சமூக இடைவெளி; சுமுக குளியல்! குற்றாலக் குளியலில் உற்சாகம் அடைந்த மக்கள்!

courtallam-bathing
courtallam-bathing பழைய குற்றால அருவியில் குளிக்க காத்திருந்த பயணிகள்….

தென்காசி மாவட்டம் குற்றால அருவிகளில் குளிப்பதற்கு இப்போது பொது மக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா நோயின் காரணமாக மிகுந்த கட்டுப்பாட்டுடன் பொது மக்கள் அனுமதிக்கப் படுகின்றனர். இதனால் சமூக தனிநபர் இடைவெளி விட்டு, குளிப்பதற்கு நீண்ட வரிசையில் காத்திருந்து சிறிது நேரக் குளியலில் சுற்றுலா பயணிகள் வெளிவருகின்றனர்….

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் 9 மாத காலத்திற்கு பின்பு சுற்றுலா பயணிகள் இன்று முதல் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். குளிக்க அனுமதி வழங்கப்பட்டதை தொடர்ந்து சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாகக் குளித்து வருகின்றனர்.

தென் தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையின் இயற்கை அழகுடன் கூடிய திருக்குற்றாலம் மிகச் சிறந்த ஆன்மிக சுற்றுலாத் தலமாகத் திகழ்கிறது. சிவபெருமானின் பஞ்ச நர்த்தன சபைகளில் சித்திர சபை இங்கே உள்ளது! 51 சக்தி பீடங்களில் புகழ்பெற்ற தரணி பீடம் உள்ள திருக்குற்றாலநாதர் திருக்கோயிலை ஒட்டிய மெயின் அருவி, புனித தீர்த்தக் கட்டங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. எனவே இங்கே குளிப்பது, உடலுக்கு புத்துணர்ச்சி அளிப்பதுடன், உடல் நோய் தீர்க்கும் அருமருந்தாகவும் ஆன்ம நலன் அதிகரிக்கும் திருமந்திரமாகவும் திகழ்கிறது. மிகப் பழங்காலம் முதலே குறுமுனி அகத்தியரால் வடிக்கப்பட்ட குற்றாலநாதரையும் தரிசித்து அருள் பெறுகின்றனர் பக்தர்கள்!

ALSO READ:  யானைகள் அணிவகுப்புடன், திருச்சூர் பூரம் விழா கொண்டாட்டம்!

இங்குள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி என பல்வேறு அருவிகளில், ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மூன்று மாதங்களான சீசன் காலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும். அப்போது தமிழகம் மட்டுமல்லாது வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும்கூட லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் குற்றாலம் வந்து நீராடிச் செல்வது வழக்கம்.

இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக குற்றாலம் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களில் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது கொரோனா தாக்கம் குறைந்ததை அடுத்து குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது.

இதன்படி, குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி வழங்கப் பட்டது. காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் நேற்று அதிகாலை மெயினருவியில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது .

ALSO READ:  தாம்பரம் - தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

மேலும் அருவியில் குளிக்க வருபவர்களுக்கு கொரோனா தடுப்பு நடவடிக்கை வழிமுறைகளின் படி அவர்களுக்கு வெப்ப பரிசோதனை செய்யப்பட்ட பின்னர் சமூக இடைவெளியுடன் அருவிகளில் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். மேலும் அருவிக்கு நீராட வருபவர்களின் பெயர் விவரங்களும் பதிவு செய்யப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

Entertainment News

Popular Categories