மூணாறில் குளிரை அனுபவிக்க குவிந்த சுற்றுலாப் பயணிகள்

20221228 070110 - 2026

கேரள மாநிலம் மூணாறில் கடந்த ஒரு வாரமாக வெப்ப நிலை மைனஸ் டிகிரி செல்சியஸ் வரை குறைந்து கடும் குளிர் நிலவுவதால் அதனை அனுபவிக்க சுற்றுலா பயணிகள் குவிந்து வரும் நிலையில் தொடர் உறைபனியால் தேயிலைச் செடிகள் கருகி வருகின்றன.

மூணாறில் ஜன.9 முதல் இன்று வரை காலையில் குறைந்தபட்ச வெப்ப நிலை மைனஸ் ஒன்று முதல் மைனஸ் 3 டிகிரி செல்சியஸ் வரை பதிவானது. குறிப்பாக கன்னிமலை, தேவிகுளம், லாக்காடு, செண்டுவாரை, நல்லதண்ணி உள்பட பல்வேறு எஸ்டேட் பகுதிகளிலும் பாம்பாடும் சோலை தேசிய பூங்காவுக்கு உட்பட்ட பகுதிகளிலும் ஒரு வாரமாக வெப்ப நிலை வெகுவாக குறைந்து உறைபனி ஏற்பட்டது. அதனால் கடும் குளிர் நிலவியதால் காலையில் பொது மக்களின் அன்றாட பணிகள் முடங்கிய நிலையில் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

அதேசமயம் அதிகரித்த குளிரை அனுபவிக்க உறைபனி ஏற்பட்ட பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் படை எடுத்தனர். குறிப்பாக மூணாறு அருகில் உள்ள கன்னிமலை எஸ்டேட் பகுதியில் 2 நாட்களாக சுற்றுலா பயணிகள் பெரும் அளவில் குவிந்தனர். தற்போது உறைபனி இல்லை என்ற போதும் குளிரை குழந்தைகளுடன் அனுபவித்தனர்.

Tamil News large 3219123 - 2026

ஒருவாரமாக நிலவிய உறைபனியால் தேயிலைச் செடிகள் கருகி வருகின்றன. இரு தனியார் கம்பெனிகளுக்குச் சொந்தமான எஸ்டேட்டுகளில் நூற்றுக்கணக்கான ஏக்கர் தேயிலைச் செடிகள் கருகின.லாக்காடு எஸ்டேட்டில் நேற்று வரை 62 ஏக்கர் தேயிலைச் செடிகள் கருகின. அதனால் பச்சை தேயிலை பறிக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளதால் உற்பத்தி பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

கேரள மாநிலத்தின் சுற்றுலாத் தலங்களில் ஒன்றான மூணாறு பகுதியில் கடந்த சிலநாட்களில் காலை வெப்பநிலை பூஜ்ஜியத்தைத் தொட்டது.இந்த குளிர்காலத்தில் மிகக் குறைந்த வெப்பநிலையாக இது பதிவாகியிருக்கிறது.

மூணாறு பகுதியில் குண்டுமலா மற்றும் தேவிகுளம் லக்கட் பகுதிகளில் வெள்ளிக்கிழமை வெப்பநிலை பூஜ்ஜியத்தைத் தொட்ட நிலையில், மலைமுகடுகளை வெண்பனி மூடியிருந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.அதேவேளையில், மூணாறுக்கு அருகே வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸ் அளவாகவும், செந்துவரை உள்ளிட்ட இடங்களில் 2 டிகிரி செல்சியஸ் அளவுக்கு பதிவாகியிருந்ததாகக் கூறப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து 23 பேர் பலி..

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து 23 பேர் பலியான...

பஞ்சாங்கம் ஏப்ரல் 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

நல்ல வாய்ப்பை வீணடித்து விட்டார்கள் இண்டி கூட்டணியினர்!

2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வந்தால், தெற்கின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்; குடும்பக் கட்டுப்பாடு விஷயங்களில் ஒழுக்கமாக இருப்பதற்காக அது மேலும் தண்டிக்கப்படும்.

‘மகளிருக்கும் தமிழருக்கும்’ கொடுத்தார் மோடி; கெடுத்தார் ஸ்டாலின்! 

இதில் இருந்தே, இந்த மசோதாவை எதிர்ப்பதில் திமுக., எவ்வளவு தீயாய் வேகம் காட்டியிருக்கிறது என்பது தெளிவாகத் தெரியவரும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து 23 பேர் பலி..

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து 23 பேர் பலியான...

பஞ்சாங்கம் ஏப்ரல் 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

நல்ல வாய்ப்பை வீணடித்து விட்டார்கள் இண்டி கூட்டணியினர்!

2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வந்தால், தெற்கின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்; குடும்பக் கட்டுப்பாடு விஷயங்களில் ஒழுக்கமாக இருப்பதற்காக அது மேலும் தண்டிக்கப்படும்.

‘மகளிருக்கும் தமிழருக்கும்’ கொடுத்தார் மோடி; கெடுத்தார் ஸ்டாலின்! 

இதில் இருந்தே, இந்த மசோதாவை எதிர்ப்பதில் திமுக., எவ்வளவு தீயாய் வேகம் காட்டியிருக்கிறது என்பது தெளிவாகத் தெரியவரும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தேர்தலில் வாக்களிக்க… சிறப்பு ரயில்கள் இயக்கம்; விவரம் இதோ!

தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலுக்காக தாம்பரம் - செங்கோட்டை & செங்கோட்டை- சென்னை பீச் மற்றும் கன்னியாகுமரி, போத்தனூர் ஆகிய ஊர்களுக்கு இடையே சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்குகிறது.

பராபவ – பெயர் எப்படி இருந்தாலும், நன்மை பயக்கட்டும்!

பராபவ என்ற வடமொழிச்சொல்லுக்கு ‘அவமானம்’ ‘தோல்வி’ என்பதெல்லாம் பொருள். ஆனால் இதெல்லாம் யாருக்கு ஏற்படும் என்றறிந்து கொள்வது முக்கியம்.

நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது

Entertainment News

Popular Categories