விதவிதமாய் விநாயகர் உருவங்கள்! நாணயங்களில்! வெளிநாட்டிலும் கூட!

vinayakar coin1 - 2026

திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் சார்பில் காசுகளில் கணபதி கண்காட்சி முதன்முறையாக திருச்சியில் நடைபெற்றது.

கண்காட்சியில் சங்க காலத்திற்கும் நவீன காலத்திற்கும் இடைப்பட்ட காலங்களில் வெளிவந்த விநாயகர் உருவம் பொறித்த காசுகள் காட்சிக்கு வைக்கப் பட்டிருந்தன.

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு விநாயகர் உருவம் பொறித்த நாணயங்கள் புழக்கத்தில் இருந்துள்ளன. இவை காசுகளின் தொன்மையையும், ஆட்சி புரிந்த மன்னர்களையும், பொருளாதாரத்தையும், சமயத்தையும் எடுத்துரைப்பதாக அமைந்துள்ளது.

விநாயகர் உருவத்தில் வலம்புரி விநாயகர், இடம்புரி விநாயகர், நர்த்தன விநாயகர், ஐந்து கரம் கொண்ட விநாயகர், மூஞ்சூறு வாகனத்துடன் கூடிய விநாயகர், நாகபாரணம் அணிந்த விநாயகர், அமர்ந்த நிலை விநாயகர், நின்ற நிலை விநாயகர் என காசுகளில் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது.

மதுரை நாயக்கர், செஞ்சி நாயக்கர், வேணாடு சேரர், ரகுநாத நாயக்கர், செவ்வப்ப நாயக்கர், ஆற்காடு நவாப் உள்ளிட்ட ஆட்சிகாலத்தில் சிவன், விஷ்ணு, விநாயகர், முருகன் பொறித்த காசுகள் புழக்கத்தில் இருந்துள்ளது.

vinayakar coin2 - 2026

அதில் விநாயகர் உருவம் பொறித்த காசுகளை காட்சிப்படுத்தியது நாணயவியல் ஆர்வலர்களிடமும், பார்வையாளர்களிடமும் பரவசத்தை ஏற்படுத்தியது. திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்க தலைவர் விஜயகுமார் தலைமையில் நாணயவியல் சேகரிப்பாளர்கள் முகமது சுபேர், பாண்டியன், ரமேஷ் உள்ளிட்டோர் கணபதி காசுகளை காட்சிப்படுத்தி விளக்கினார்கள்.

இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் இந்தோனேஷியா நாட்டில் 1998ஆம் ஆண்டு 20 ஆயிரம் ரூபாய் பணத்தில் விநாயகர் உருவம் பொறிக்கப்பட்ட பணத்தாள் காட்சிப்படுத்தப்பட்டது.

vinayagar coin14 - 2026

பணத்தாள் முன்பக்கம் விநாயகரும், நாட்டின் சுதந்திரப் போராட்ட வீரரும் தியாகியுமான தேவேந்திரா படமும், பின்பக்கத்தில் வகுப்பறையில் மாணவர்கள் கல்வி பயிலும் படமும் இடம்பெற்றுள்ளது.

தாய்லாந்து நாட்டின் பத்துப்பாட் மதிப்புள்ள நாணயத்தில் விநாயகர் இடம் பெற்றுள்ளது. ஒரு டாலர் துவாலு நாட்டின் நாணயம் ஆஸ்திரேலியா அஞ்சல் துறை சிறப்பு அஞ்சல் உறையில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது

செயலர் குணசேகர், பொருளாளர் அஜிஸ், திருச்சிராப்பள்ளி நாணயவியல் கழக தலைவர் சார்லஸ், திருச்சிராப்பள்ளி தபால்தலை சேகரிப்பு கிளப் நிறுவனர் நாசர், ஹாபீஸ் அமைப்பின் நிறுவனர் மதன், கமலக்கண்ணன், சந்திரசேகரன், தாமோதரன் உட்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றார்கள்

  • யோகா விஜய், திருச்சி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories