மூணாறில் குளிரை அனுபவிக்க குவிந்த சுற்றுலாப் பயணிகள்

20221228 070110 - 2026

கேரள மாநிலம் மூணாறில் கடந்த ஒரு வாரமாக வெப்ப நிலை மைனஸ் டிகிரி செல்சியஸ் வரை குறைந்து கடும் குளிர் நிலவுவதால் அதனை அனுபவிக்க சுற்றுலா பயணிகள் குவிந்து வரும் நிலையில் தொடர் உறைபனியால் தேயிலைச் செடிகள் கருகி வருகின்றன.

மூணாறில் ஜன.9 முதல் இன்று வரை காலையில் குறைந்தபட்ச வெப்ப நிலை மைனஸ் ஒன்று முதல் மைனஸ் 3 டிகிரி செல்சியஸ் வரை பதிவானது. குறிப்பாக கன்னிமலை, தேவிகுளம், லாக்காடு, செண்டுவாரை, நல்லதண்ணி உள்பட பல்வேறு எஸ்டேட் பகுதிகளிலும் பாம்பாடும் சோலை தேசிய பூங்காவுக்கு உட்பட்ட பகுதிகளிலும் ஒரு வாரமாக வெப்ப நிலை வெகுவாக குறைந்து உறைபனி ஏற்பட்டது. அதனால் கடும் குளிர் நிலவியதால் காலையில் பொது மக்களின் அன்றாட பணிகள் முடங்கிய நிலையில் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

அதேசமயம் அதிகரித்த குளிரை அனுபவிக்க உறைபனி ஏற்பட்ட பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் படை எடுத்தனர். குறிப்பாக மூணாறு அருகில் உள்ள கன்னிமலை எஸ்டேட் பகுதியில் 2 நாட்களாக சுற்றுலா பயணிகள் பெரும் அளவில் குவிந்தனர். தற்போது உறைபனி இல்லை என்ற போதும் குளிரை குழந்தைகளுடன் அனுபவித்தனர்.

Tamil News large 3219123 - 2026

ஒருவாரமாக நிலவிய உறைபனியால் தேயிலைச் செடிகள் கருகி வருகின்றன. இரு தனியார் கம்பெனிகளுக்குச் சொந்தமான எஸ்டேட்டுகளில் நூற்றுக்கணக்கான ஏக்கர் தேயிலைச் செடிகள் கருகின.லாக்காடு எஸ்டேட்டில் நேற்று வரை 62 ஏக்கர் தேயிலைச் செடிகள் கருகின. அதனால் பச்சை தேயிலை பறிக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளதால் உற்பத்தி பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

கேரள மாநிலத்தின் சுற்றுலாத் தலங்களில் ஒன்றான மூணாறு பகுதியில் கடந்த சிலநாட்களில் காலை வெப்பநிலை பூஜ்ஜியத்தைத் தொட்டது.இந்த குளிர்காலத்தில் மிகக் குறைந்த வெப்பநிலையாக இது பதிவாகியிருக்கிறது.

மூணாறு பகுதியில் குண்டுமலா மற்றும் தேவிகுளம் லக்கட் பகுதிகளில் வெள்ளிக்கிழமை வெப்பநிலை பூஜ்ஜியத்தைத் தொட்ட நிலையில், மலைமுகடுகளை வெண்பனி மூடியிருந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.அதேவேளையில், மூணாறுக்கு அருகே வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸ் அளவாகவும், செந்துவரை உள்ளிட்ட இடங்களில் 2 டிகிரி செல்சியஸ் அளவுக்கு பதிவாகியிருந்ததாகக் கூறப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

Topics

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories