்வதும் கடினமாகி விடும் இல்லையா ?

பதில் : தர்க்கபூர்வமாகவும் அறிவுபூர்வமாகவும் மட்டுமே விளக்க வேண்டும் என்றால் நீங்கள் சொல்லியது போல் அது கடினமாக இருக்கும் என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன். நான் தாவோ ஆப் பிசிக்ஸ் நூலை எழுதியபோது அறிவுபூர்வமாக மட்டுமன்றி உணர்வுபூர்வமாகவும் அனுபவபூர்வமாகவும் அதில் ஈடுபட்டேன். அதனால்தான் அந்த நூலுக்கு மக்கள் பெருமளவில் உணர்வுபூர்வமாக பதில் வினையாற்றினர்.

இயற்பியலுக்கும் கிழக்கத்திய ஆன்மீகத்துக்கும் இடையே உள்ள ஒற்றுமைகளை பற்றி விவாதித்த போது அது பற்றி மிக ஆழமான நிலையில் அவற்றை நான் அனுபவித்தேன். எனவே அது வெறும் கொள்கை அளவிலான அலசல் அல்ல. மேலும் இது மக்களை விலகிச் செல்ல செய்யும் என்றோ அல்லது அவர்களால் புரிந்து கொள்வது கடினமாகிவிடும் என்றோ நான் கருதவில்லை.

ஆன்மீக மரபுகளை அனுபவத்தால் மட்டுமே விளக்க முடியும் என்பது அதன் சாரத்தை குறைப்பதற்கு மாறாக ஊக்கமளிப்பதாகவும் உத்வேகம் கொடுப்பதாகவும் ஆக்கி விடுகிறது. பொதுவான கலாச்சார பயணத்தில் இதுவொரு இயல்பான செயல்பாடு.

1960 அல்லது 1970 களில் நீங்கள் ஒரு கம்பெனி வேலையில் இருந்து கொண்டு , எனக்கு யோகா வகுப்பு அல்லது தியான வகுப்பு அல்லது கீகோங் வகுப்பு இருக்கிறது. அதனால் கம்பெனியில் நடக்கும் கூட்டத்திற்கு வர முடியாது என்று சொன்னால், சிரித்துக்கொண்டே உங்களை வேலையிலிருந்து நீக்கி விடுவார்கள். இன்று அப்படியல்ல . அதுவொரு வழக்கமான நடவடிக்கையாக கருதப்படுகிறது. எனவே ஆன்மீக பயிற்சிகளில் ஈடுபடுவது இப்பொழுது மிகவும் விரிவானதாக ஆகியுள்ளது.

கேள்வி : ஆனால் இன்று அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் ஆசிய தத்துவ பயிற்சிகளான யோகா மற்றும் தியானத்தை பலரும் உலகியல் லாபங்களுக்காக – தியானம் பயிலும் மேனேஜர்கள் மேலும் திறமையானவர்களாக, யோகாசனம் செய்யும் மக்கள் மேலும் போட்டியில் நிலைத்து நிற்க என்று உலகியல் லாபங்களுக்காக – பயில்வதாக தெரிகிறது. தாவோ ஆப் பிஸிக்ஸ் நூலை படித்த வாசகர்கள் பலரும் ஆன்மீகத்தின் பயன்பாட்டுத் தன்மையை அந்த நூல் சிதைக்கிறது என்று கருதுகிறார்கள். இதை நீங்கள் ஏற்கிறீர்களா? இந்த தவறான புரிதல் உங்களுக்கு ஆச்சரியம் அளிக்கவில்லையா ?

பதில் : அமெரிக்காவில் உள்ள சில வலதுசாரி குழுக்கள் இந்த புதுயுக கருத்துக்களை கடத்திக் கொண்டு போய்விட்டார்கள் என்பது உண்மைதான். அதே வேளையில் சூழலியல் மாற்றங்கள் தொடர்பான அருணோதய இயக்கம், விடியலுக்கு வெள்ளிக்கிழமை போன்ற பெரிய இளைஞர்களின் இயக்கங்களின் செயல்பாடுகள் மற்றும் செனட்டார் பர்னி சாண்டர்ஸின் பணிகள் ஆக்குபை அமைப்பின் தாக்கம் போன்றவை எல்லாம் உலகில் எல்லா விஷயங்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை என்று மக்களை கருதச் செய்கின்றன. அவர்கள் இந்த பூவுலகின் அழகை பாதுகாக்க விரும்புகிறார்கள். இங்குள்ள வாழ்வனைத்தையும் பாதுகாக்க விரும்புகிறார்கள்.

