அதிபர் தேர்தல் விறுவிறு: இலங்கையில் மக்கள் ஆர்வத்துடன் வாக்குப்பதிவு!

sri lanka election - 2026

இலங்கையின் தற்போதைய அதிபர் சிறீசேனாவின் பதவிக்காலம் வரும் ஜனவரி மாதம் 9-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதனால் அடுத்த அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி, பலத்த பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது. அதிபர் தேர்தலில் தங்கள் வாக்குகளை காலை முதலே ஆர்வமாக வாக்காளர்கள் அளித்து வருகின்றனர்.

அதிபர் பதவிக்கான தேர்தல் களத்தில் 35 வேட்பாளர்கள் உள்ளனர். இவர்களில், முன்னாள் அதிபர் ராஜபட்சவின் சகோதரரும், முன்னாள் பாதுகாப்பு அமைச்சருமான கோத்தபய ராஜபட்ச (வயது 70), முன்னாள் அதிபர் பிரேமதாசாவின் மகனான சஜித் பிரேமதாசா (52) ஆகியோருக்கிடையேதான் முக்கியப் போட்டி நிலவுகிறது.

srilanka election - 2026

இந்தத் தேர்தலில் முன்னாள் அதிபர் ராஜபட்ச, வேட்பாளர்கள் கோத்தபய ராஜபட்ச, , சஜித் பிரேமதாசா உள்ளிட்டோர் காலையிலேயே சென்று வாக்களித்துவிட்டனர். காலை 10 மணி நிலவரப்படி 30 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவாகின. இந்தத் தேர்தலில் 80 முதல் 85 சதவீதம் வரை வாக்குகள் பதிவாகலாம் என்று கூறப் படுகிறது.

15.9 மில்லியன் வாக்காளர்கள் வாக்களிக்க, 12,845 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப் பட்டிருக்கின்றன. இங்கே 22 மாவட்டங்கள் உள்ளன.

முன்னதாக, கொழும்புவின் வடக்குப் பகுதியில் 240கி.மீ., தொலைவில் தந்திரிமலே பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட பேருந்துகளில் வாக்களிப்பதற்காக திரட்டிக் கொண்டுவரப்பட்ட இஸ்லாமிய வாக்காளர்கள் மீது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டது.

srilanka elections - 2026

இன்று மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 5 மணி அளவில், வரிசையில் நிற்கும் வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு, அவர்கள் வாக்களிப்பது உறுதி செய்யப்படும்.

கடந்த 2015ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் 81.5% வாக்காளர்கள் வாக்களித்திருந்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

Topics

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

Entertainment News

Popular Categories