February 19, 2026, 3:00 AM
24.7 C
Chennai

மனிதர்களின் அறிவார்ந்த வாழ்க்கையில் ஏஐ.,யின் குறுக்கீடு ஓர் அபாயம்தான் (2)!

artificial intelligence - 2026
#image_title

பிரிட்ஜோப் காப்ராவின் நேர்காணல் தொடர்ச்சி
— கார்லோ பிஸ்ஸாட்டி —

— தமிழில் : திருநின்றவூர் ரவிக்குமார் —

இயற்பியலில் நோபல் பரிசு பெற்றவர் பிரிட்ஜோப் காப்ரா (86). மேற்கத்திய அறிவியலையும் கீழையஞானத்தையும் இணைக்கும் பாலமாக கருதப்படுவது அவர் எழுதிய தாவோ ஆப் பிசிக்ஸ் (இயற்பியலின் வழி). அது மிக அதிக விற்பனையான நூல் மாத்திரமன்று உலகின் பார்வையை மாற்றிய நூல்களில் ஒன்று. அது வெளிவந்து ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலான நிலையில் இன்றைய எண்ம உலகில் தொன்மையான ஆசிய ஞானத்தின் பொருத்தம் பற்றி இந்த நேர்காணலில் அவர் விவாதிக்கிறார். நேர்காணல் செய்த கார்லோ பிஸ்ஸாட்டி பிரபல எழுத்தாளர்….

ஓபன் மேகஸினில் வந்த அவருடைய நேர்காணலில் இருந்து… இரண்டாம் பகுதி!

முதல் பகுதி படிக்க... மனிதர்களின் அறிவார்ந்த வாழ்க்கையில் ஏஐ.,யின் குறுக்கீடு ஓர் அபாயம்தான்!


bridge cobra - 2026

கேள்வி : நம்முடைய மனதில் , நீங்கள் வடிவியலின் சிறை (Prison of geometry) என்று, சொல்லுகின்ற அழிவு திட்டங்கள் எப்படி வந்து சேர்கின்றன? அந்த கணத்தை விளக்க முடியுமா ?

பதில் : 1970 களில் தாவோ ஆப் பிஸிக்ஸ் வெளியானது. 1960 இல் தோன்றிய மாற்று கலாச்சாரம் என்ற உலகளாவிய வலை பின்னலில் நானும் ஒரு பகுதியாக இருந்தேன். அதுதான் 1970 களில் புதுயுக இயக்கத்துக்கு வழிகோலியது . உலகை பற்றிய புதிய பார்வை, புதிய ஆன்மீகம், புதிய மதிப்பீடுகள், புதிய வாழ்க்கை முறைகள், பாலின விடுதலை, போதை மருந்துகள் என்று லட்சியபூர்வமான இயக்கங்கள் தோன்ற வழி வகுத்தது. அவற்றிற்கு அரசியல் நோக்கம்/ பரிமாணம் இல்லை.

1980 களில் பசுமை/ சூழலியல் இயக்கங்கள் மூலம் அரசியல் பரிமாணம் ஏற்பட்டது. 1983 இல் ஜெர்மானிய பசுமைக் கட்சி அதிகாரத்துக்கு வந்தது. அதன் பிறகு அந்த இயக்கம் உலகமெங்கும் பரவியது. 1986 இல் கோர்ப்பச்சேவின் செயல்களால் 1980 களின் இறுதியில் புதுயுக இயக்கங்கள் திருப்புமுனையை சந்தித்தன. சமுதாயத்தை முற்றிலும் வேறு விதமாக வடிவமைப்பதற்கான எல்லா விஷயங்களும் எங்களுக்கு கிடைத்தன.

அப்போதுதான் நாங்கள் யாரும் எதிர்பார்க்காத தகவல் தொழில்நுட்ப புரட்சி ஏற்பட்டது. அது உலகின் பல பகுதிகளுடனான தொடர்பை, இணைப்பை அதிகரித்தது. ஆனால் ,அதே வேளையில், பணம் பண்ண வேண்டும் என்கின்ற புது வகையான முதலாளித்துவத்தை உலகில் உருவாக்கியது. பணம் சம்பாதிப்பதா அல்லது ஆரோக்கியம் , சமூக நீதி, பொருளாதார சமத்துவம் போன்ற மனித விழுமியங்களுக்கு முன்னுரிமை கொடுப்பதா என்ற தேர்வு முன்வந்தபோது செல்வம் சேர்ப்பதற்கே முன்னுரிமை என்ற முடிவை கணிணிகள் மேற்கொண்டன.

