பாரதியாரின் முழு நீள கவிதையை தமிழில் கூறி அசத்திய பிரதமர் மோடி!

sddefault-4
sddefault-4

குஜராத் மாநிலத்தில் இன்று தேசிய ஒற்றுமை தின நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, தேசியக் கவி சுப்ரமணிய பாரதியாரின் பாடல் வரிகளை மேற்கோள் காட்டி பேசி அசத்தினார்.

நர்மதா மாவட்டத்தின் கெவாடியாவில் நடைபெற்ற தேசிய ஒற்றுமை தின நிகழ்ச்சியில் பேசிய அவர், பாரதியாரின் மன்னும் இமயமலை எங்கள் மலையே, மாநிலம் மேல் இது போல் பிறிது இல்லையே என்ற பாடலின் முதல் 8 வரிகளை தமிழிலேயே கூறினார்.

பின்னர் இந்தப் பாடல் வரிகளுக்கான பொருளை அவர் இந்தியிலும் மொழிபெயர்த்துக் கூறினார். அப்போது அவர், உலகின் மிகப் பழமையான மொழியான தமிழில் நம் நாட்டைப் புகழ்ந்து சுப்ரமண்ய பாரதி எழுதி உள்ளதாகக் குறிப்பிட்டார்.

பிரதமர் மோடி தற்போது பல இடங்களில் தமிழ்ப் பாடல் வரிகளை மேற்கோள் இட்டு உரை நிகழ்த்தி வருகிறார். இதே போன்று சுதந்திர தின உரையிலும் பாரதியின் வரிகளை பிரதமர் மோடி மேற்கோள் காட்டினார். லடாக்கில் ராணுவ வீரர்கள் மத்தியில் பேசும்போதும் திருக்குறளை மேற்கோள் காட்டினார்.

இன்று சர்தார் வல்லப பாய் படேலின் 145 வது பிறந்தநாள் நாடு முழுதும் கொண்டாடப் பட்டது. இதனை முன்னிட்டு குஜராத்தில் உள்ள சர்தார் வல்லப பாய் படேலின் பிரம்மாண்ட சிலைக்கு மரியாதை செலுத்தினார் பிரதமர் மோடி.

ஒற்றுமை சிலை என்று பெயரிடப் பட்டுள்ள படேலின் சிலைக்கு மரியாதை செலுத்திய பின்னர் மக்களிடையே உரையாற்றினார் பிரதமர் மோடி. அப்போது, பாரதியாரின் மன்னும் இமயமலை எனத் தொடங்கும் தமிழ்க் கவிதையை தமிழில் கூறி பின்னர் அதற்கான விளக்கத்தை ஹிந்தியில் கூறினார்.

மன்னும் இமயமலை எங்கள் மலையே;
மாநிலமீததுபோல் பிறிதில்லையே!

இன்நறு நீர் கங்கை ஆறு எங்கள் ஆறே;
இங்கிதன் மாண்பிற்கு எதிர் ஏது வேறே?

பன்னரும் உபநிட நூல்எங்கள் நூலே;
பார்மிசை ஏதொரு நூலிது போலே!

பொன்னொளிர் பாரத நாடெங்கள் நாடே;
போற்றுவம் இதை எமக்கில்லை ஈடே!

மாரத வீரர் மலிந்த நன் நாடு;
மாமுனிவோர் பலர் வாழ்ந்த பொன் நாடு!

நாரத கான நலம் திகழ் நாடு;
நல்லன யாவையும் நாடுறு நாடு!

பூரண ஞானம் பொலிந்த நன் நாடு;
புத்தர் பிரான் அருள் பொங்கிய நாடு!

பாரத நாடு பழம்பெரும் நாடே;
பாடுவம் இதை எமக்கில்லை ஈடே! .

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories