கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவிப்பதில் தகராறு; டிடிவி தினகரன் அதிமுக., கோஷ்டி மோதல்!

மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு மாலை போடும் போது அ.தி.மு.க.வினருக்கும் டி.டி.வி.தினகரன் தரப்புக்கும் இடையே வாக்குவாதம் – கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

வீரபாண்டிய கட்டபொம்மனின் 219 வது நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை பெரியார் பேருந்து நிலையம் எதிரே உள்ள வீரபாண்டிய கட்டபொம்மனின் முழு உருவச் சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர், சமுதாய அமைப்புகள் மலர் அஞ்சலி செலுத்துவதற்காக நேரம் ஒதுக்கப்பட்டு இருந்தது.

அதில் டி.டி.வி.தினகரன் 9:30 மணிக்கு அஞ்சலி செலுத்த வருவதாக தெரிவிக்கப் பட்டு பின்னர் நேரம் 11 மணியாக மாறுதல் செய்யப்பட்டது.

இதனிடையே 10:30 மணிக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருந்த அ.தி.மு.க.வினர், மாவட்ட அவைத் தலைவர் துரைப்பாண்டியன் தலைமையில் வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவிக்க வந்தனர்.

அப்போது ஏற்கெனவே சிலை அருகே கூடியிருந்த டி.டி.வி.தினகரன் தரப்பினருக்கும் அ.தி.மு.கவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

டி.டி.வி. தரப்பினர் சசிகலா வாழ்க எனவும் டி.டி.வி.வாழ்க எனவும் கோஷங்களை எழுப்பினார்கள். அ.தி.மு.க.வினர் டி.டி.வி. தரப்பினருக்கு எதிராக ஜெயலலிதா வாழ்க எனவும் எடப்பாடி பழனிசாமி, ஒ.பி.எஸ். வாழ்க எனவும் கோஷங்களை எழுப்பினார்கள்.

இதனால் அ.தி.மு.க.வினருக்கும் டி.டி.வி. தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கூச்சல் – குழப்பம் நிலவியது. அதை தடுக்க வந்த போலீஸாருக்கும் கட்சி காரர்களுக்கும் இடையேயும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Topics

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

அமெரிக்காவில் 1.7 பில்லியன் ஆண்டுகள் பழமையான விஷ்ணு பாறைகள்

இந்த விஷ்ணு கோவில் அல்லது விஷ்ணுப் பாறைகளுக்கு அருகே மேலு இரண்டு பாறைத் தொடர்களுக்கு ப்ரும்மா பாறை, ராம் பாறை என்றும் பெயரிடப்பட்டிருக்கிறது.

Entertainment News

Popular Categories