எனவே புதுவகையான உலகியல் உருவானது. ‘உலகமயமாக்கல்’ என்பது அந்த மாயச் சொல். எல்லோரும் அதை பயன்படுத்த தொடங்கினர். உலகமயமாக்களில் பல நல்ல, பயனுள்ள அம்சங்கள் இருந்தன. ஆனால் அதில் உள்ள கார்ப்பரேட் மற்றும் பொருளாதார உலகமயமாக்கல் மிகவும் கேடு விளைவிக்க கூடியவை. நான் அங்கம் வகித்த மாற்று கலாச்சார இயக்கங்களுக்கு புதிய உலகமயமாக்களை எதிர்கொள்ள ஒரு தசாப்த்திற்கும் மேலான காலம் தேவைப்பட்டது. 1990 களில் இறுதியில் சியாட்டிலில் நடந்த உலக வர்த்தக அமைப்பின் மாநாட்டை எதிர்த்து உலக சிவில் சமுதாயம் ஆர்ப்பாட்டம் நடத்திய போது தான் நாங்கள் 1980 களில் இருந்த நிலைக்கு மீண்டும் வந்தோம்.

தாவோ ஆப் பிசிக்ஸ் உருவாக்கிய , நான் அங்கம் வகித்த இயக்கம், எதிர்காலத்தைப் பற்றிய மாற்றுப் பார்வையை உருவாக்கியது என்று சொல்லலாம். ‘மற்றொரு உலகம் சாத்தியம்தான்’ என்ற கோஷத்துடன் உலக சமுதாய அமைப்பின் சார்பில் சர்வதேச அளவில் பல மாநாடுகள் நடத்தப்பட்டன. அது ஒரு உலக கண்ணோட்டம். அந்த உலக கண்ணோட்டத்தின் ஆரம்ப காலகட்டத்தில் தாவோ ஆப் பிசிக்ஸ் இடம் பெற்றிருந்தது. அந்த வகையில் இதுவொரு மரபின் தொடர்ச்சி எனலாம்.

கேள்வி : திட்டமிட்ட ரீதியிலான உங்கள் கண்ணோட்டத்தின்படி பர்மெனிடேஸூக்கும் ஹெராக்களிட்டஸூக்கும் இடையேயான முரண்பாடு – இருப்பது × விழைவு – விஷயத்தில் ஆசிய தத்துவங்கள் ஒருங்கிணைப்பை ஏற்படுத்துமா ?
( இருவரும் பண்டைய கிரேக்க தத்துவவாதிகள். ஒருவர் எல்லாவற்றிலும் ஊடுருவி நிற்பது ஒன்றுதான் என்றார். மற்றவர் எல்லாம் மாறிக்கொண்டே இருக்கின்றன என்றார். – மொழிபெயர்ப்பாளர்)

பதில் : தாவோ ஆப் பிசிக்ஸில் ஹெராக்ளிட்டஸை நான் கிரேக்க தாவோயிஸ்ட் என்று சொல்லியிருந்தேன். ஏனென்றால் அவரிடம் அந்த கருத்துக்கள் வலுவாக இருந்தன. ஒவ்வொரு கட்டமைப்புக்கும் அடியில் ஒரு வழிமுறை உள்ளது. அந்த வழிமுறைகளின் மூலமாகத்தான் அந்த கட்டமைப்பே வெளிப்படுகிறது. எனவே அந்த இயக்க விசை பற்றியும் நாம் கற்றுக் கொள்ள வேண்டும் என நினைக்கிறேன்.

நவீன அறிவியலையும் கீழைய ஆன்மீகத்தையும் இணைக்கின்ற இரண்டு பெரிய அம்சங்களை என்னுடைய நூலில் சுட்டிக்காட்டி இருந்தேன். ஒன்று, எல்லா பொருள்களும் அடிப்படையில் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை. இரண்டு, உலகின் மாறிக்கொண்டே இருக்கும் இயல்பு. இரண்டும் வாழ்க்கையை பற்றிய கண்ணோட்டங்கள். வாழ்க்கையை ஒரு வழிமுறை. வாழ்க்கை ஒரு வலை பின்னல். நீங்கள் பர்மெனிடெஸ் மற்றும் ஹெராக்ளிட்டஸ் என்று சொன்ன போது இருப்பு, விருப்பு என்ற சுவாரஸ்யமான சிந்தனை என் மனதில் எழுந்தது.

