Homeவீடியோபொதிகை எக்ஸ்பிரஸ் - முதல் WAP-7 மின்சார எஞ்சின் இயக்கம்

பொதிகை எக்ஸ்பிரஸ் – முதல் WAP-7 மின்சார எஞ்சின் இயக்கம்

-

நவம்பர் ஒன்றாம் தேதி, புதன்கிழமை, இன்று முதல், பொதிகை, சிலம்பு, மயிலாடுதுறை விரைவு ரயில்கள், முழுமையாக செங்கோட்டை முதல், மின்சார இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது.

இன்று மாலை, ஆறு இருபதுக்கு, செங்கோட்டையிலிருந்து, சென்னைக்குப் புறப்படும் பொதிகை அதிவேக ரயில், முதல் முதலாக செங்கோட்டையிலிருந்து சென்னை வரை, நடுவில் எஞ்சின் மாற்றமின்றி, மின்சார லோகோவால் இயக்கப்பட்டது. இதை முன்னிட்டு, செங்கோட்டை ரயில் பயணிகள் நலச் சங்கத்தினர், ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். இன்று மாலை, ஐந்து முப்பதுக்கு, செங்கோட்டை ரயில் நிலையத்தின், முதல் நடைமேடையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பொதுமக்கள், அனைத்துக் கட்சியினர், ரோட்டரி, மற்றும் லயன்ஸ் சங்கங்களின் உறுப்பினர்கள், கலந்து கொண்டார்கள்.

மின்சார எஞ்சின் முகப்பில், செங்கோட்டை ரயில் பயணிகள் நலச் சங்கத்தினர் வடிவமைத்துள்ள, பேனர் ஒன்று கட்டப்பட்டது. மின்சாரக் கண்ணா, என்று குறிப்பிட்டு, மின்சார எஞ்சின் மூலமான இயக்கத்துக்கு, வரவேற்பு தெரிவிக்கப்பட்டது.

முதல் மின்சார எஞ்சினின் லோகோ பைலட்டுகள், ரயில் நிலைய அதிகாரி, பயணச் சீட்டு பரிசோதகர் உள்ளிட்டவர்களுக்கும், பொதுமக்களுக்கும் இனிப்புகள் கொடுக்கப்பட்டன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.