அன்று கருணாநிதி பார்த்த பார்வை…! இன்றுவரை வடிவேலுக்கு தொடரும் சோகம்!

vadivelu - 2026

தமிழ்த் திரையுலகில் உச்சத்தைத் தொட்டுக் கொண்டிருந்த நடிகர் வடிவேலுவை, தனது அரசியல் பார்வையினால் கருணாநிதி இழுத்தாலும் இழுத்தார், அன்று முதல் வடிவேலுவின் வாழ்க்கை சின்னாபின்னாமாகி விட்டது.

வாய்ப்புகள் இன்றி, வரும் வாய்ப்புகளும் ஏதேதோ காரணங்களால் தட்டிப் போய், புலம்பிக் கொண்டிருக்கும் நிலைக்கு வந்துவிட்டார் வடிவேலு!

தற்போது, நடிகர் ஆர்.கே.விற்கு தர வேண்டிய ஒரு கோடி ரூபாய் பஞ்சாயத்தால் நடிகர் வடிவேலு நடிப்பதாக இருக்கும் கமல்ஹாசன், அஜித் படங்களுக்கும் சிக்கல் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

‛இம்சை அரசன்’ பட பிரச்னையால் இரண்டு ஆண்டுகளாக புதுப்படங்களில் நடிக்காமல் இருந்த வடிவேலு, பின்னர் நடிப்பதாக இருந்த ‛பேய்மாமா’ படமும் அவருக்குக் கைகொடுக்காமல், யோகிபாபு கைக்கு மாறி விட்டது.

vadivelu 1 - 2026

தற்போது மீண்டும் அவர் புதிய படங்களில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. கமலின் ‛தலைவன் இருக்கிறான்’, அஜித்தின் ‛வலிமை’ படங்களில் வடிவேலு நடிக்க இருக்கிறார் என்று கூறப் பட்டது. அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியாகாவிட்டாலும், அரசல் புரசலாக வெளியானது. இதைக் கேட்டு வடிவேலுவுக்கு நெருங்கிய நண்பர்கள் போன் போடு வாழ்த்துச் சொல்ல, அப்போதே அவர் கொஞ்சம் பொறுங்கப்பா, அதிகாரபூர்வமா வரட்டும் என்று தயங்கியுள்ளார். இது குறித்து செய்தி வெளியானதும், மகிழ்ச்சியில் திளைத்த வடிவேலு ரசிகர்களுக்கு மீண்டும் ஓர் அதிர்ச்சி அளிக்கும் வகையில் தகவல் வெளியானது.

ALSO READ:  காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை... முக்கியத்துவம் என்ன?

‛நானும் நீயும் நடுவுல பேயும்’ படத்திற்காக ரூ.1 கோடி முன்பணமாக வாங்கிக் கொண்டு, வடிவேலு தனது படத்தில் நடிக்கவில்லை என தயாரிப்பாளர் ஆர்.கே., தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார். அதில் அவர் எந்தப் படத்தில் வேண்டுமானாலும் நடிக்கட்டும், நான் தடுக்கவில்லை. ஆனால் எனக்கு வர வேண்டிய ஒரு கோடி ரூபாயைத் திருப்பித் தராவிட்டால் அவர் நடிக்கும் எந்தப் படத்தையும் வெளியிடக் கூடாது என தெரிவித்துள்ளாராம்.

இதனால், வடிவேலு அடுத்து நடிக்க இருக்கும் கமலின் ‛தலைவன் இருக்கிறான்’, அஜித்தின் ‛வலிமை’ படங்களுக்கு சிக்கல் உருவாகி உள்ளது!

தலைவன் இருக்கிறான் படப்பிடிப்பு துவங்காத நிலையில் வடிவேலுவுக்கும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனால் வடிவேலு தரப்பு சோகத்தில் ஆழ்ந்துள்ளது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டாள் திரு ஆடி பூர நந்தவனத்தில் எழுந்தருளல் நிகழ்வு இன்று சனிக்கிழமை விமர்சையாக நடைபெற்றது.

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் கட்சி மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு-மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன் பேசினார்.

உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

உணவுப்பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள் உங்களை வணங்குகிறேன்-சம்பா மிளகாய் மதிப்புக்கு கூட்டப்பட்ட உற்பத்தி நிறுவனமான குளோபல் சில்லி அக்ரோ பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை திறந்து வைத்து

Topics

பஞ்சாங்கம் ஜூலை 20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டாள் திரு ஆடி பூர நந்தவனத்தில் எழுந்தருளல் நிகழ்வு இன்று சனிக்கிழமை விமர்சையாக நடைபெற்றது.

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் கட்சி மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு-மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன் பேசினார்.

உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

உணவுப்பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள் உங்களை வணங்குகிறேன்-சம்பா மிளகாய் மதிப்புக்கு கூட்டப்பட்ட உற்பத்தி நிறுவனமான குளோபல் சில்லி அக்ரோ பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை திறந்து வைத்து

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

Entertainment News

Popular Categories