விதவிதமாய் விநாயகர் உருவங்கள்! நாணயங்களில்! வெளிநாட்டிலும் கூட!

vinayakar coin1 - 2026

திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் சார்பில் காசுகளில் கணபதி கண்காட்சி முதன்முறையாக திருச்சியில் நடைபெற்றது.

கண்காட்சியில் சங்க காலத்திற்கும் நவீன காலத்திற்கும் இடைப்பட்ட காலங்களில் வெளிவந்த விநாயகர் உருவம் பொறித்த காசுகள் காட்சிக்கு வைக்கப் பட்டிருந்தன.

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு விநாயகர் உருவம் பொறித்த நாணயங்கள் புழக்கத்தில் இருந்துள்ளன. இவை காசுகளின் தொன்மையையும், ஆட்சி புரிந்த மன்னர்களையும், பொருளாதாரத்தையும், சமயத்தையும் எடுத்துரைப்பதாக அமைந்துள்ளது.

விநாயகர் உருவத்தில் வலம்புரி விநாயகர், இடம்புரி விநாயகர், நர்த்தன விநாயகர், ஐந்து கரம் கொண்ட விநாயகர், மூஞ்சூறு வாகனத்துடன் கூடிய விநாயகர், நாகபாரணம் அணிந்த விநாயகர், அமர்ந்த நிலை விநாயகர், நின்ற நிலை விநாயகர் என காசுகளில் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது.

மதுரை நாயக்கர், செஞ்சி நாயக்கர், வேணாடு சேரர், ரகுநாத நாயக்கர், செவ்வப்ப நாயக்கர், ஆற்காடு நவாப் உள்ளிட்ட ஆட்சிகாலத்தில் சிவன், விஷ்ணு, விநாயகர், முருகன் பொறித்த காசுகள் புழக்கத்தில் இருந்துள்ளது.

ALSO READ:  இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!
vinayakar coin2 - 2026

அதில் விநாயகர் உருவம் பொறித்த காசுகளை காட்சிப்படுத்தியது நாணயவியல் ஆர்வலர்களிடமும், பார்வையாளர்களிடமும் பரவசத்தை ஏற்படுத்தியது. திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்க தலைவர் விஜயகுமார் தலைமையில் நாணயவியல் சேகரிப்பாளர்கள் முகமது சுபேர், பாண்டியன், ரமேஷ் உள்ளிட்டோர் கணபதி காசுகளை காட்சிப்படுத்தி விளக்கினார்கள்.

இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் இந்தோனேஷியா நாட்டில் 1998ஆம் ஆண்டு 20 ஆயிரம் ரூபாய் பணத்தில் விநாயகர் உருவம் பொறிக்கப்பட்ட பணத்தாள் காட்சிப்படுத்தப்பட்டது.

vinayagar coin14 - 2026

பணத்தாள் முன்பக்கம் விநாயகரும், நாட்டின் சுதந்திரப் போராட்ட வீரரும் தியாகியுமான தேவேந்திரா படமும், பின்பக்கத்தில் வகுப்பறையில் மாணவர்கள் கல்வி பயிலும் படமும் இடம்பெற்றுள்ளது.

தாய்லாந்து நாட்டின் பத்துப்பாட் மதிப்புள்ள நாணயத்தில் விநாயகர் இடம் பெற்றுள்ளது. ஒரு டாலர் துவாலு நாட்டின் நாணயம் ஆஸ்திரேலியா அஞ்சல் துறை சிறப்பு அஞ்சல் உறையில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது

செயலர் குணசேகர், பொருளாளர் அஜிஸ், திருச்சிராப்பள்ளி நாணயவியல் கழக தலைவர் சார்லஸ், திருச்சிராப்பள்ளி தபால்தலை சேகரிப்பு கிளப் நிறுவனர் நாசர், ஹாபீஸ் அமைப்பின் நிறுவனர் மதன், கமலக்கண்ணன், சந்திரசேகரன், தாமோதரன் உட்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றார்கள்

  • யோகா விஜய், திருச்சி
ALSO READ:  சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories