தைப்பூச புஷ்கர மண்டபத்துக்குப் போடப்பட்ட பூட்டை உடைக்கும் போராட்டத்தில் இந்து முன்னணி!

Published:

பூஷ்கர மண்டப பூட்டு உடைப்பு போராட்ட களத்தில் இந்துமுன்னணி. தைப்பூச மண்டபத்துக்கு போடப் பட்ட பூட்டை உடைக்கும் முகமாக போராட்டத்தை அறிவித்தது இந்துமுன்னணி.

இதை அடுத்து இன்று போராட்டக்களத்தில் இறங்கியது. இந்து சமய அறநிலைய துறை செயல் அலுவலருடன் இந்து முன்னணியினர் கடும் வாக்குவாதம் செய்தனர்.

தாமிரபரணி புஷ்கர நிகழ்ச்சிக்கு தடைவிதித்து நெல்லை சந்திப்பில் உள்ள தைப்பூச மண்டபத்தை பூட்டுபோட்ட அறநிலையத்துறையை கண்டித்து நெல்லை மாநகர இந்துமுன்னணி சார்பில் இந்துமுன்னணி மாநில துணைத்தலைவர் வி.பி.ஜெயக்குமார் தலைமையில் பூட்டை உடைக்கும் போராட்டம் நடைபெற்றது.

மண்டபத்திற்கு அருகில் சென்றவர்களை தடுத்து நிறுத்திய காவல்துறை ஆய்வாளர் மற்றும் தாசில்தார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். முடிவில் வருகிற திங்கள் கிழமை மாலை மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்து தைப்பூச மண்டபத்தில் விழா நடத்த சுமூக தீர்வு ஏற்படுத்துவதாக தாசில்தார் உறுதியளித்தார்.

ALSO READ:  அரசு உத்தரவை மீறி பள்ளியில் செபக்கூட்டம்; புகாரளித்த இந்து முன்னணியினர் கைது!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img