திட்டமிட்ட ரீதியில் வாழ்க்கையை பார்த்தோமானால் வளர்ச்சிதை மாற்றமே வாழ்க்கையின் முக்கிய அம்சமாக இருப்பதை பார்க்கலாம். சக்தியின் தொடர் ஓட்டம் மூலமாகவும் வேதிப்பொருள்களின் வினைத் தொகுப்பின் மூலமாகவும் பொருள்களின் வலை பின்னலும் வளர்சிதை மாற்றமும் நிகழ்கின்றன. இரண்டு அம்சங்கள் இதில் உள்ளன. ஒன்று, தொடர்ச்சியான ஓட்டம். இரண்டு, வலை பின்னல் . வலைப் பின்னல் தான் கட்டமைப்பு. சக்தி ஓட்டம் தான் வழிமுறை. ஒருவகையில் தொன்மையான இருப்பு , விருப்பு என்ற இரட்டையை இது பிரதிபலிப்பதாக உள்ளது. இந்த இரண்டின் இணைப்புதான் வளர்ச்சிதை மாற்றத்துக்கு வழிகோலுகிறது . இந்த கோணத்தில் யோசிக்கும் போது இதுபற்றி மேலும் எழுத வேண்டுமென நினைக்கிறேன்.

கேள்வி : இந்த கருத்தை மேலும் விரிவாக்கி நீங்கள் எழுதுவதை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். இப்போது செயற்கை நுண்ணறிவு – ஏ ஐ – வந்துள்ளது. இது உலக அளவில் வேறொரு வகையான வளர்ச்சிதை மாற்றத்திற்கு வழி வகுக்கும் என்று சிலர் கூறுகிறார்கள். இயந்திரவியலை அடிப்படையாகக் கொண்ட தொழிற்புரட்சியை கடந்து நாம் புதிய தொழில்நுட்பமான அல்கரிதம், சர்வர்கள், இப்போது ஏ ஐ க்கு வந்துள்ளோம். ஏ ஐ என்பது இன்னொரு கருத்தியல் சிறை என்று நீங்கள் நினைக்கிறீர்களா? அல்லது மனித சமுதாயத்தை, மனிதனின் தினசரி வாழ்க்கையை மாற்றி அமைக்க ஒரு வாய்ப்பு என்று கருதுகிறீர்களா ?

பதில் : இரண்டுமாகவும் அது இருக்கலாம். எதற்காக அது பயன்படுத்தப்படுகிறது என்பதை பொறுத்து அது சிறையாகவும் மாறலாம். இப்போது அது பயன்படுத்தப்படுவதை பார்க்கும் போது, உற்பத்தி வழிமுறைகளை நெறிப்படுத்துவது அதன் மூலம் உற்பத்தி திறனை அதிகரிப்பது என்பதை பார்க்கும்போது, அது மேலும் அதிக பணம் பண்ணுவதற்காகவே பயன்படுத்தப்படுகிறது. ஆனால் பொருளாதார லாபத்தில் கவனத்தைக் குவிப்பது ஆபத்தானது.

எல்லா உயிரினங்களின் வாழ்க்கையிலும் உள்ள இயற்கையான அறிவிலிருந்து வேறுபட்டது இந்த ஏ ஐ என்கின்ற செயற்கை நுண்ணறிவு. வாழும் அறிவு என்பது எல்லா வாழ்க்கை முறையிலும், உயிரினங்களிலும், உள்ளது. அது (சொல்ல முடியாத ஆனால்) உணர்வதையும், உயிரின் இயல்பையும், ஒழுங்கையும் கொண்டது. இந்த உலகில் இருப்பதையும், சுற்றி வருவதையும், உயிர் பிழைத்து இருப்பதையும், மேலும் வளர்ச்சியை , மாற்றத்தை அடைவதையும் தனது முக்கிய தன்மையாக கொண்டுள்ளது. இது எல்லா உயிரினங்களுக்கும் பொதுவானது.

ஏ ஐ யின் பயன்பாட்டை நாம் அதிகரிக்கும்போது அது நம்முடைய இயல்பான அறிவு செயல்பாட்டில் , வாழும் முறையில் குறுக்கிடும் அபாயம் உள்ளது. சற்றே சிந்தித்துப் பாருங்கள், இப்போது நாம் சமுதாயத்தில் ஆரோக்கியத்தை விட பணத்திற்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. எல்லா நேரங்களிலும் இல்லை, ஆனால் பெரும்பாலான நேரங்களில் பணத்துக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

பணம் சம்பாதிப்பதற்காக, அதிக பணம் சம்பாதிப்பதற்காக இயற்கை சூழலை நாம் அழிக்க ஆரம்பித்து விட்டோம். ஆனால் நம் வாழ்க்கையே இயற்கை சூழலைச் சார்ந்து தான் இருக்கிறது. வெளியில் இருந்து நம்மை பார்த்தீர்களானால், நம்முடைய நாகரீகமே மனித நலனை விட பணம் சம்பாதிப்பதற்கே அதிக முன்னுரிமை கொடுப்பதாக, அதற்காக இயற்கை சூழலியலையே அழிப்பதாக இருப்பதை காணலாம் . இது மிகவும் அறிவார்ந்த செயலாக, நாகரீகமாக கருத முடியாது. எனவே வாழும் அறிவுக்கு செயற்கை நுண்ணறிவுக்கும் இடையே மோதல் இருக்கிறது.

