பாரதியாரின் முழு நீள கவிதையை தமிழில் கூறி அசத்திய பிரதமர் மோடி!

குஜராத் மாநிலத்தில் இன்று தேசிய ஒற்றுமை தின நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, தேசியக் கவி சுப்ரமணிய பாரதியாரின் பாடல் வரிகளை மேற்கோள் காட்டி பேசி அசத்தினார்.

நர்மதா மாவட்டத்தின் கெவாடியாவில் நடைபெற்ற தேசிய ஒற்றுமை தின நிகழ்ச்சியில் பேசிய அவர், பாரதியாரின் மன்னும் இமயமலை எங்கள் மலையே, மாநிலம் மேல் இது போல் பிறிது இல்லையே என்ற பாடலின் முதல் 8 வரிகளை தமிழிலேயே கூறினார்.

பின்னர் இந்தப் பாடல் வரிகளுக்கான பொருளை அவர் இந்தியிலும் மொழிபெயர்த்துக் கூறினார். அப்போது அவர், உலகின் மிகப் பழமையான மொழியான தமிழில் நம் நாட்டைப் புகழ்ந்து சுப்ரமண்ய பாரதி எழுதி உள்ளதாகக் குறிப்பிட்டார்.

பிரதமர் மோடி தற்போது பல இடங்களில் தமிழ்ப் பாடல் வரிகளை மேற்கோள் இட்டு உரை நிகழ்த்தி வருகிறார். இதே போன்று சுதந்திர தின உரையிலும் பாரதியின் வரிகளை பிரதமர் மோடி மேற்கோள் காட்டினார். லடாக்கில் ராணுவ வீரர்கள் மத்தியில் பேசும்போதும் திருக்குறளை மேற்கோள் காட்டினார்.

இன்று சர்தார் வல்லப பாய் படேலின் 145 வது பிறந்தநாள் நாடு முழுதும் கொண்டாடப் பட்டது. இதனை முன்னிட்டு குஜராத்தில் உள்ள சர்தார் வல்லப பாய் படேலின் பிரம்மாண்ட சிலைக்கு மரியாதை செலுத்தினார் பிரதமர் மோடி.

ALSO READ:  ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஒற்றுமை சிலை என்று பெயரிடப் பட்டுள்ள படேலின் சிலைக்கு மரியாதை செலுத்திய பின்னர் மக்களிடையே உரையாற்றினார் பிரதமர் மோடி. அப்போது, பாரதியாரின் மன்னும் இமயமலை எனத் தொடங்கும் தமிழ்க் கவிதையை தமிழில் கூறி பின்னர் அதற்கான விளக்கத்தை ஹிந்தியில் கூறினார்.

மன்னும் இமயமலை எங்கள் மலையே;
மாநிலமீததுபோல் பிறிதில்லையே!

இன்நறு நீர் கங்கை ஆறு எங்கள் ஆறே;
இங்கிதன் மாண்பிற்கு எதிர் ஏது வேறே?

பன்னரும் உபநிட நூல்எங்கள் நூலே;
பார்மிசை ஏதொரு நூலிது போலே!

பொன்னொளிர் பாரத நாடெங்கள் நாடே;
போற்றுவம் இதை எமக்கில்லை ஈடே!

மாரத வீரர் மலிந்த நன் நாடு;
மாமுனிவோர் பலர் வாழ்ந்த பொன் நாடு!

நாரத கான நலம் திகழ் நாடு;
நல்லன யாவையும் நாடுறு நாடு!

பூரண ஞானம் பொலிந்த நன் நாடு;
புத்தர் பிரான் அருள் பொங்கிய நாடு!

பாரத நாடு பழம்பெரும் நாடே;
பாடுவம் இதை எமக்கில்லை ஈடே! .

ALSO READ:  வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

பஞ்சாங்கம் ஜூன் 13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 12 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories