மாணவிக்கு பாலியல் தொல்லையாம்! ஆசிரியர் மண்டையை உடைத்த உறவினர்கள்!

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே பத்தாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறி வகுப்பறைக்கு உள்ளே புகுந்து அரசுப் பள்ளி ஆசிரியரை உறவினர்கள் அடித்து உதைத்தனர். இதில் ஆசிரியரின் மண்டை உடைந்தது. மாணவ மாணவிகள் முன்னிலையில் நடைபெற்ற தாக்குதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செங்கம் அடுத்த மேல்நாச்சிப்பட்டு கிராமத்தில் அரசு உயர் நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு கணித ஆசிரியராக இருப்பவர் கண்ணன். இவர் மேல்நாச்சிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

மாணவி 5 நாட்களாக பள்ளிக்குச் செல்லாமல் இருந்தார். இதனால் அந்த மாணவியிடம் பெற்றோர் ஏன் என்று விசாரித்துள்ளனர். அப்போது அவர் தனக்கு ஆசிரியர் கண்ணன் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறியுள்ளார்.

இதைக் கேட்டு கடும் கோபம் அடைந்த உறவினர்கள், அரசுப் பள்ளிக்குச் சென்று ஆசிரியர் கண்ணனிடம் விசாரிக்கச் சென்றுள்ளனர். ஆனால், அவரை வகுப்பறைக்குள் தள்ளி, சரமாரியாகத் தாக்கினர்.

maxresdefault 34 - 2026

ஆசிரியர் உட்காரும் நாற்காலியை எடுத்து தலையில் அடித்ததில், அவர் மண்டை உடைந்தது. கண்ணன் தலையில் ரத்தம் கொட்டியதைக் கண்டு வகுப்பில் இருந்த மாணவிகள் கூச்சலிட்டனர். சோர்வடைந்த கண்ணன், வகுப்பறையின் கடைசி இருக்கையில் தலையைப் பிடித்தபடி அமர்ந்து கொண்டார்.

ALSO READ:  வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

சம்பவம் குறித்து அறிந்த செங்கம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆசிரியர் கண்ணனுக்கு செங்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தொடர்ந்து மாணவியின் உறவினர்கள், தலைமை ஆசிரியர் சாந்தகுமாரின் அறைக்குச் சென்று முற்றுகையிட்டனர். அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தார் தலைமை ஆசிரியர்! இதுகுறித்து மாவட்ட கல்வி அதிகாரி, உள்ளிட்ட அதிகாரிகள், தலைமை ஆசிரியரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

Topics

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

ஜூலை 28 செவ்வாய் அன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா, வேந்தரான தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் தலைமையில் நடைபெற்றது.

Entertainment News

Popular Categories