கேள்வி : இன்றுள்ள எண்ம புரட்சி, புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளின் ஒளியில் தாவோ ஆப் பிசிக்ஸை மீண்டும் எழுவதுவாக இருந்தால் அதில் எதை அப்படியே தக்க வைத்திருப்பீர்கள்? எதை மாற்றி எழுத முனைவீர்கள் ?

பதில் : எதற்கு அழுத்தம் கொடுத்து எழுதுவது என்பது மாறிவிடும். அந்த நூலில் பூட்ஸ்ட்ரேப் (Bootstrap) கொள்கையின் மீது கவனத்தை ஈர்த்திருந்தேன். அது இயற்பியலில் இப்போது பின்னகர்ந்து விட்டது. இப்போது சரக்கோட்பாடு (Sting Theory) என்ற நேர்த்தியான அதே வேளையில் சிக்கலான கோட்பாடு இயற்பியலின் மையமாக உள்ளது. அது பற்றிய விவாதத்தை முழுமையாக ஒருங்கிணைக்க விரும்புகிறேன்.

ஆனால் கீழைய ஆன்மீகம் மற்றும் அதன் இணைகளை பற்றிய எனது கருத்துக்களை மாற்றிக் கொள்ள மாட்டேன். இப்போதும் அந்த நூலை புரட்டிப் பார்க்கும்போது அதில் உள்ள அஸ்வகோஷ் , நாகார்ஜுனரின் மேற்கோள்களின் அழகு என்னை ஈர்க்கிறது. அவை காலத்தை மீறி நிற்பவை.

அந்த நூலின் கடைசி பாராவை இன்று ஏறத்தாழ ஒரு கோட்பாடாகவே படிக்க முடியும். ‘ உலகத்தைப் பற்றிய இயற்பியலின் பார்வை இன்று நம்முடைய நவீன சமுதாயத்திற்கு சற்றும் பொருத்தம் இல்லாமல் இருப்பதை காணலாம். இயற்கையில் ஒத்திசைவும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டும் இருப்பதை பார்க்கலாம். அது நம்முடைய சமுதாயத்தில் இன்று பிரதிபலிக்கவில்லை. அந்த சமநிலையை கொண்டு வர வேண்டுமென்றால் சமூக, பொருளாதார கட்டமைப்பில் மிகப்பெரிய மாற்றம் தேவை. வார்த்தையின் உண்மையான பொருளில் சொல்ல வேண்டுமென்றால் , கலாச்சார புரட்சி ஏற்பட வேண்டும்.’ என்னை பொறுத்தவரையில் தாவோ ஆப் பிஸிக்ஸின் உண்மையான தொடர்ச்சி அதுதான்.

நன்றி : ஓப்பன் மேகஸீன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

உணவே மருந்து! சர்க்கரை, இதய நோய்களில் இருந்து காத்துக் கொள்க!

இவ்வாறு உணவை சரிவிகிதமாக எடுத்து உடன் உடற்பயிற்சியையும் சேர்த்தால், நோயின்றி வாழ்வீர்கள் என்பது திண்ணம்.

Topics

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

உணவே மருந்து! சர்க்கரை, இதய நோய்களில் இருந்து காத்துக் கொள்க!

இவ்வாறு உணவை சரிவிகிதமாக எடுத்து உடன் உடற்பயிற்சியையும் சேர்த்தால், நோயின்றி வாழ்வீர்கள் என்பது திண்ணம்.

ரம்ஜான்-க்காக கூடுதல் செலவு எனினும் தாராள நிதி ஒதுக்கீடு! கோவில்கள் என்றால் பாரபட்சம்!

இல்லை என்றால் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை இந்து சமுதாயம் தனது இந்து ஓட்டு வங்கியின் மூலம் திமுக அரசுக்கு தக்க பதிலடி தந்தே தீரும்

5 வருடம் ஏமாற்றினார்கள்… ஆட்சியை விட்டு போகும் போதும் ஏமாற்றுகிறார்கள்!

The DMK government, which has been deceiving the people of Tamil Nadu for the last five years, did not stop deceiving the public in its last budget speech.

சரி… இன்று போய் நாளை வா!

குறுக்கு விசாரணை பண்றவன் என்ஜினீரிங், வணிக நிர்வாக மேலாண்மை, போலீஸ் நடைமுறைகள் மூன்றிலும் கைதேர்ந்தவன்! வித்தகன்!

Entertainment News

Popular Categories