March 15, 2025, 10:24 PM
28.3 C
Chennai

அதிபர் தேர்தல் விறுவிறு: இலங்கையில் மக்கள் ஆர்வத்துடன் வாக்குப்பதிவு!

இலங்கையின் தற்போதைய அதிபர் சிறீசேனாவின் பதவிக்காலம் வரும் ஜனவரி மாதம் 9-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதனால் அடுத்த அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி, பலத்த பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது. அதிபர் தேர்தலில் தங்கள் வாக்குகளை காலை முதலே ஆர்வமாக வாக்காளர்கள் அளித்து வருகின்றனர்.

அதிபர் பதவிக்கான தேர்தல் களத்தில் 35 வேட்பாளர்கள் உள்ளனர். இவர்களில், முன்னாள் அதிபர் ராஜபட்சவின் சகோதரரும், முன்னாள் பாதுகாப்பு அமைச்சருமான கோத்தபய ராஜபட்ச (வயது 70), முன்னாள் அதிபர் பிரேமதாசாவின் மகனான சஜித் பிரேமதாசா (52) ஆகியோருக்கிடையேதான் முக்கியப் போட்டி நிலவுகிறது.

இந்தத் தேர்தலில் முன்னாள் அதிபர் ராஜபட்ச, வேட்பாளர்கள் கோத்தபய ராஜபட்ச, , சஜித் பிரேமதாசா உள்ளிட்டோர் காலையிலேயே சென்று வாக்களித்துவிட்டனர். காலை 10 மணி நிலவரப்படி 30 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவாகின. இந்தத் தேர்தலில் 80 முதல் 85 சதவீதம் வரை வாக்குகள் பதிவாகலாம் என்று கூறப் படுகிறது.

15.9 மில்லியன் வாக்காளர்கள் வாக்களிக்க, 12,845 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப் பட்டிருக்கின்றன. இங்கே 22 மாவட்டங்கள் உள்ளன.

முன்னதாக, கொழும்புவின் வடக்குப் பகுதியில் 240கி.மீ., தொலைவில் தந்திரிமலே பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட பேருந்துகளில் வாக்களிப்பதற்காக திரட்டிக் கொண்டுவரப்பட்ட இஸ்லாமிய வாக்காளர்கள் மீது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டது.

இன்று மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 5 மணி அளவில், வரிசையில் நிற்கும் வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு, அவர்கள் வாக்களிப்பது உறுதி செய்யப்படும்.

கடந்த 2015ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் 81.5% வாக்காளர்கள் வாக்களித்திருந்தனர்.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு!

பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் வெள்ளி கிழமை மாலை நடை திறக்கப்பட்டது. இன்று காலை பூஜை

வைகை ரயிலுக்கு.. செங்கோட்டையில் இருந்து இணைப்பு ரயில் கிடைக்குமா?

வைகை புறப்பட்டு செல்லும் நேரத்திற்கு முன்னதாக மதுரை செல்லும் வகையில் ரயில் இயக்க பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

பஞ்சாங்கம் மார்ச் 15 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திமுக.,வின் வழக்கமான ஏமாற்று வேலை: பட்ஜெட் குறித்து அண்ணாமலை விமர்சனம்!

ஒவ்வோர் ஆண்டும், ஒரு நாள் கூத்துக்கு அறிவிப்புகளை வெளியிடுவது, திமுக அரசின் பட்ஜெட் சம்பிரதாயம் ஆகிவிட்டது.

வெறும் குறியீட்டுவாதம் மட்டுமல்ல; பிரிவினைவாத உணர்வைப் பரப்பும் ஆபத்தான மனநிலை!

“இது வெறும் குறியீட்டுவாதம் மட்டுமல்ல - இது இந்திய ஒற்றுமையை பலவீனப்படுத்தி, பிராந்தியப் பெருமை என்ற போர்வையில் பிரிவினைவாத உணர்வைப் பரப்பும் ஆபத்தான மனநிலையைக் குறிக்கிறது.”

Topics

பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு!

பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் வெள்ளி கிழமை மாலை நடை திறக்கப்பட்டது. இன்று காலை பூஜை

வைகை ரயிலுக்கு.. செங்கோட்டையில் இருந்து இணைப்பு ரயில் கிடைக்குமா?

வைகை புறப்பட்டு செல்லும் நேரத்திற்கு முன்னதாக மதுரை செல்லும் வகையில் ரயில் இயக்க பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

பஞ்சாங்கம் மார்ச் 15 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திமுக.,வின் வழக்கமான ஏமாற்று வேலை: பட்ஜெட் குறித்து அண்ணாமலை விமர்சனம்!

ஒவ்வோர் ஆண்டும், ஒரு நாள் கூத்துக்கு அறிவிப்புகளை வெளியிடுவது, திமுக அரசின் பட்ஜெட் சம்பிரதாயம் ஆகிவிட்டது.

வெறும் குறியீட்டுவாதம் மட்டுமல்ல; பிரிவினைவாத உணர்வைப் பரப்பும் ஆபத்தான மனநிலை!

“இது வெறும் குறியீட்டுவாதம் மட்டுமல்ல - இது இந்திய ஒற்றுமையை பலவீனப்படுத்தி, பிராந்தியப் பெருமை என்ற போர்வையில் பிரிவினைவாத உணர்வைப் பரப்பும் ஆபத்தான மனநிலையைக் குறிக்கிறது.”

தமிழக பட்ஜெட் 2025: என்ன இருக்கு இதில்?!

வருவாய் பற்றாக்குறை: வரும் நிதியாண்டில் வருவாய் பற்றாக்குறை ரூ.41,634 கோடியாக மதிப்பீடு. - இவ்வாறு தமிழக பட்ஜெட்டில் அறிவிப்புகள் இடம்பெற்றன.

மொழியை முன்வைத்து ஒரு கனவுத் திட்டத்தை நசுக்கி தமிழர்களைப் பாழாக்கும் ‘திராவிடர்கள்’!

இப்படிப்பட்ட எதிர்கால வளமைக்கான மாணவர்களைத் தயார் செய்யும் தொழில்நுட்பம், வசதிகள், ஆசிரியர் திறன், திறன் மேம்பாட்டு வசதிகளைப் புறக்கணித்து,

நாகரீகக் கோமாளிகள்!

கொள்ளை அடிப்பதற்காய் திராவிடர் என்போம்; நெருக்கடி என்றுவந்தால் தமிழர் என்போம்!

Entertainment News

Popular Categories