ஆனால் நாம் பேசிக் கொண்டிருக்கும் இதே வேளையில் பிளவுவாத சக்திகளின் எழுச்சி, குறுகிய தேச நலன் சார்ந்த செயல்பாடுகள், வன்முறை, போர் ஆகியவற்றின் வேகமான எழுச்சிகளால் மேற் சொன்ன மாற்று இயக்கங்கள் வலிமை பெற முடியாமல் ஆகி வருகின்றன. இது மிகவும் வலி தரக்கூடிய விஷயமாக இன்று இருந்தாலும் இது கடந்து போகும், இது மாற்றத்திற்கான காலம் என்றே எனக்கு தெரிகிறது. இவை சுழற்சி வட்டங்கள் போல். நாம் இதிலிருந்து வெளியேறி விடுவோம். குறுகிய கால அரசியல் செயல்களை விட மாற்றத்திற்கான பரிணாம வளர்ச்சியின் செயல்பாடுகள் வலிமையானவை.

கேள்வி : முன்னெப்போதையும் விட இப்போது குவாண்டம் இயற்பியலை அதிகமாக கற்கிறார்கள். ஆனாலும் சமுதாயத்தில் நியூட்டனின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. குவாண்டம் இயற்பியல் இன்னமும் சமுதாயத்தில் அர்த்தமுள்ள வகையில் இணைந்து விடவில்லை என்பதை ஏற்றுக் கொள்கிறீர்களா? ஏன் அது பெரும் பாய்ச்சலை ஏற்படுத்தவில்லை ?

பதில் : நீங்கள் சொல்வது உண்மை என்று நினைக்கிறேன். உதாரணத்துக்கு நீங்கள் மருந்து, மருத்துவர்கள், மருத்துவமனைகள், மருந்து தயாரிக்கும் நிறுவனங்களை பாருங்கள். அவை மனித உடலை ஒரு இயந்திரமாக பார்க்கின்றன. நோய் என்றால் அந்த இயந்திரத்தின் ஏதோ ஒரு பாகத்தில் தவறு ஏற்பட்டுள்ளது. அதை வேதி பொருள்களை கொண்டு மாற்ற வேண்டும், சரி செய்ய வேண்டும் அல்லது அறுவை சிகிச்சை மூலம் சரி செய்ய வேண்டும். இப்போது ஆரோக்கியம் தொடர்பான ஒருங்கிணைந்த முழுமையான கண்ணோட்டத்தை வலியுறுத்தும் இயக்கங்கள் வளர்ந்து வருகின்றன. ஆனால் இயந்திரமாக பார்க்கும் கண்ணோட்டமே வலுவாக உள்ளது.

அதேபோல் நீங்கள் நிர்வாகங்களை பாருங்கள். மேனேஜர்கள் தங்கள் நிறுவனத்தை ஒரு இயந்திரமாக பார்ப்பதும், அதை நுட்பமாக மேம்படுத்த முயல்வதையும் பார்க்கலாம். இந்த மனப்பான்மை நீண்ட காலமாக இருப்பதால் அது வலிமையாக இருக்கிறது. இயந்திரமாக பார்க்கும் மாதிரியில் ஏராளமாக நிதியும் அறிவும் முதலீடு செய்யப்பட்டுள்ளதால் இதை மாற்ற முனைவது கடுமையான எதிர்ப்பை கிளப்புகிறது.

இப்போதுள்ள எரிசக்தி நிறுவனங்கள் இந்த உலகையே அழிக்கின்ற வர்த்தக மாதிரிகளை பின்பற்றும் விகாரமான சூழ்நிலை நிலவுகிறது. இந்த மோசமான நிலை தொடர காரணம் அவர்கள் அதில் ஏராளமாக முதலீடு செய்துள்ளது தான். அவர்கள் தங்கள் முதலீட்டை இழக்க விரும்பவில்லை.

