செங்கோட்டை அருகே பிரபலமான ஆரியங்காவு பாலருவியில் கோடையில் பெய்த மழையால் தண்ணீர் விழுகிறது.
தென்காசி மாவட்டத்தில் செங்கோட்டை அருகே தமிழகம்-கேரளாவின் பாதுகாப்பு அரணாக விளங்கும் எல்லைப் பகுதி மேற்குத்தொடர்ச்சி மலையாகும். இந்த மலை பகுதியின் செங்கோட்டை, புளியரை, கோட்டைவாசல் வழியாக ஆரியங்காவு சோதனை சாவடி அருகில் பாலருவி அமைந்துள்ளது.
அடர்ந்த வனப்பகுதியில் 300 அடி உயரம் உள்ள இந்த நீர்வீழ்ச்சியில் தொடர்மழையால் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டிவருகின்றது. தற்போது பாலருவியில் குளிக்க கேரள அரசு அனுமதியளித்து உள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
பாலருவி செல்ல செங்கோட்டை கொல்லம் வழித்தடத்தில் ஆரியங்காவில் இருந்து நான்கு கி.மீ தூரம் வனத்துக்குள் செல்லவேண்டும்.கேரளா வனத்துறை தனி வாகனங்களில் அழைத்துச்செல்கிறது.அருகில் பிரசித்தி பெற்ற ஆரியங்காவு ஐயப்பன் கோயில் உள்ளது.