இயந்திரமாக பார்க்கும் கண்ணோட்டத்தில் இருந்து மாறி சீரான, சரியான உலக பார்வைக்கு மாறுவது இன்றைய காலத்தின் தேவையாக இருக்கிறது. ஆனால் அந்த மாற்றம் சுலபமாகவும் இலகுவாகவும் நிகழ்ந்து விடாது. என் வாழ்க்கையில் அறிவியல் புரட்சிகளை பார்த்திருக்கிறேன். அதற்கு பழமையான உலக பார்வையின் அடிப்படையில் எதிர்வினைகளும் எதிர்ப்பு இயக்கங்களும் எதிர்த்தாக்குதல்களும் நடந்துள்ளன.

நம்முடைய உலக பண்பாட்டில் பரிணாம மாற்றம் ஏற்படுவதை தற்காலிக மற்றும் குறுகிய கால அரசியல் செயல்பாடுகள் தடுத்து நிறுத்தி விட முடியாது. ஆனால் இந்த மாற்றத்திற்கான வழி கடினமானது. அது சுலபமான பயணம் அல்ல. கரடு முரடான, கூரான கற்கள் நிரம்பிய சாலையது….

தொடர்ச்சிமனிதர்களின் அறிவார்ந்த வாழ்க்கையில் ஏஐ.,யின் குறுக்கீடு ஓர் அபாயம்தான் (2)!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

பங்குனி உத்திர ஆராட்டு விழாவுக்கு தயாராகிறது பம்பை!

ஆற்றின் தூய்மையைப் பாதுகாக்க, பக்தர்கள் தங்கள் ஆடைகளை ஆற்றில் வீசி எறிவதற்குத் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொகுதி, வேட்பாளர் தேர்வில் அதிருப்தி: காங்கிரஸில் என்ன நடக்கிறது?

காங்கிரசை எங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்கீங்க பாத்தீங்களா செல்வப்பெருந்தகை? என்று கட்சியினர் குமுறும் அளவுக்கு அவரது செயல்பாடு இருக்கிறது.

பஞ்சாங்கம் மார்ச் 31 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘இல்லத்தரசி கூப்பன்’ நன்மையா? நிதிச்சுமையா?

சட்டமன்ற தேர்தலுக்காக தி.மு.க. கொடுத்திருக்கும் தேர்தல் வாக்குறுதிகளில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும் அறிவிப்பும், ரூ.8000 இல்லத்தரசி கூப்பன்

Topics

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

பங்குனி உத்திர ஆராட்டு விழாவுக்கு தயாராகிறது பம்பை!

ஆற்றின் தூய்மையைப் பாதுகாக்க, பக்தர்கள் தங்கள் ஆடைகளை ஆற்றில் வீசி எறிவதற்குத் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொகுதி, வேட்பாளர் தேர்வில் அதிருப்தி: காங்கிரஸில் என்ன நடக்கிறது?

காங்கிரசை எங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்கீங்க பாத்தீங்களா செல்வப்பெருந்தகை? என்று கட்சியினர் குமுறும் அளவுக்கு அவரது செயல்பாடு இருக்கிறது.

பஞ்சாங்கம் மார்ச் 31 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘இல்லத்தரசி கூப்பன்’ நன்மையா? நிதிச்சுமையா?

சட்டமன்ற தேர்தலுக்காக தி.மு.க. கொடுத்திருக்கும் தேர்தல் வாக்குறுதிகளில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும் அறிவிப்பும், ரூ.8000 இல்லத்தரசி கூப்பன்

பஞ்சாங்கம் மார்ச் 30 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

வேதப் பண்பாட்டில் முறையற்றது எதுவுமில்லை!

வேதங்கள் வேறு, புராணங்கள் வேறு என்று புராணங்களை கீழ்மைப்படுத்துவதைப்  பார்க்க முடிகிறது. மேலும் சிலர், இவை எதுவும் தேவையில்லை. வேதாந்தம் மட்டுமே  போதும் என்பார்கள்

ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருமஞ்சனம்..

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம் நடந்து வரும் நிலையில்...

Entertainment News

Popular Categories